என் மலர்
நீங்கள் தேடியது "ராஜகோபுரம்"
- திருச்செந்தூர் - திருநெல்வேலி வழியில், திருச்செந்தூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திரு நகரி என்ற ஊர் உள்ளது.
- திருச்செந்தூரிலோ சுவாமிகளைக் காணாமல் பக்தர்களும் மக்களும் தவித்தனர்.
திருச்செந்தூர் முருகன் ஆலயத்தை சீரமைத்து புதுப்பித்து கட்டியதில் தேசிக சுவாமிகள், மவுன சுவாமிகள், காசி சுவாமிகள், ஆறுமுக சுவாமிகள், வள்ளி நாயக சுவாமிகள் ஆகிய 5 பேரும் முக்கிய பங்கு வகித்தனர் என்பதை கடந்த வாரம் பார்த்தோம்.
இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் மற்றும் அதன் அருகிலேயே அமைந்து உள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம். முதலில் திருச்செந்தூர் ஆலய ராஜகோபுரத்தை கட்டிய தேசிக மூர்த்தி சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்து இருக்கும் பகுதியை பார்க்கலாம்.
திருச்செந்தூர் - திருநெல்வேலி வழியில், திருச்செந்தூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திரு நகரி என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் உள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்தில் வீற்றிருக்கும் காந்தீஸ்வரம் கோவிலின் நந்தவனம் பகுதியில் தேசிக மூர்த்தி சுவாமிகளின் ஜீவ சமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
தேசிக மூர்த்தி சுவாமிகள் திருச்செந்தூர் ராஜகோபுரத்தை கட்டி முடித்ததும் அவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் முருகப்பெருமானின் விருப்பம் வேறுவிதமாக இருந்தது. சுவாமிகளின் கனவில் முருகப் பெருமான் தோன்றி, "தேசிக மூர்த்தியாரே தாங்கள் இங்கிருந்து கும்பாபிஷேகத்தைக் காண வேண்டாம். எங்கிருந்து வந்தீரோ, அந்த இடத்துக்குச் சென்று மனக்கண்களால் கும்பாபிஷேகத்தைக் கண்டு மகிழும்" என்றார்.
அதை ஏற்று தேசிகமூர்த்தி சுவாமிகள் முன்பு தங்கியிருந்த ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் சிவாலயம் அருகில் உள்ள மடத்திலேயே தங்கினார். அங்கிருந்தபடி மனக்கண்களால் கும்பாபிஷேக வைபவத்தை தரிசித்து மகிழ்ந்தார்.
திருச்செந்தூரிலோ சுவாமிகளைக் காணாமல் பக்தர்களும் மக்களும் தவித்தனர். அதேநேரம் அவர்களின் கண்களுக்கு, ராஜகோபுரத்தில் சுவாமிகள் காட்சி தந்து மறைவது போல் தெரிந்தது. எல்லோரும் சிலிர்த்துப்போனார்கள். இன்றைக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் வள்ளியம்மை சந்நிதித் தூண் ஒன்றில் சிற்பவடிவில் சுவாமிகளின் திருவுருவைக் காணலாம். சுவாமிகளை ஞானதேசிக மூர்த்தி சுவாமிகள் என்று பக்தர்களும் மக்களும் போற்றுகிறார்கள்.
பிற்காலத்தில் சுவாமிகள் சமாதி அடைந்ததும் காந்தீஸ்வரத்திலேயே அவருக்கு ஜீவ சமாதி அமைக்கப்பட்டது. திருச்செந்தூர்- திருநெல்வேலி மார்க்கத்தில் உள்ள ஆழ்வார் திருநகரிக்கு வரும் பக்தர்கள், அங்கே சங்கு மண்டப நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் ஆற்றுப்பாலம் உள்ளது. அதன் வழியே பயணித்து ஆற்றுக்கு எதிர்க்கரையில் இருக்கும் காந்தீஸ்வரத்தை அடையலாம்.
