அவிநாசி கருணாம்பிகையம்மன் கோவிலில் ராஜகோபுரம் பாலாலய சிறப்பு பூஜை

கோவில் உற்சவா் மண்டபத்தில் உள்ள உற்சவா்கள் பாதுகாப்பு அறையில் வைத்தனா்.இத்திருப்பணி மாா்ச் 24-ந் தேதி தொடங்கப்படவுள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி :

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரா் பதிகம் பாடி உயிருடன் மீட்டெடுத்த தலமாகவும் கருணாம்பிகை யம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் விளங்குகிறது.

இக்கோவிலில் திருப்பணிகள் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, கருணாம்பிகையம்மன் ஐந்து நிலை ராஜகோபுரம் திருப்பணிக்காக பாலாலய சிறப்பு பூஜை நேற்று இரவு நடைபெற்றது.

இதில் சா்வசாதகா் சிவகுமாா் சிவாச்சாரியாா் தலைமையிலானோா், தெய்வங்களின் சக்திகளை கும்ப கலசங்களில் கலாஹா்ஷணம் செய்து கண்ணாடியில் ஆவாஹணம் செய்து நித்யபடி பூஜைக்காக கோவில் உற்சவா் மண்டபத்தில் உள்ள உற்சவா்கள் பாதுகாப்பு அறையில் வைத்தனா்.இத்திருப்பணி மாா்ச் 24-ந் தேதி தொடங்கப்பட வுள்ளது.பாலாலய சிறப்பு பூஜையில் கோவில் செயல் அலுவலா் பெரியமருதுபா ண்டியன், ஆய்வாளா் செல்வபிரியா, அவிநாசி வாகிசா் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள், பக்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com