என் மலர்

    நீங்கள் தேடியது "Gaja cyclone impact"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசித்து வருகிறார். #GajaCyclone
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அடுத்த கொண்டி குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்லதுரை (வயது 50). இவரது மனைவி பெயர் செல்வமணி. இவர்களுக்கு முரளி, மூர்த்தி என்ற 2 மகன்கள் உள்ளனர். இரு மகன்களும் விவசாய வேலை பார்த்து வருகின்றனர்.

    கடந்த கஜா புயலில் தங்களின் வீட்டை முற்றிலுமாக இழந்து விட்டனர். வீடுகட்ட பொருளாதார வசதியின்றி தவித்து வந்தனர்.

    தங்குவதற்கு வேறு வழி இன்றி அருகில் உள்ள சுடுகாட்டில் உள்ள சமாதியில் 60 நாட்களாக குடியிருந்து வருகின்றனர்.

    பொங்கல் அன்று வீட்டை இழந்த அந்த பழைய இடத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவினை கொண்டாடினர்.

    இதுபற்றி விவசாயி செல்லத்துரை கூறியதாவது:-

    கஜா புயல் எங்களது வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. வீட்டை இழந்த நாங்கள் சுடுகாட்டில் உள்ள சமாதியில் டெண்ட் போட்டு குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு அரசோ அல்லது தனியார் அமைப்புகளோ வீடு கட்ட உதவி கரம் நீட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கஜா புயல் தாக்குதலில் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டதாக சட்டசபையில் முதலமைச்ச் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNAssembly #GajaCyclone #EdappadiPalaniswami
    சென்னை:

    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் தாக்குவதற்கு முன்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது எந்த அதிகாரியும் அந்தப் பகுதியிலே வரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை ஒரு உறுப்பினர் இங்கே பதிவு செய்துள்ளார். அது தவறானது. வருவாய்த்துறை அமைச்சர் சொன்னதைப்போல, கஜா புயல் வருவதற்கு முன்பாகவே, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே, என் தலைமையிலே இருமுறை கூட்டம் கூட்டப்பட்டு, அந்தக் கூட்டத்திலே மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எல்லாம் கலந்து கொண்டு, புயல் ஏற்பட்டால் நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் ஆலோசித்து, அந்த ஆலோசனையின்படி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், புயலால் பாதிக்கப்படக்கூடிய அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு எல்லாம் அறிவுறுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    அதுமட்டுமல்லாமல், வருவாய்த் துறை அமைச்சர் சொன்னதைப் போல, புயல் ஏற்படக்கூடிய அந்த மாவட்டங்களிலே, அந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து, அந்தப் புயல் வருகின்ற போது, மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது அதற்கு முன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    அவர்களுக்கு துணையாக மூத்த இந்திய ஆட்சிப் பணியாளர்களும் முன் கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டனர். முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்ட காரணத்தினாலே, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினாலே, அனைத்து மின் இணைப்புகளும் புயல் அடிப்பதற்கு முன்பாக 6 மணிக்கு  மணிக்கே நிறுத்தப்பட்டு விட்டன.

    போக்குவரத்து இயக்கம் எல்லாம் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த புயல் கடுமையாக பாதிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே, குடிசையில் வாழ்ந்த மக்கள், தாழ்வான பகுதியிலே வாழ்ந்த மக்களை எல்லாம், அதிகாரிகள் தான் அழைத்து வந்து பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்திருக்கிறார்கள்.

    கோப்புப்படம்

    கிட்டத்தட்ட 81, 948 நபர்கள் 471 முகாம்களிலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைத்ததன் காரணமாக உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, அதிகாரிகள் எல்லாம் வந்த காரணத்தினாலே தான் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

    ஆகவே, கஜா புயல் ஏற்பட்ட போது யாரும் வரவில்லை என்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு தவறு. வருவதற்கு முன்பாகவே, அங்கே இருக்கின்ற மாவட்ட அமைச்சர்கள், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மின்சாரத் துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் இன்னும் பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் எல்லாம் அங்கே அனுப்பி வைக்கப்பட்டு, புயல் ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்களை காப்பாற்ற வேண்டுமென்ற அடிப்படையிலே, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #GajaCyclone #EdappadiPalaniswami
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஏழை கூலி தொழிலாளி கஜா புயலால் சேதம் அடைந்த வீட்டை கட்டுவதற்கு பெற்ற மகனையே ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone

    நாகப்பட்டினம்:

    வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த மாதம் 16-ந்தேதி வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த போது டெல்டா மாவட்டங்களை மிகக்கடுமையாக சேதப்படுத்தியது.

    நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்தன. புயல் சீற்றத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர்.