இங்கே சுவாமிகள் தங்கியிருந்த மடம், ஈஸ்வரன் திருக்கோவில் ஆகியவற்றையும் தரிசிக்கலாம். அருகிலேயே சுவாமிகளின் சமாதிக் கோவிலும் அமைந்து உள்ளது. இன்றைக்கும் பக்தர்கள் விரும்பிய வரங்களைத் தரும் அருள் அலைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது சுவாமிகளின் சமாதித் திருக்கோவில்.

சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தால், அதன் மேல் லிங்கம் வைத்து கோவில் கட்டுவது வழக்கம். ஆனால் இங்கே மூலஸ்தானத்தில் கல்லினால் ஆன திருவாசியுடன் கூடிய வேல் போன்ற அமைப்பில் உள்ளது. இது வேறெங்கும் காண்பதற்கரிய அமைப்பாக உள்ளதால், இங்கு வந்து வழிபடுவதால் விசேஷ பலன்கள் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.
சுவாமிகளின் சமாதித் திருக்கோவிலில் மார்கழி மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது. இங்கு வந்து இந்த சுவாமிகளை வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும், புதிய வீடு கட்டும் வாய்ப்பு கிடைக்கும், வீடு கட்டுவதில் இருக்கும் தடைகள் நீங்கும். திருமணம் முதலான சுபகாரியங்கள் தடையின்றி இனிதே நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காந்தை முனிவர், கருவூரார் என சித்தர்கள் பலரின் அருள் அலைகள் நிரம்பி இருக்கும் தலம் ஆதலால், இங்கு வந்து வழிபடுவோருக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
தேசிகமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதியை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் எளிதில் வந்து செல்ல வசதிகள் உள்ளன. திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் வாகனங்களில் வருபவர்கள் ஆழ்வார்திருநகரில் உள்ள தாமிரபரணி ஆற்று பாலத்தை கடந்து இடது புறம் திரும்பினால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே தேசிகமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதியை அடைந்து விடலாம். இதேபோல் பஸ்களில் வருபவர்கள் ஆழ்வார் திருநகரி பஸ்நிறுத்தத்தில் இறங்கியும் எளிதாக தாமிரபரணி ஆற்றின்வழியாக நடந்து கோவிலை அடையலாம். தற்போது காந்தீஸ்வரம் கோவில் நந்தவனத்தில் யானைகள் பராமரிப்பு மையமும் செயல்படுகிறது. கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இங்குள்ள யானை களையும் வெளியில் நின்றபடி பார்த்து ரசிக்கலாம்.
வேல் மூலம் நிதி திரட்டினார்
திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் கட்டிய தேசிகமூர்த்தி சுவாமிகள் சுமார் 4 அடி உயரம் உள்ள செம்பினால் ஆன ஒரு வேலில் திருச்செந்தூர் கோவில் திருப்பணி செய்து முடிக்க யாசகம் பெறுவதை கையாண்டார். கோவில் திருப்பணிக்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நிதியை தருமாறு முருகப்பெருமானே கேட்பதாக வாசகங்களை அந்த வேலில் பொறித்தார். அதை வீரபாகு என்பவரிடம் கொடுத்து திருப்பணிக்குப் பொருள் யாசகம் பெற்று வரும்படி அனுப்பி வைத்தார்.
வீரபாகுவும் அந்த வேலாயுதத்துடன் சென்று பக்தகோடிகளிடம் திருப்பணிக்குப் பொருள் பெற்று வந்தார். திருப்பணியும் விரைவில் நிறைவேறியது. மிகப்பழமை வாய்ந்த அந்த வேலாயுதம், இன்றைக்கும் திருச்செந்தூர் கீழரத வீதியில் உள்ள திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை திருஆதீன மடத்தில் பாதுகாக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ செந்திலாண்ட வரைத் தரிசிக்க திருச்செந்தூர் செல்லும் அன்பர்கள், அப்படியே மடத்துக்கும் சென்று அற்புதமான அந்த வேலாயுதத்தையும் தரிசித்து வரலாம்.
