search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "renovation work"

    • தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டி தர்பார் மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
    • பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவன மாணவர்களுக்கு களப்பயிற்சி நடந்து வருகிறது.

    இந்த பயிற்சியை தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் பார்வையிட்டார். பின்னர் தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டி தர்பார் மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-மதுரை திருமலை நாயக்கர் மகால், தரங்கம்பாடி கோட்டை, கவர்னர் மாளிகை என தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் ரூ. 25 கோடி மதிப்பில் புராதன கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சை அரண்மனை வளாக மராட்டா தர்பார் மண்டபம், சர்ஜா மாடி ஆகிய இடங்களில் பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலம் அருகே சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டனர்.
    • காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி அளித்தது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத கன மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 1½ லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றது.

    இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், ஏரிகள், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் பல்வேறு குளங்க ளில் உடைப்பும் ஏற்பட்டது.

    தூத்துக்குடி, கோரம் பள்ளம் உடைந்ததால் மாநகரில் உள்ள ஆயிரக் கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதே போல் இரு மாவட்டங்களில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி அளித்தது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 515 பாசன குளங்களில் 720-க்கும் மேற்பட்ட இடங்களில் மதகுகள் உடைந்து சேதம் அடைந்தது.

    இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கியது. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தினர்.

    மீட்பு பணிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டனர்.

    எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்ட தால் 4 டி.எம்.சி. தண்ணீர் பாயந்தோடியது. வழக்கமாக குளத்தில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படும் நிலை யில் 46 ஆயிரம் கன தண்ணீர் அங்கிருந்து சென்றது.

    இதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட நீர்வளத்துறை என்ஜினீயர்கள் இந்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இரண்டு மாவட்டங்களிலும் உடைப்பு ஏற்பட்ட 720 பகுதிகளில் மதகுகளை சீரமைக்கும் பணிகளில் தலைமை பொறியாளர்கள் பிரிவில் உள்ள 3 மூத்த அதிகாரிகள் தலைமையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அவர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எந்திரங்களை கொண்டு சீரமைப்பு பணிகளை இரவு- பகலாக நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில் அனைத்து பணிகளையும் நாளைக்குள் (வெள்ளிக் கிழமை) முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்தையா கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சராசரி மழை அளவு 650 மில்லி மீட்டர். ஆனால் டிசம்பர் 15-ந்தேதிக்குள் ஆண்டு மழையில் 75 சதவீதம் பெய்துள்ளது.

    டிசம்பர் 17-ந்தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிகளவு கனமழை பெய்தது.

    இந்த மாவட்டத்தில் சராசரியாக 36 சென்டி மீட்டர் பதிவானது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் 1½ லட்சம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    தாமிரபரணியில் காட்டாற்று வெள்ளம் கீழ்நோக்கி பாய்வதற்கு பதிலாக பக்கவாட்டாகவும், இருபுறமும் கரைபுரண்டு ஓடியது. கரைக்கு அப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வழக்கமாக ஆற்றில் மழை நீர் வடிந்து செல்வதை தடுத்து ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தமுள்ள 3 ஆயிரம் குளங்களில் 3-ல் ஒரு பங்கு குளங்கள் மட்டுமே 17-ந்தேதிக்கு முன்பு நிரம்பி இருந்தது. ஆனால் பெரு வெள்ளத்திற்கு பின்னரே அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பின.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் அதிக நீர் இருப்ப தால் குளங்களின் உடைப்புகளை சீரமைத்த பிறகு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • சுற்றுச்சூழல் துறை சார்பில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கப் பட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்கின.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. 102 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது.

    மற்றொருபுறம் சுற்றி உள்ள பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் கலந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை சார்பில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கப் பட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்கின. ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி, கரைகள் கான்கிரீட் கற்களால் பலப்படுத்தப்பட்டது. ஒரு பகுதியில் நடைபாதையும் அமைக்கப்பட்டது.

    இதில் 50 சதவீத பணிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது பணிகள் நடை பெறாமல் முடங்கி கிடக்கின்றன. இதனால் சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளாலும், கழிவு நீராலும் மீண்டும் மாசு அடைய தொடங்கியது.

    இதுபற்றி ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, சுற்றுச்சூ ழல், காலநிலை மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ மற்றும் அதிகாரிகள் சிட்லபாக்கம் ஏரியில் ஆய்வு செய்தனர்.

    இதன்பின்னர் கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கியது. ஆனால் வடக்கு பகுதியில், கரையை பலப்படுத்துதல், நடைபாதை அமைத்தல் பணிகள் மந்தமாக நடந்தன. இதற்கிடையே ஏரி சீரமைப்பு பணி தற்போது மீண்டும் முடங்கி உள்ளது.

