search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delta district"

    • பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
    • கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயை, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் சந்தித்து டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகி வரும் சம்பா, தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

    பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. காவிரியில் தண்ணீர் திறப்பு குறித்து முடிவு எடுக்கிற அதிகாரம் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் நடவடிக்கையாகும். நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு 4 மாவட்ட கலெக்டரிகளின் பரிந்துரையை ஏற்று மேட்டூர் அணை திறப்பதையும், அடைப்பதையும் வாடிக்கையாக பின்பற்றப்படுகிறது.

    தற்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர் பாசன துறையின் நிர்வாக அதிகாரத்திற்குள் தலையிடுவதும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.

    எனவே கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் உதயநிதி கலந்து கொள்கிறார்.
    • மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி யிலும் அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இன்று மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் அவுரித் திடலில் நாகை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டமும், இரவு 7 மணிக்கு மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டமும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு பட்டுக் கோட்டையில் பழஞ்சூர் செல்வம் இல்ல திருமண விழாவிலும், 11 மணிக்கு பரமேஸ்வரன் இல்ல திருமண விழாவிலும் 12 மணிக்கு மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி யிலும் அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் 12.30 மணி அளவில் பட்டுக் கோட்டை கோமதி விலாசில் தஞ்சை தெற்கு மாவட்ட முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கும் திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் உதயநிதி பங்கேற்று பேசுகிறார்.

    நாளை மறுநாள் (திங்கட் கிழமை) காலை 11 மணி அளவில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகளின், மாலை 4 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலவலக ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்கும் உதயநிதி அன்று இரவு அரியலூர், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    வருகிற 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணிக்கு விருத்தாச்சலம் கழுதூரில் நடைபெறும் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி கலந்து கொள்கிறார். இதில் கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். அன்று மாலை 4 மணி அளவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெறும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் உதயநிதி கலந்து கொள்கிறார்.

    முன்னதாக இன்று காலையில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மண்டல ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.

    நேற்று தஞ்சை மற்றும் திருவாரூரில் நடந்த தி.மு.க. இளைஞர் அணிசெயல் வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

    • மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

    அந்தக் கடிதத்தில், 'பிப்ரவரி மாதத்தில் (இம்மாதம்) நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் சுமார் ஒரு லட்சம் எக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்து.

    வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி அறுவடை பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பதம் அளவு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

    இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உள்ளது. அதாவது, மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளனர். அதன்பின்பு, மத்தியக்குழு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உரங்களை லிக்யூடாக வழங்க வேண்டும். பேட்டரி ஸ்பிரே வழங்க வேண்டும்
    • திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்ட வேளாண் அலுவலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை காட்டுதோட்டத்தில் உள்ள மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் ஜஸ்டின் வரவேற்று பேசினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினர். அப்போது திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்ட வேளாண் அலுவலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உரங்களை லிக்யூடாக வழங்க வேண்டும். பேட்டரி ஸ்பிரே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை மீண்டும் அறிவித்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

    தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு அதிகம் உள்ளதால், 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டால் பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் பதில் அளித்துள்ளார். #GajaCyclone #TamilNaduBypolls
    புதுடெல்லி:

    தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் கஜா புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. 

    தற்போது கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால், குறித்த காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் குறித்து டெல்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. இதற்காக தமிழக அரசு கடிதம் எழுதினால் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிப்போம். புயல் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

    தேர்தலை தள்ளி வைக்கும்படி கடிதம் எழுதவில்லை என்றாலும், ஆணையமே தமிழக அரசிடம் கருத்து கேட்கும். தமிழக அரசு தனது கருத்துக்களை தெரிவிக்க 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும். அதன்பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TamilNaduBypolls
    டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயல் சேத பாதிப்பு அதிகமாகவே உள்ளது என்று மத்தியக்குழு தலைவர் டேனியல் தெரிவித்துள்ளார். #CentralCommittee #gajacyclone #stormdamage

    நாகப்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயல் சேத பாதிப்புகளை மத்திய குழு தலைவர் டேனியல் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். நேற்று தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.