அடுத்த வாரம் திருச்செந்தூர் ஆலயத்தை சீரமைத்த 4 சுவாமிகள் பற்றியும் திருச்செந்தூர் முருகன் புகழ் பாடிய நொண்டி நாடகம் பற்றியும் பார்க்கலாம்.
- கோவில் உற்சவா் மண்டபத்தில் உள்ள உற்சவா்கள் பாதுகாப்பு அறையில் வைத்தனா்.
- இத்திருப்பணி மாா்ச் 24-ந் தேதி தொடங்கப்படவுள்ளது.
அவினாசி :
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரா் பதிகம் பாடி உயிருடன் மீட்டெடுத்த தலமாகவும் கருணாம்பிகை யம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் விளங்குகிறது.
இக்கோவிலில் திருப்பணிகள் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, கருணாம்பிகையம்மன் ஐந்து நிலை ராஜகோபுரம் திருப்பணிக்காக பாலாலய சிறப்பு பூஜை நேற்று இரவு நடைபெற்றது.
இதில் சா்வசாதகா் சிவகுமாா் சிவாச்சாரியாா் தலைமையிலானோா், தெய்வங்களின் சக்திகளை கும்ப கலசங்களில் கலாஹா்ஷணம் செய்து கண்ணாடியில் ஆவாஹணம் செய்து நித்யபடி பூஜைக்காக கோவில் உற்சவா் மண்டபத்தில் உள்ள உற்சவா்கள் பாதுகாப்பு அறையில் வைத்தனா்.இத்திருப்பணி மாா்ச் 24-ந் தேதி தொடங்கப்பட வுள்ளது.பாலாலய சிறப்பு பூஜையில் கோவில் செயல் அலுவலா் பெரியமருதுபா ண்டியன், ஆய்வாளா் செல்வபிரியா, அவிநாசி வாகிசா் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள், பக்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்
- தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.
- இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழைய பாளையத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர்.
இக்கோவிலை புதுப்பித்து, திருப்பணிகள் செய்து, ராஜகோபுரம் அமைத்து கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின், திருப்பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர், கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
- கிழக்கு ராஜகோபுரத்தில் கோபுர கலசம் வைக்கும் பணி தொடங்கியது.
- நவதானியங்களை கோபுர கலசத்தில் இட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோவில் உள்ளது. திருஞானசம்பந்தர்க்கு, உமையம்மை ஞானபால் வழங்கிய இத்தலத்தில் திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி கோவிலில் உள்ள நான்கு கோபுரங்கள், பிரகாரங்கள், அனைத்து சுவாமி சன்னதிகள், விமானங்கள் புதுப்பிக்கப்பட்டும் கருங்கல் சன்னதி மற்றும் கருங்கல் பிரகாரம் அமைக்கப்பட்டும் திருப்பணிகள் நிறைவு பெற்று வருகிறது.
இக்கோவிலில் உள்ள ருணம் தீர்த்த விநாயகர் விமானத்தில் தர்மபுரம் ஆதீனம் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருகரத்தால் கோபுர கலசம் வைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று கிழக்கு ராஜகோபுரத்தில் கோபுர கலசம் வைக்கும் பணி தொடங்கியது. முன்னதாக கோபுர கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு செய்யப்பட்டு கிழக்கு ராஜகோபுர திருப்பணி உபயதாரர் மார்கோனி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் பக்தர்கள் நவதானியங்க ள்கோபுர கலசத்தில் இட்டு கலசத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்னர் கோபுர கலசங்கள் கிழக்கு ராஜகோபுரத்தில் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தகவல்
- கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட அறங்கா வலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர் பகவதி அம்மன் சன்னதியில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அதன்பிறகு கோவிலை ஆய்வு செய்த அவர், கோவிலில் நடைபெறும் அன்னதான திட்டம் எப்படி நடைபெறுகிறது என்று நேரில் பார்வையிட்டார். அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை சாப்பிட்டு ருசித்துப் பார்த்தார்.