    எனவே சிட்லபாக்கம் ஏரியில் கிடப்பில் போடப் பட்டு உள்ள சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே சிட்ல பாக்கம் ஏரியில் நடைபெற்ற சீரமைப்பு பணிகளை முன்னாள் எம்.பி. யும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது, அ.தி.மு.க. ஆட்சியில் சிட்லபாக்கம் ஏரியை மேம்ப டுத்த ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது.

    ஏரியில் பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக வேகமாக நடைபெற்றது. ஆனால் இப்போது இந்தப் பணிகள் எல்லாம் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏரியை சீரமைக்கும் பணியை தொடங்ககோரி பல்வேaறு போராட்டங்கள் நடை பெற்றது. மனித சங்கிலி போராட்டமும் நடந்தது. இந்த பணியை பருவமழைக்கு முன்னர் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    இது தொடர்பாக சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    சிட்லபாக்கம் ஏரியில் சீரமைப்பு பணியை மீண்டும் கிடப்பில் போடாமல் தொடர்ச்சியாக மேற்கொண்டு, முழுமையாக முடிக்க வேண்டும். மேலும், பச்சை மலை பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், சிட்லப்பாக்கம் ஏரிக்கு வந்து சேர வழி ஏற்படுத்த வேண்டும். இத னால் ஏரியில் கூடுதல் தண்ணீர் சேரும். இப்பகு தியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். மேலும் கழிவு நீர், ஏரியில் கலக்காமல் இருக்க, பாதாள சாக்கடையுடன் இணைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மயானத்தை சீரமைத்து புதிதாக கட்டிடப் பணிகள் மேற்கொள்வத ற்காக ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • மேலும் கட்டிடப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கை கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி வருவாய் நிர்வாகத்தில் கேரளம் மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது போடி மெட்டு.

    இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக இங்குள்ள மயானம் சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில் பொது மக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

    அதன் அடிப்படையில் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மயானத்தை சீரமைத்து புதிதாக கட்டிடப் பணிகள் மேற்கொள்வத ற்காக ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கட்டிடப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    புதிதாக கான்கிரீட் தகன மேடை, தியானம் மற்றும் ஓய்வு அறை மற்றும் சுற்றுச்சு வர்கள் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் காளி கண்ணன் ராமசாமி , செயல் அலுவலர் இளங்கோவன், மற்றும் அலுவலக உதவியாளர்கள் சரவணன், சேகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டுபோடி மெட்டு பகுதியில் நடைபெறும் மயான கட்டிட சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் கட்டிடப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கை கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    • பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது.
    • பாசன நிலங்கள் 4 மண்டலமாக பிரித்து இரு ஆண்டுக்கு ஒரு முறை நீர் வழங்கப்படுகிறது.

    உடுமலை:

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன நிலங்கள் 4 மண்டலமாக பிரித்து இரு ஆண்டுக்கு ஒரு முறை நீர் வழங்கப்படுகிறது.

    பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு வந்து 165 கி.மீ., நீளம் உள்ள பிரதான கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.

    பாசன நிலங்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக உள்ள, பிரதான கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத நிலையில் தளம் மற்றும் பக்கவாட்டு கான்கிரீட் சுவர்கள் இடிந்தும், மண் கால்வாயாக பல இடங்களில் மாறியுள்ளது.நீர்க்கசிவு காரணமாக பாசன நிலங்களுக்கு நீர்ப்பற்றாக்குறை மற்றும் மண்டல பாசன காலங்களில் கால்வாய் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பாதித்து வருகிறது.

    திருமூர்த்தி அணை துவங்கி வெள்ளகோவில் வரை, முழுமையாக பிரதான கால்வாயை சீரமைக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 5 இடங்களில் 29.60 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    திருமூர்த்தி அணை அருகே ரூ.3 கோடி ரூபாய் மதிப்பில் பிரதான கால்வாய் கி.மீ., 1.20 முதல் 2.00 கி.மீ., வரை, உடுமலை கால்வாய் பிரியும் பகுதியில், மண் கால்வாயாக மாறியுள்ள பகுதியில் புதிதாக கான்கிரீட் கரை மற்றும் தளம் அமைக்கப்படுகிறது.