    அப்போது தென்னை விவசாயிகள், வீடுகளை இழந்த மக்கள் மத்திய குழுவினரிடம் கண்ணீர் மல்க வேதனையை தெரிவித்தனர்.

    இன்று 3-வது நாளாக நாகை மாவட்டத்தில் மத்திய குழுவினர் சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நாகை, வேட்டைகாரனிருப்பு, கோடியக்கரை, புஷ்பவனம், கோவில்பத்து ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது புஷ்பவனம் கிராமத்தில் கடல்நீர் உட்புகுந்தால் அந்த கிராமமே சேறும் சகதியுமாக இருப்பதை பார்த்து மத்திய குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாரிடம், சேறும் சகதியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து மத்திய குழுத்தலைவர் டேனியல் ரிச்சர்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் மிக அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏராளமான தென்னை மரங்கள் விழுந்துள்ளன. விவசாயிகள் வேதனையை கேட்டு அறிந்து கொண்டோம். ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

    கஜா புயல் சேத பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து உள்ளோம். இதை மத்திய அரசிடம் சமர்ப்பித்து கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #CentralCommittee #gajacyclone #stormdamage

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்துக்கு மத்திய அரசு 3 குழுவை அனுப்பி சேதத்தை கணக்கிட வேண்டும் என்று த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். #GajaCyclone #GKVasan
    கும்பகோணம்:

    த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கும்பகோணத்தில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை இன்று அனுப்பி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் இழக்க எதுவும் இல்லை என்ற அளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மனதை புரிந்து கொண்டு அவர்களின் மனநிலைக்கு ஏற்ப நிவாரணம் அறிவிக்க வேண்டும்.



    கஜா புயல் பாதிப்பை கணக்கெடுக்க மத்திய அரசின் ஒரு குழு மட்டும் வந்துள்ளது. மாவட்டத்துக்கு ஒரு குழு வீதம் 3 குழுக்கள் வந்து டெல்டா மாவட்டங்களின் முழுபாதிப்பையும் கண்டறிந்து அதற்கேற்ப நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

    புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்துக்கு டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. வருமானம் முக்கியமா? மக்களின் வாழ்வு முக்கியமா? என்பதை கருத்தில் கொண்டு மாநில அரசு முடிவெடுக்க வேண்டும்.

    மரங்கள், பயிர்கள் சேதமாகி வாழ்வதாரத்தை இழந்த விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு வங்கி கடனை தள்ளுபடி செய்யவேண்டும். நிவாரண பொருட்கள் த.மா.கா.சார்பில் புயல் நிவாரணத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை த.மா.கா. சார்பில் ரூ.45 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பை தனிக்குழு கண்காணித்து உடனடியாக உணவு, தண்ணீர் வசதி செய்து கொடுப்பதுடன் தங்கும் வசதிக்கும் ஏற்பாடு செய்யவேண்டும். மழையால் ஏற்பட்டுள்ள சுகாதாரக் கேடுகளை தவிர்க்க சேதமான வீடுகளுக்கு தார்ப்பாய் வழங்க வேண்டும்.

    தஞ்சை, பாபநாசம் பகுதியில் கடும் மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதற்கு உரிய காலத்தில் வடிகால்களை தூர்வாராமல் விட்டது முக்கிய காரணம் ஆகும். இதற்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.

    தமிழக அரசு மத்திய அரசிடம் புயல் பாதிப்புகளை கூறி உரிய நிவாரணத்தை வாதாடி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #GKVasan

    கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மத்திய குழுவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். முன்னதாக அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யுடன் ஆலோசனை மேற்கொண்டனர். #gajacyclone #CentralCommittee #cycloneeffected
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் ‘கஜா’ புயல் கோரத்தாண்டவமாடியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டி போட்டது.

    புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை மரங்கள், பலா மரங்கள் மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் பரிதவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய குழு சேதப்பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

    அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் நேற்று முன்தினமே சென்னை வந்தனர். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர்.

    இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்துக்கு மத்திய குழுவினர் நேற்று காலை 10.30 மணிக்கு வந்தனர். இதையடுத்து காலை 10.50 மணிக்கு முதல்-அமைச்சர் அறையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. 45 நிமிடங்கள் இந்த கூட்டம் நடந்தது.

    இதில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    அதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் 7 பேரும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து பேசினர். காலை 11.40 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 12.20 மணிக்கு முடிந்தது.

    பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விரிவாக பட்டியலிடப்பட்டது. ஒவ்வொரு துறை வாரியாகவும் ஏற்பட்ட சேதம் குறித்து மத்திய குழுவினருக்கு முதல்- அமைச்சர் தெளிவாக விளக்கினார். மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், குறிப்பாக விவசாயம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது, எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்ன உதவிகள் தேவை என்பது பற்றியும் விளக்கி கூறினார்.

    ‘பவர் பாய்ண்ட்’ மூலமாக துறைவாரியான விவரங்களையும் காட்சிகளோடு பட்டியலிட்டு அதிகாரிகளுக்கு விளக்கி கூறினோம். இதிலிருந்து எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை மத்திய குழுவினர் புரிந்து கொண்டிருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மத்திய குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு மாலை 3.40 மணிக்கு சென்றனர்.

    அங்கு அவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர்கள் கணேஷ் (புதுக்கோட்டை), ராஜாமணி (திருச்சி) மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

    பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 4.15 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் காரில் புறப்பட்டு சென்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் இடமாக குளத்தூர் அருந்ததியர் காலனிக்கு அக்குழுவினர் சென்றனர். அங்கு புயல் தாக்கியதில் 15-க்கும் மேற்பட்ட குடிசைகள் இடிந்து கிடப்பதை ஆய்வு செய்தனர்.

    அவர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கலெக்டர் கணேஷ் ஆகியோர் புயல் பாதிப்பை விளக்கி கூறினர்.

    அப்போது மத்திய குழுவினரை கண்டதும், அங்கு வீடுகளை இழந்த பெண்கள் காலில் விழுந்து கதறி அழத்தொடங்கினர்.

    “அய்யா...புயலால் எங்கள் வாழ்க்கையே போச்சு. இனி என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை. குடிசைகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நீங்கள்தான் வழி சொல்லவேண்டும். கடந்த 9 நாட்களாக மின்சாரம், குடிநீர் இன்றி தவித்து வருகிறோம்” என கண்ணீர் விட்டனர்.

    அவர்களுக்கு ஆறுதல் கூறி தோளில் தட்டிவிட்டு தேற்றிய மத்திய குழுவினர், “உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும், பாதிப்புகளையும் நேரில் கண்டறிவதற்காகத்தான் வந்திருக்கிறோம். யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு நியாயமாக செய்ய வேண்டியதை நிச்சயமாக செய்வோம்” என உறுதி அளித்தனர்.

    அப்போது, உடன் வந்த அமைச்சர், கலெக்டர் ஆகியோரும் ஆறுதல் கூறினர்.

    தொடர்ந்து வடகாடு பரம்மன்நகர், மாங்காடு, கந்தர்வகோட்டை பகுதியில் முதுகுளம் புதுநகர் உள்ளிட்ட இடங்களில் சேதப்பகுதிகளை பார்வையிட்டனர்.

    இறுதியாக கந்தர்வகோட்டை புதுப்பட்டிக்கு சென்று அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி, மாவட்ட முழுவதும் உள்ள சேத விவரங்களையும், என்னென்ன பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் அறிக்கையாக தயார் செய்தனர்.

    இரவு தஞ்சாவூர் புறப்பட்டு சென்ற குழுவினர் அங்குள்ள சங்கம் ஓட்டலில் ஓய்வெடுத்தனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விட்டு மதியம் 1 மணிக்கு மீண்டும் தஞ்சாவூர் திரும்புகிறார்கள். பிற்பகல் 2 மணிக்கு திருவாரூர் செல்கின்றனர்.

    அங்கு மாலை 3.30 மணி முதல் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள். அன்று இரவு நாகப்பட்டினம் சென்று, ஓய்வெடுக்கின்றனர்.