ஆய்வு முடிந்த பிறகு அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் கோவில்களுக்கு உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசிடம் வலியுறுத்துவேன். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 10ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. இன்னும் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. இதுபற்றி தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்திக்கும் போது வலியுறுத்துவேன். பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கண்டிப்பாக தேவையான ஒன்று. இது தொடர்பாகவும் பேசி ராஜகோபுரம் கட்ட ஏற்பாடு செய்வேன்.
குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்துக்கு கீழ் உள்ள முக்கியமான கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் யானை பயன்படுத்தப் பட்டு வருகிறது. தற்போது தேவசம் போர்டு நிர்வாகத்துக்கு சொந்தமான யானை இல்லாததால் வாடகைக்கு யானை அமர்த்தி திருவிழா காலங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இது குறித்து முதல்-அமைச்சர் மற்றும் அறநிலை யத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமாக யானை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் அமர்ந்து இளைப்பாருவதற்கு வசதியாக திருச்செந்தூர் கோவிலில் இருப்பது போல சுற்றுப்பிரகார மண்டபம் கட்டுவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சேதம் அடைந்த தேர்கள் மற்றும் வாகனங்களை சீரமைப்ப தற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி அடுத்த ஆண்டு தெப்பத் திருவிழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவினாசியில் கொங்கு லிங்கேஸ்வரர் கோவில். ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது.
- அவினாசிலிங்கேஸ்வரர் ஏழுநிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர்.
அவினாசி, ஆக.2-
அவினாசியில் கொங்கு லிங்கேஸ்வரர் கோவில். ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது. இங்கு ஸ்ரீ கருணாம்பிகை உடனமர்அவினாசி லிங்கேசஸ்வரர் அமைந்து ள்ளார். இக்கோவில் கும்பாபி ஷேகம் நடத்துவதற்காக திருப்பணி நடைபெற்று வருகிறது. அதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி கோவிலில் உள்ள பரிவார சன்னதி விமானங்களுக்கு ஹோமம் நடத்தி பாலாலயம் செய்யப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக அவினாசிலிங்கேஸ்வரர் ஏழுநிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர். அதன்படி நாளை 4ந்தேதி காலை 9 மணியளவில் சிறப்பு வழிபாடு, ஹோமம் மற்றும் பாலாலயம் நடைபெற உள்ளது.
- கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது
- பிரபா ராம கிருஷ்ணன் சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானஉள்நாட் டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும்வந்துஅம்மனை தரிசனம் செய்துவிட்டுசெல் கிறார்கள்.
இந்தகோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி அஸ்திவாரத்தோடு நின்று போய் விட்டது. ராஜகோபுரம் கட்டுமான பணி நின்று போய் பல நூற்றாண்டுகளை கடந்து விட்டதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது.
எனவே இந்த கோவிலுக்குமிகப் பிரம்மாண்டமானவகையில் ராஜகோபுரம் கட்டவேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்கான முயற்சிகள் பல கட்டமாக எடுக்கப்பட்டு கடைசியில் தோல்வியில் முடிந்ததுஉள்ளது.
கடைசியாக கடந்தசிலஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் வடக்கு பக்கம் உள்ள பிரதான நுழைவு வாசல் மற்றும் கோவிலின் கிழக்குப் பக்கம் கடற்கரையையொட்டி அமைந்துள்ள கிழக்கு வாசல் ஆகிய இடங்களில் இரட்டை ராஜகோபுரம் கட்டுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன. அந்த இரட்டைராஜகோபுரம் கட்டும் பணியும் முதல்கட்ட ஆய்வோடு கிடப்பில் போடப்பட்டது.
இந்தநிலையில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் தி.மு.க.அரசு பொறுப் பேற்ற பிறகு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற் கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இது சம்பந்தமாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம்கட்டநடவடிக் கை மேற்கொள்ளும்படி அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன் பயனாக குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் அறிவுரையின் பேரில் நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை ஸ்தபதி செந்தில், குமரிமாவட்ட திருக்கோவில்களின் மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், அறநிலையத்துறை சர்வேயர் அய்யப்பன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவது தொடர்பாக ஏற்கனவே கட்டப்பட்டு பாதியில் நின்று போன ராஜகோபுரத்தின் அஸ்திவார பகுதியை நிலஅளவீடு செய்து முதல் கட்டபூர்வாங்க பணியை தொடங்கினர்.