    மேலும் பிரதான கால்வாயின் கீழ் அமைத்துள்ள, தளி கால்வாய் சுரங்க வழித்தடம் சிதிலமடைந்த நிலையில் தற்போது சுரங்க கால்வாய் பகுதியில் முழுவதும் கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டு, தற்போது மேல் அமையவுள்ள பிரதான கால்வாய் தளம் மற்றும் கரைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இங்கு 60 சதவீதம் பணிகள் நடந்துள்ளது. அதே போல் பிரதான கால்வாய் கி.மீ., 3 முதல் 3.30 வரை, மொடக்குபட்டி செல்லும் ரோடு பாலம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணியும், தீபாலபட்டி பகுதியில் கரிசல் மண் பூமி காரணமாக ஒட்டுமொத்தமாக சிதைந்துள்ள 4.50 கி.மீ., முதல் 4.80 கி.மீ., வரை உள்ள பகுதியில் ரூ. 8.60 கோடி நிதியில் மறு சீரமைப்பு பணி நடந்து வருகிறது.இப்பகுதிகளில் கரையின் இரு பகுதியிலும் உள்ள மண் முழுவதும் அகற்றப்பட்டு, கம்பி கட்டி கான்கிரீட் அமைக்கும் பணி நடக்கிறது.

    மேலும் கெடிமேடு பகுதியில் கி.மீ., 20.60 முதல் 20.90 வரை உள்ள கால்வாய் சுரங்கபாதை ரூ.1.50 கோடி செலவிலும், ஆலம்பட்டி பகுதியில் உடைந்துள்ள கி.மீ., 32 முதல் 36 வரை மொத்தம் 4 கி.மீ., தூரம் கால்வாய் புதுப்பிக்கும் பணி ரூ.6 கோடி ரூபாய் மதிப்பிலும் நடந்து வருகிறது.

    அதிகாரிகள் கூறுகையில், பிரதான கால்வாயில், திருமூர்த்தி கோட்டத்தில் 3 இடங்களில் கால்வாய் மறு சீரமைப்பு பணி நடந்து வருகிறது. ஆகஸ்டு 15ந்தேதிக்குள் பணியை நிறைவு செய்து 4ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என்றனர்.

    • பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த பணி முடியும் வரை பக்தர்க ளுக்கு ராஜகோபுரம் பகுதி யில் உள்ள கோவில் மண்ட பத்தில் தற்போது அன்ன தானம் வழங்கப்பட்டு வருகி றது குறிப்பிடத்த க்கதாகும்.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் உள்ள டங்கிய கோவில் ஆகும்.

    அதேபோல் இந்த கோவில் பின்பகுதியில் காவேரி பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி பரிகார ஸ்தலம், சுற்றுலா ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    தினசரி இந்த கோவிலுக்கு உள்ளூர் வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து காவிரியில் புனித நீராடி பரிகார பூஜை செய்து பின்னர் சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    அதேபோல் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு இந்து அறநிலைய த்துறை சார்பில் தினசரி அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த அன்னதான மண்டபத்தின் மேற்கூரைகள் சிமெண்ட் சீட்டினால் தற்போது உள்ளதை அப்பு றப்படுத்தி விட்டு புதிதாக ஓடுகள் மேய்ந்து மேற்கூ ரைகள் அமைக்க இந்து சமய அறநிலைத்துறை உத்த ரவு வழங்கியது. இதனைத் தொடர்ந்து 20.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    இந்த பணி முடியும் வரை பக்தர்க ளுக்கு ராஜகோபுரம் பகுதி யில் உள்ள கோவில் மண்ட பத்தில் தற்போது அன்ன தானம் வழங்கப்பட்டு வருகி றது குறிப்பிடத்த க்கதாகும். 

    • சென்னை நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா.
    • பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து உள்ள கிண்டி சிறுவர் பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா. இது சுமார் 22 ஏக்கரில் பரந்து விரிந்து உள்ளது.

    இங்குள்ள பாம்பு பண்ணை, பறவைகள், முதலை பண்ணை உள்ளிட்டவற்றை பார்வையாளர்கள் ரசித்து செல்கிறார்கள். ஆண்டுக்கு 8 லட்சம் முதல் 9 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

    பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து உள்ள கிண்டி சிறுவர் பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கி உள்ளனர்.

    வன உயிரினங்களின் அமைவிடங்கள், இயற்கையாக காடுகளில் உள்ளது போல் உருவாக்கப்பட உள்ளது.

    மேலும் சிறுவர்களுக்கான நூலகம், விழா அரங்கம், பார்வையாளர்களுக்கான வசதி மேம்பாடு, பறவைகள், விலங்குகளின் சிறப்பம்சங்கள், அவற்றின் வாழ்வியல் முறை உள்ளிட்டவற்றை அறிய அவற்றின் இருப்பிடங்களின் அருகில் கியூ ஆர் கோடு அமைத்தல், புதிய உள் கட்டமைப்பு வசதி, டிக்கெட் கவுண்டர், உணவகம், வாகன நிறுத்தும் இடம், உலகத்தரத்தில் அரங்கங்கள், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட இருக்கிறது.