    நாளை (26-ந் தேதி) காலை 7.30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். மதியம் 1 மணிக்கு நாகப்பட்டினத்தில் சிறிது ஓய்வு எடுக்கிறார்கள். பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்து விட்டு, இரவு புதுச்சேரி செல்கின்றனர். #gajacyclone #CentralCommittee #cycloneeffected
    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Deltadistrict #heavyrain
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்கலாம்.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 19 செ.மீ., நாகையில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது.

    தஞ்சை மாவட்டம் பாபநாசம், கும்பகோணம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆகிய இடங்களில் தலா 15 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

    தவிர காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கோவை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வரை (நேற்றுடன்) சராசரியாக 33 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 30 செ.மீ. மழையே பெய்துள்ளது. இது இயல்பை விட 9 சதவீதம் குறைவாகும். சென்னையில் 58 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 32 செ.மீ. மழையே பெய்திருக்கிறது. இது இயல்பை விட 45 சதவீதம் குறைவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Deltadistrict #heavyrain
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களை மீண்டும் அவதிக்குள்ளாக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. #GajaCyclone #DeltaDistricts #HeavyRain
    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களை சூறையாடி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    63 பேரை பலி வாங்கிய அந்த புயல் லட்சக்கணக்கான வீடுகள், மரங்கள், தொலைத்தொடர்பு இணைப்புகள், மின்சார இணைப்புகளை சீர்குலைத்து போட்டு விட்டது. இதனால் டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகிறார்கள்.

    புயல் நிவாரண மற்றும் சீரமைப்புக்கு ரூ.1000 கோடியை ஒதுக்கியுள்ள தமிழக அரசு குடிநீர், உணவு சப்ளை, மின் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை செய்து வருகிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் டெல்டா மாவட்டங்களில் முற்றுகையிட்டு உதவி செய்து வருகிறார்கள். டெல்டா மாவட்டத்தை மீட்டெடுக்க ரூ.15 ஆயிரம் கோடி தேவை என்று பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்துள்ளார்.

    இதையடுத்து கஜா புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு வந்துள்ளது. ஆனால் மத்திய அரசு நிதி தருவதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் மாநில அரசும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களை மீண்டும் அவதிக்குள்ளாக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை முதல் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் முடங்கி உள்ளது. இதில் இருந்து அவர்கள் மீள இன்னும் பல நாட்களாகும் என்ற அவல நிலை உருவாகி உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று கொட்டும் மழையிலும் மின்சார ஊழியர்கள் புயலில் சாய்ந்த மின் கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நெல்லை- திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். தொடர்மழை நீடிப்பதால் நாகை முதல் வேதாரண்யம் வரை பல இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

    அதனை பொருட்படுத்தாமல் 200-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் மின் கம்பங்களை நட்டு மின் இணைப்பை வழங்க முயற்சித்து வருகின்றனர்.

    திருவாரூரில் தொடர்மழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருக்கும் காட்சி.


    தொடர்மழை பெய்து வருவதால் பல வீடுகள் சேதமாகி இடிந்து விழும் அபாய நிலை அதிகரித்துள்ளது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாரசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களிலும் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி உள்ளது.

    நாகை மாவட்டம் கோடியக்காட்டில் உள்ள வனவிலங்கு சரணாலயம் புயல் மற்றும் மழையால் உருகுலைந்து போய் விட்டது. அங்கு வசித்த மான்கள், குரங்குள் உள்ளிட்ட விலங்குகள் பல உயிரிழந்து விட்டன. இதனால் அங்கு நோய் பரவும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தை பொறுத்தவரை மீன்பிடித் தொழில் பிரதானமானது. அங்கு புயல் மற்றும் மழையால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் சேதமாகி விட்டன. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நாகை, வேதாரண்யம், ஆறு காட்டுத்துறை, வெள்ளப் பள்ளம், பூம்புகார், தரங்கம்பாடி, புதுபட்டினம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களில் ஏராளமான வீடுகள் மழையில் சேதமாகி விட்டன. அவர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