இந்த புதிய ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்தில் அமைய உள்ளது.
- ராஜ கோபுரத்தின் அஸ்திவார பகுதி நில அளவீடு செய்து முதல் கட்ட பூர்வாங்க பணி தொடங்கப்பட்டது.
- ராஜகோபுரத்துக்கான கல்காரத்தின் ஸ்திரத் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜ கோபுரம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. எனவே இந்த கோவிலுக்கு மிக பிரம்மாண்டமான வகை யில் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஏற்கனவே கட்டப்பட்டு பாதியில் நின்று போன ராஜ கோபுரத்தின் அஸ்திவார பகுதி நில அளவீடு செய்து முதல் கட்ட பூர்வாங்க பணி தொடங்கப்பட்டது. அங்கு வளர்ந்திருந்த மரங்கள் வெட்டிஅகற்றப்பட்டன. ராஜகோபுரத்துக்கான கல்காரத்தின் ஸ்திரத் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்தியாவிலேயே மிக உயரமான ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை கட்டிய சிவப்பிரகாசம் ஸ்தபதியின் மகனும் அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்தபதியுமான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆனந்த் ஸ்தபதி, இந்து அறநிலையத்துறை மண்டல ஸ்தபதி செந்தில் ஸ்தபதி ஆகியோர் நேரில் பார்வை யிட்டு இந்த ஆய்வு பணி களை மேற்கொண்ட னர். இந்த ஆய்வின் போது நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பேட்டி
- 490 கோவில்களுக்கும் அவர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு சுசீந்திரம் திருக்கோயில்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோவில்கள் என 490 கோவில்களுக்கும் அவர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
அங்கு செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சென்னையில் அமைச்சர் சேகர் பாபுவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது குமரி மாவட்டத்தில் திருக்கோயிலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அவர் எடுத்துக் கூறினார். மேலும் ஆயுதபூஜையை யொட்டி பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படும் உடைவாள் மாற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதாக உறுதி அளித்தார். தொடர்ந்து 490 கோவில்களில் ஆய்வு செய்த போட்டோக்களை பிரபா ராமகிருஷ்ணன், அமைச்சர் சேகர்பாபுவிடம் காண்பித்தார். அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள் 490 கோவில்களை ஆய்வு செய்த பிரபா ராமகிருஷ்ணனை அமைச்சர் சேகர் பாபு பாராட்டினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, ஜோதிஷ்குமார், துளசிதரன் ஆகியோரும் உடன் இருந்தனர். தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரையும் அறங்காவல் குழு சந்தித்தது.
இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் திருக்கோவில்கள் கட்டுப்பாட்டில் உள்ள 490 கோவில்களையும் நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். கோவில்களில் பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவரும் ஒரு மாத காலத்திற்குள் அதற்கான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் சில கோவில்களை புரணமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.அதற்கான நடவடிக்கை எடுக்கப்ப டுவதாக உறுதி அளித்தார். குமரி மாவட்டத்தில் அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இந்த கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக் காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம் அதேபோல மாலை 4 மணிக்கு திறக்கப் பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பெருந்திருவிழா, நவராத்திரி பரிவேட்டை திருவிழா, ஆடி அமாவாசை, தைஅமாவாசை, திருக்கார்த் திகை தீபத்திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்று போன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியைமீண்டும் தொடங்கஇந்துஅறநிலைய த்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
இதற்கிடையில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற பிரபா ராமகிருஷ்ணன் சென்னையில் அறநிலைய துறைஅமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். அதன் பயனாக தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதில் முதல் கட்டமாக ஸ்ரீரங்கம் சிற்பி சமீபத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து ராஜகோபுரம் கட்டுவதற்கான அஸ்திவார ஸ்ரத்தன்மையை ஆய்வு செய்து உள்ளார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அஸ்தி வரத்தோடு நின்று போன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க லாமா? என்பது குறித்து வருகிற 17-ந்தேதி கேரளா வில் இருந்து நம்பூதிரிகளை வரவழைத்து தேவ பிரசன்னம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கானஏற்பாடுகளை குமரிமாவட்டதிருக்கோவில்களின் இணைஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழுதலைவர் பிரபாராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதரன்நாயர், ஜோதீஸ் வரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
- சுகப்பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல்.
- பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல்.
ஸ்ரீகாளஹஸ்தி:
ஆயிரம் லிங்கா கோணா கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தலைமை தாங்கினார். முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி பங்கேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வருமாறு:-
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான தர்மராஜா கோவில் அருகில் காலியாக உள்ள பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்க 2 திருமண மண்டபங்களை கட்டுவது.
வெயிலிங்கால கோணா (ஆயிரம் லிங்கா கோணா) கோவிலில் புதிய கோபுரம் கட்டி மகா கும்பாபிஷேகம் நடத்துவது.
சுகப் பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல், பக்தர்களின் வசதிக்காக ஞானப்பிரசுனாம்பிகா சதன் முதல் பரத்வாஜ் சதன் வரை சாலை அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்துதல்.
சொர்ணமுகி ஆற்றில் ராம-சேது பாலத்துக்கும் புதிய பாலத்துக்கும் இடையே உள்ள பகுதியில் கிழக்கு நோக்கிய சூரியநாராயணமூர்த்தி உருவச்சிலை, மேற்கு நோக்கிய கால பைரவர் சிலை ஏற்பாடு செய்தல்.
ஜல விநாயகர் கோவிலின் முன் தெற்கு நோக்கிய குரு தட்சிணாமூர்த்தி சிலையை அமைத்தல். பக்த கண்ணப்பர் மலையில் கட்டப்பட்டுள்ள சிவன்-பார்வதி சிலைகளை சுற்றி மலர் செடிகளை நடுதல்.
சாமியின் நெப்பல மண்டபத்தையொட்டி உள்ள நகராட்சி வணிக வளாகத்துக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம், அதைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் சன்னதியில் வரலட்சுமி விரதம், கோதா தேவி கல்யாணம், சீதா-ராம கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தென்மேற்கு பகுதியில் மண்டபம் அமைத்தல்.
பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரம் புதிதாக கட்டுவது.
பெத்தக்கன்னலியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவில் என்பதை பக்தர்கள் அறியும் வகையில் பிரதான சாலையில் வளைவு அமைத்தல்.
கனகதுர்காதேவி நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, பிரசாதம் வழங்க மலையின் உச்சியில் சமையல் அறை அமைப்பது. அஞ்சூரு மண்டபம் முதல் துபான் சென்டர் வரை, சுற்று வட்டாரக் கிராம மக்களின் விருப்பம் மற்றும் கோரிக்கையின் படி சாமி, அம்பாளுக்கு ஆரத்தி எடுக்க நிரந்தரமாக நான்கு ஓய்வு மண்டபங்கள் கட்டுதல்.
பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல். கோவிலுக்குள் வாகன மண்டபம் மற்றும் ஆச்சார்யா மண்டபம் நவீன மயமாக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- இன்று காலை தொடங்கியது
- பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
கன்னியாகுமரி, செப்.17-
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பெருந்திரு விழா, நவராத்திரி பரிவேட்டை திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, திருக்கார்த்திகை தீபத்திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்றுபோன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற பிரபா ராமகிருஷ்ணன் சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பயனாக தற்போது பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
இதில் முதல் கட்டமாக ஸ்ரீரங்கம் சிற்பி சமீபத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து ராஜகோபுரம் கட்டுவதற்கான அஸ்திவார ஸ்ரத்தன்மையை ஆய்வு செய்து உள்ளார். இந்த நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவது குறித்த தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
கோவில் கொலு மண்டபத்தில் நடந்த இந்த தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த 5 நம்பூதிரிகள் பங்கேற்று தேவபிரசன்னம் பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதரன்நாயர், ஜோதீஸ்வரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.