    இந்த சீரமைப்பு பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த சீரமைப்பு பணி தொடர்ந்து 6 மாதங்கள் நடைபெற இருக்கிறது. எனவே கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதங்கள் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளன.

    இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, "கிண்டி சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இயற்கை தோட்டங்கள், நிரூற்றுகள், விலங்குகள் பற்றி அறிய அதன் இருப்பிடத்தில் கியூ ஆர் கோடு அமைக்கப்பட உள்ளது. சீரமைப்பு பணி நடைபெறுவதையடுத்து 6 மாதங்கள் கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படும்" என்றார்.

    • அடிப்படை தேவையான குடிநீர்,கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
    • உழவர் சந்தைகளை புனரமைத்து சீரமைப்பதற்கு ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உழவர் சந்தைகள் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரின்போது திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர், போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படை தேவையான குடிநீர்,கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதை செயல்படுத்தும் விதமாக இப்போது உழவர் சந்தைகளை புனரமைத்து சீரமைப்பதற்கு ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

    இதில் செங்கல்பட்டு உழவர்சந்தைக்கு ரூ.32.10 லட்சம்,வேலூர் காகிதப்பட்டறை உழவர் சந்தைக்கு ரூ.42,72 லட்சம், செங்கம் உழவர் சந்தைக்கு ரூ.32.10 லட்சம், திருச்சி துறையூர் உழவர் சந்தைக்கு ரூ.35 லட்சம், சேலம் எடப்பாடி உழவர் சந்தைக்கு ரூ.43.30 லட்சம், அஸ்தம்பட்டி உழவர் சந்தைக்கு ரூ.4.06 லட்சம் என 25 உழவர் சந்தைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த தொகையை வைத்து அலுவலக அறை புதுப்பித்தல, கழிப்பறை அமைத்தல், மற்றும் குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர் கட்டுதல், மின்னணு சாதனங்கள் பொருத்துதல், வடிகால் மறுசீரமைப்பு நடைபாதை அமைத்தல், சுவர்களில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மறுசீரமைப்பு பணிகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் பணிகளை செய்து வருகிறது.
    • ரெயில் நிலையத்தின் பழைய கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்.

    சென்னை:

    பழமைவாய்ந்த எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.734.91 கோடியில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    இந்த மறுசீரமைப்பு பணிகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் பணிகளை செய்து வருகிறது.

    இதையொட்டி முதல் கட்டமாக ரெயில் நிலையத்தை அளவீடு செய்து காந்தி இர்வின் சாலை அருகே உள்ள ரெயில்வே குடியிருப்புகள், பின்புறம் பூந்தமல்லி சாலையில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான குடியிருப்புகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து ரெயில்வே கட்டிட சிவில் என்ஜினீயர் ஒருவர் கூறியதாவது:-

    மறுசீரமைப்பு பணிக்காக வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காந்தி இர்வின் சாலையில் அதிகாரிகள், ஊழியர்கள் என 45 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி சாலையில் 120-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    அடுத்தகட்டமாக மற்ற அலுவலக கட்டிடம் இடிக்கப்படும். இந்த பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக கட்டிட பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டுவிட்டது.

    1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டரில் கட்டிடம் அமைய உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் 3 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    பயணிகள் வருகை, புறப்பட்டு செல்வதற்கான தனி இடமும், நடை மேம்பாலம், காத்திருப்பு அறை, வாகன காப்பகங்கள், நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளது.

    ரெயில் நிலையத்தின் பழைய கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும். மல்டி பிளக்ஸ் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் தற்போதுள்ள ரெயில்வே பார்சல் பகுதி ரெயில்வே கட்டிடமாகவும் மாற்றப்படுகிறது. எதிர் காலங்களில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு கட்டிட பணிகள் நடந்து வருகிறது.

    இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் தடையின்றி பயணிகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி உள்பட விமான நிலையத்தை போல அனைத்து வசதிகளுடன் அமைய உள்ளது. இந்த பணிகள் 3 வருடத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    • ராமையன்பட்டி பஞ்சாயத்தின் தலைவராக டேவிட் என்பவரும், துணைத் தலைவராக செல்வகுமார் என்பவரும் உள்ளனர்.
    • துணைத்தலைவர் மற்றும் மாரியப்பபாண்டியன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் ராமையன்பட்டி பஞ்சாயத்து 12 வார்டுகளை கொண்டது. இந்த பஞ்சாயத்தின் தலைவராக டேவிட் என்பவரும், துணைத் தலைவராக செல்வகுமார் என்பவரும் உள்ளனர்.