    இதேபோல் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் முகாம் வசதி குறைவாக உள்ளதால் மக்கள் சேதமான வீடுகளில் தங்கும் சூழ்நிலை நிலவுவதால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை. தொழிலாளர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். மாணவ- மாணவிகள் புத்தகம், நோட்டு சேதமாகி விட்டதால் பள்ளிக்கு சென்று மீண்டும் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மழையில் பல பள்ளி கட்டிடங்களும் சேதமாகி விட்டன. எனவே மழை நின்ற பின்னரும் அந்த பள்ளிகளில் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம், பேரளம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயி அச்சத்தில் உள்ளனர்.

    டெல் மாவட்டங்களில் புயல் மழைக்கு பல லட்சம் தென்னை மரங்கள், வாழைகள், கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. அரசு நிவாரண பொருட்களை வழங்கிவரும் நிலையில் அவைகளை சென்று வாங்க முடியாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.



    பட்டுக்கோட்டையில் 9 நாட்களாக மின்சாரம் இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இதற்கிடையே தொடர்மழை பெய்து குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் குடைபிடித்து கொண்டு மக்கள் சாப்பிடும் நிலை ஏற்பட்டது. பல குடும்பத்தினர் தூங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் மீட்பு பணிகளை மழை முடங்கி விட்டதால் நிலைமை எப்போது சீராகுமோ? என்று மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சேதம் அடைந்த வீடுகளுக்கு அரசு 5 லட்சம் தார்ப்பாய்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் இன்றும் தொடர் மழை பெய்து வருகிறது. இது மக்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்திற்கு உட்பட்ட அறந்தாங்கி, ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், கந்தர்வக்கோட்டை, ஆதன கோட்டை, சோளகம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று காலை வரை இடைவிடாமல் மழை பெய்தது. இன்று காலை லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக மின் கம்பங்கள் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை பெய்து கொண்டிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் மின் ஊழியர்கள் பலர் தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தன்னார்வலர்கள் நிவாரண பொருட்களை கொண்டு வருகின்றனர். ஆனால் மழை பெய்வதால் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    உணவு சமைத்து கொடுப்பதற்காக வந்தவர்கள் தங்குவதற்கு இடமில்லாத சிரமமும் ஏற்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

    மழை காரணமாக சீரமைப்பு, நிவாரண பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் குடிநீர் விநியோகிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, மருங்காபுரி பகுதிகள் கஜா புயலால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தன. அங்கு 80 சதவீதம் அளவுக்கு சீரமைப்பு பணிகள் முடிவுற்றுள்ளது. மீதி பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் அந்த பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தொடர் கனமழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

    இதே போல் தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

    திருச்சி, தர்மபுரி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  #GajaCyclone #DeltaDistricts #HeavyRain
    தமிழகத்தில் புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கும்படி பிரதமரிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார். #PMModi #GajaCyclone #GajaCycloneRelief
    புதுடெல்லி:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கஜா புயல் பாதிப்பு மற்றும் சேதங்கள் குறித்து விளக்கினார். மேலும் புயல் சேத விவரம் அடங்கிய அறிக்கையை அளித்தார். புயல் பாதிப்பை சரி செய்ய தமிழக அரசுக்கு விரைவாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.


    மேலும், கஜா புயலால் ஏற்பட்ட சேத பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய பேரிடர் ஆய்வுக்குழு விரைந்து தமிழகம் வர வேண்டும், கஜா புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

    முதல்வருடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.  #PMModi  #GajaCyclone #GajaCycloneRelief #CMOfficeTamilNadu

    தானே புயல் பாதிப்பைவிட கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் 10 மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm #Thanestorm #storm

    சென்னை:

    கஜா புயல் நடத்திய கோரத் தாண்டவத்தால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களும் உருக்குலைந்து விட்டன.

    மக்களின் அனைத்து விதமான வாழ்வாதாரங்களையும் கஜா புயல் கபளீ கரம் செய்து விட்டதால் ஏழை - எளியவர்கள் நடுத்தர மக்கள் அடுத்து என்ன செய்வது, எப்படி சமாளிப்பது என்பது புரியாமல் தவித்தபடி உள்ளனர்.

