search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.20 கோடியில் சீரமைப்பு- கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதம் மூடப்படுகிறது
    X

    ரூ.20 கோடியில் சீரமைப்பு- கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதம் மூடப்படுகிறது

    • சென்னை நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா.
    • பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து உள்ள கிண்டி சிறுவர் பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா. இது சுமார் 22 ஏக்கரில் பரந்து விரிந்து உள்ளது.

    இங்குள்ள பாம்பு பண்ணை, பறவைகள், முதலை பண்ணை உள்ளிட்டவற்றை பார்வையாளர்கள் ரசித்து செல்கிறார்கள். ஆண்டுக்கு 8 லட்சம் முதல் 9 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

    பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து உள்ள கிண்டி சிறுவர் பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கி உள்ளனர்.

    வன உயிரினங்களின் அமைவிடங்கள், இயற்கையாக காடுகளில் உள்ளது போல் உருவாக்கப்பட உள்ளது.

    மேலும் சிறுவர்களுக்கான நூலகம், விழா அரங்கம், பார்வையாளர்களுக்கான வசதி மேம்பாடு, பறவைகள், விலங்குகளின் சிறப்பம்சங்கள், அவற்றின் வாழ்வியல் முறை உள்ளிட்டவற்றை அறிய அவற்றின் இருப்பிடங்களின் அருகில் கியூ ஆர் கோடு அமைத்தல், புதிய உள் கட்டமைப்பு வசதி, டிக்கெட் கவுண்டர், உணவகம், வாகன நிறுத்தும் இடம், உலகத்தரத்தில் அரங்கங்கள், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட இருக்கிறது.

    இந்த சீரமைப்பு பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த சீரமைப்பு பணி தொடர்ந்து 6 மாதங்கள் நடைபெற இருக்கிறது. எனவே கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதங்கள் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளன.

    இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, "கிண்டி சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இயற்கை தோட்டங்கள், நிரூற்றுகள், விலங்குகள் பற்றி அறிய அதன் இருப்பிடத்தில் கியூ ஆர் கோடு அமைக்கப்பட உள்ளது. சீரமைப்பு பணி நடைபெறுவதையடுத்து 6 மாதங்கள் கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படும்" என்றார்.

    Next Story
    ×