    கூட்டம்

    இந்நிலையில் இன்று பஞ்சாயத்து அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் டேவிட் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் துணைத் தலைவர் செல்வக்குமார், 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்பபாண்டியன் உள்பட 5 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது பஞ்சாயத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிநீர் பொருத்துதல் மற்றும் வார்டுகளில் ஜே.சி.பி. எந்திரம் வைத்து சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    அதற்கான செலவுகளை கூட்டத்தில் தீர்மானம் வைக்காமல் தலைவர் தன்னிச்சையாக நிறைவேற்றி வருதாக துணைத்தலைவர் செல்வ க்குமார், உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வெளிநடப்பு

    இதனைத் தொடர்ந்து துணைத்தலைவர் மற்றும் மாரியப்பபாண்டியன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், பஞ்சாயத்து தீர்மானத்தில் பணிகள் குறித்த தகவல் வைக்காமலும், வார்டு உறுப்பினர்களுக்கும் தெரியாமல் வேலை நடந்ததாக கூறி செலவு செய்யப்பட்டதாக பணத்தினை எடுத்துக் கொள்கின்றனர். இதில் ஊழல் நடைபெற்று வருவதால் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றனர்.

    அப்போது திடீரென மாரியப்பபாண்டியன் தரையில் படுத்து உருண்டவாறு தலைவரை கண்டித்து கோசம் எழுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராமநாதபுரத்தில் எரிவாயு தகன மேடை புதுப்பிக்கும் பணியை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
    • அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி யில் அல்லிக்கண்மாய் பகுதியில் எரிவாயு தகன மேடை உள்ளது. கடந்த சில மாதங்களாக தகன மேடையில் எரிவாயு மூலம் சடலங்களை எரியூட்டும் எந்திரம் பழுதாகி விட்டது.

    இதனால் சடலங்கள் திறந்தவெளியில் விறகு களால் எரியூட்டப்பட்டு வருகிறது. மழை பெய்யும் காலங்களில் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகாா் எழுந்தது.

    அதையடுத்து எரிவாயு தகன மேடையை ரூ.49 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தகன மேடை புதுப்பிப்பு பணிகளை நகராட்சித் தலைவா் காா்மேகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

    அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா். இதை தொடர்ந்து ராமநாத புரம் சட்டமன்ற உறுப்பி னர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் அறிவுறுத்த லின்படி ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட ஊரணிகளை வைகை தண்ணீர் கொண்டு நிரப்பு வதற்கு பெரியகண்மாய் வரத்து கால்வாய்களை தூர்வாறும் பணியினை நகர்மன்ற தலைவர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

    • கோவில் மிகவும் பழுதடைந்து காண ப்பட்டதால் கோவிலை புனரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • முதல் கட்டமாக ரூ.1 கோடி மதிப்பில் புதிய கொடிமரம், புதிய தேர் செய்யவும், 700 மீட்டரில் சுற்றுசுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் திருமூலநாதர் எனும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையானது.

    கோவில் மிகவும் பழுதடைந்து காண ப்பட்டதால் கோவிலை புனரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வல்லநாடு திருமூலநாதர் கோவில் சீரமைப்பு பணிக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மேலும் இக்கோ விலுக்காக தன்னா ர்வலர்கள் இணைந்து ரூ.2 கோடி செலவு செய்ய முன் வந்துள்ளனர். எனவே ரூ.3 கோடி ரூபாய் செலவில் கோவில் சீரமைப்பு பணி தொடங்க உள்ளது.

    இதற்காக முதல் கட்டமாக ரூ.1 கோடி மதிப்பில் புதிய கொடிமரம், புதிய தேர் செய்யவும், 700 மீட்டரில் சுற்றுசுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள ரூ.1 கோடியை கொண்டு கோவில் பணிகளை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த நிலையில் வல்லநாடு திருமூலநாதர் திருக்கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. சுப்பிரமணியன், தாசில்தார் ராதாகிருஷ்ணன், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, பாக்கியலீலா, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, பாரதி பள்ளி தாளாளர் சங்கரலிங்கம், வட வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் பேபி சங்கர், நங்கமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

    வல்லநாடு திருமூலநாதர் கோவிலில் ரூ.3 கோடி செலவில் திருப்பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்த காட்சி.

    ×