    புயல் தாக்கி இன்றுடன் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில் 90 சதவீத கிராமங்கள் இன்னமும் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மின்சாரம், குடிநீர், உணவுப் பொருட்கள் இல்லாததே அதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இதை சீர்படுத்த தமிழக அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும், ஊழியர்களும் களத்தில் இறங்கி உள்ளனர். அவர்களுக்கு உதவ போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆனால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருவரை கூட விடாமல் கஜா புயல் உடல் அளவிலும் மனதளவிலும் காயப்படுத்தி விட்டது. 6-வது நாளாக ஆதங்கத்துடன் இருக்கும் 4 மாவட்ட மக்களுக்கும் உதவும் வகையில் சுமார் 3 லட்சம் பேரை தமிழக அரசு களத்தில் இறக்கி நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.

    46 பேரின் உயிரைப் பறித்த கஜா புயல் சுமார் 2 லட்சம் வீடுகளை சேதப்படுத்தி உள்ளது. சுமார் 2 கோடி மரங்கள் சாய்ந்துள்ளன. தென்னை மரங்கள் மட்டும் 40 லட்சம் அளவுக்கு வேரோடு சரிந்து விட்டன. சுமார் 1 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் அதிக பட்சமாக வாழை, கரும்பு, பயிர் வகைகள் நாசமாகி விட்டன.

    1 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் விழுந்துள்ளன. சுமார் 5 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கான மின் கம்பிகள் அறுந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. சுமார் 1 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறி 625 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

     


     

    புயல் தாக்கிய கடந்த வெள்ளிக்கிழமை சேத விபரங்கள் முழுமையாக வெளியில் தெரியவில்லை. அரசு எடுத்த முன் எச்சரிக்கையால் உயிரிழப்புகளை தடுத்து விட்டனர் என்று கருதப்பட்டது. ஆனால் மக்களின் வாழ்வாதாரங்களை புயல் நாசமாக்கி விட்டதை அடுத்தடுத்து வரும் நாட்களில்தான் அறிய முடிந்தது.

    உணவு, உடை, உறைவிடம், குடிநீர், மண்ணெய், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் கிடைக்காமல் டெல்டா மாவட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தையும் இழந்து வயிற்றுப் பசியோடும் இருப்பது என்பது மிக, மிக கொடூரமான சூழ்நிலையாக அங்கு உள்ளது. மொத்தத்தில் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2011-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தைப் புரட்டி போட்ட தானே புயலால் அம்மாவட்ட மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து கதறினார்கள். அந்த இழப்புகளில் இருந்து மீள அம்மாவட்ட மக்களுக்கு பல மாதங்கள் ஆனது. அத்தகைய தானே புயல் பாதிப்பை விட கஜா புயல் 10 மடங்கு அதிகமாக கோரத் தாண்டவம் ஆடி பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக டெல்டா மாவட்டங்களில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். தொழில் அதிபர்கள், விவசாயிகள், மீனவர்கள், கூலித் தொழிலாளிகள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் உடமைகளை இழந்து தவிக்கிறார்கள்.

    முதல் 2 நாட்கள் டெல்டா மாவட்டங்களின் பாதிப்பு பற்றி வெளி உலகுக்கு முழுமையாக தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போதுதான் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் குக்கிராமங்களில் கடும் அழிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த இழப்புகளைக் கண்டு சேத விபரங்களை ஆய்வு செய்து கணக்கிட்டு தகவல் சேகரிக்க சென்றுள்ள அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் டெல்டா மாவட்ட மக்களுக்கு முதல் தேவை சுத்தமான உணவும், குடிநீரும்தான். அதை முகாம்கள் அமைத்து அரசு அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள். தன்னார்வத் தொண்டர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

    6-வது நாளான இன்று டெல்டா மாவட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் ஓரளவு கிடைத்து விட்ட நிலையில் உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் உள்ளனர். அந்த பொருட்களையும் தன்னார்வ அமைப்புகள் வழங்கத் தொடங்கி உள்ளனர். எனவே இன்னும் சில தினங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் நிம்மதியான நிலைக்கு திரும்ப முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    என்றாலும் டெல்டா மாவட்டங்களில் மக்கள் மத்தியில் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “டெல்டா மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்ப ஒரு மாதம் ஆகும்” என்றனர். ஆனால் முழுமையான சகஜ நிலை வர பல மாதங்களாகும் என்று தன்னார்வத் தொண்டு அமைப்புகள் கூறுகின்றன.

     


     

    டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தேவை ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டு விடும் நிலையில் மக்களின் அடுத்த மிகப்பெரிய முக்கியத் தேவையாக மின்சாரம் உள்ளது. டெல்டாவில் சுமார் 1 லட்சம் மின் கம்பங்கள் விழுந்து விட்டதால் மின் இணைப்பை சீராக்குவது மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது.

    புதிய மின் கம்பங்களை நட்டு, கம்பிகளை இணைத்து, மின் மாற்றி உள்ளிட்ட உபகரணங்கள் பொருத்தி மின் இணைப்பை வழங்கி வருகிறார்கள். மின்சார உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவுக்கு கை இருப்பு உள்ள நிலையில் சுமார் 14 ஆயிரம் மின்சார ஊழியர்கள் இந்த நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வயல், காடுகளைக் கடந்து கிராமங்களுக்கு மின் கம்பிகளை இழுத்து சென்று மீண்டும் மின் இணைப்பு கொடுப்பது மின் வாரிய ஊழியர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. எனவே டெல்டா மாவட்டங்களில் மின்சார இணைப்பு முழுமையாக கிடைக்க குறைந்த பட்சம் 2 முதல் 3 வாரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் தெருக்கள், முக்கிய சாலைகள் ஓரங்களில் சரிந்து விழுந்த மரங்கள், மின் கம்பங்கள் இன்னமும் 60 சதவீதம் அகற்றப்படாமல் உள்ளன. ஆங்காங்கே குப்பைகள் சேர்ந்து இருப்பது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளன. இதைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் 2214 மருத்துவ முகாம்கள் அமைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உடல் நலம் பாதித்த மக்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

    சுமார் ஆயிரம் டாக்டர்கள், நர்சுகள் டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலவேம்பு குடிநீர், பிளிச்சிங் பவுடர்கள் தேவைக்கும் அதிகமாக கை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் அதற்கு ஏற்ப முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற் கொண்டுள்ளது.

    நேற்றும் இன்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக நிவாரணப் பணிகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் அரசுத் துறை அதிகாரிகள் மழையையும் பொருட்படுத்தாமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    நிவாரண உதவிகள் செய்வதற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் அரசு வசம் போதுமான அளவுக்கு உள்ளது. ஆனால் அவற்றை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சென்று சேர்க்க முடியாதபடி சாலைகளில் இடையூறு உள்ளது. இதை கண்டித்து பல இடங்களில் மக்கள் மறியலில் ஈடுபடுகின்றனர்.

    அவர்கள் கஜா புயல் பாதிப்பை உணர்ந்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நிவாரணப் பணிகளை ஒரு வாரத்துக்குள் முடித்து விட வேண்டும் என்ற இலக்குடன் அமைச்சர்களும், அதிகாரிகளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    மின்சார இணைப்பு முழுமையாக சீரான பிறகே மக்கள் முகங்களில் சற்று நிம்மதியை பார்க்க முடியும் என்று கருதப்படுகிறது. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் எப்போது மீண்டும் வலுப்பெறும் என்பதுதான் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

    டெல்டா மாவட்ட மக்கள் பயிர் பாசனத்தை இழந்த நிலையில் தென்னை, வாழை போன்றவற்றையே நம்பி இருந்தனர். அந்த தென்னை மரங்களும் விழுந்து விட்டதால் வாழ்வாதாரத்துக்கான உள் கட்டமைப்பை எப்படி, எப்போது மீண்டும் உருவாக்கப் போகிறார்கள் என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. #Gajastorm #Thanestorm #storm

    ×