    டெல்டா மாவட்டங்களில் சுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த நெற்பயிர்கள், தென்னை, வாழை மரங்கள் முற்றிலுமாக அழிந்தன. அதுபோல சுமார் 57 ஆயிரம் குடிசை வீடுகளும் சேதம் அடைந்தன. 21 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்தன.

    வீடுகளை இழந்த சுமார் 2½ லட்சம் பேர் நிவாரண முகாம்களில் நீண்ட நாட்கள் தங்கும் நிலை ஏற்பட்டது. இயல்பு வாழ்க்கையை முற்றிலும் இழந்த டெல்டா மக்கள், தற்போது தான் மெல்ல, மெல்ல மீண்டு வருகிறார்கள். வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    நடுத்தர வசதி கொண்ட மக்கள் புயலால் சேதம் அடைந்த தங்களது வீடுகளை தாங்களே பழுது பார்த்துள்ளனர். ஆனால் நிரந்தர வருவாய் இல்லாத ஏழைகள், முற்றிலும் சேதம் அடைந்த குடிசை வீடுகளை மீண்டும் கட்டிக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.


    குடிசை வீடுகளை புதிதாக கட்டவும், சீரமைக்கவும் கடன் வாங்குவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்ற பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அத்தகைய பரிதாப நிலையில் உள்ள ஒரு ஏழை கூலி தொழிலாளி கஜா புயலால் சேதம் அடைந்த வீட்டை கட்டுவதற்கு பெற்ற மகனையே விற்ற அவலம் நடந்துள்ளது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காரிகாடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்ற கூலித் தொழிலாளிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் ஆகி விட்டது. அவரது இரண்டாவது மகன் பெரமையா. இவனுக்கு 12 வயதாகிறது.

    தினமும் கூலி வேலை செய்து பிழைத்து வந்த நிலையில் மாரிமுத்துவின் குடிசை வீடு, கஜா புயலால் முற்றிலும் அழிந்து போனது. புதிய குடிசை வீடு கட்ட அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. அடகு வைத்து பணம் புரட்டவும் அவரிடம் எதுவும் இல்லை.

    மகன் மட்டுமே இருந்த நிலையில், அவனை தற்காலிகமாக விற்று பணம் பெற ஏழை தினக்கூலித் தொழிலாளியான மாரிமுத்து முடிவு செய்தார். அதன்படி 3 வாரங்களுக்கு முன்பு 12 வயது மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி ஒரு பண்ணைத் தோட்டத்து முதலாளியிடம் விற்று விட்டார்.

    நாகை மாவட்டத்தில் பனங்குடி என்ற கிராமத்தில் ரெட்டி திருவாசல் தெருவைச் சேர்ந்த பண்ணைத் தோட்டத்து உரிமையாளர் சந்துரு என்பவர் அந்த சிறுவனை வாங்கி இருந்தார். அந்த சிறுவனை அவர் பண்ணைத் தோட்டத்து வேலைகளில் ஈடுபடுத்தினார். கொத்தடிமை போல் அந்த சிறுவன் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதற்கு மட்டுமின்றி ஆடு மேய்க்கும் வேலையிலும் அந்த சிறுவன் ஈடுபடுத்தப்பட்டான்.

    இந்த நிலையில் பனங்குடி பண்ணையில் 12 வயது சிறுவன் கொத்தடிமை போல வேலையில் உள்ளதாக சிறுவர்கள் நல அதிகாரிகளுக்கு 1908 என்ற இலவச தொலைபேசி மூலம் புகார் வந்தது. இதையடுத்து கடந்த 22-ந்தேதி மாவட்ட அரசு அதிகாரிகளும், சைல்டு லைன் உறுப்பினர்களும் அந்த பண்ணைத் தோட்டத்துக்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர்.

    அப்போது 12 வயது சிறுவன் பெரமையா கொத்தடிமை போல இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். பிறகு அந்த சிறுவன் நாகை உதவிக் கலெக்டர் கமல்கிஷோர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

    அங்கு அவனிடம் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது கஜா புயலால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு சோகம் காரணமாக அந்த சிறுவனை அவனது பெற்றோரே விலை பேசி விற்று விட்ட அவலம் நடந்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த சிறுவன் நாகையில் உள்ள சிறுவர்கள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான். கடந்த திங்கட்கிழமை அந்த சிறுவனை விடுவிப்பதற்கான சான்றிதழை நாகை உதவி கலெக்டர் அமல்கிஷோர் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து அந்த சிறுவன் தஞ்சை மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டான். அங்கு அவன் சிறுவர்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளான்.

    இதற்கிடையே ஏழ்மையைப் பயன்படுத்தி அந்த சிறுவனை விலைக்கு வாங்கியது குறித்து நாகை மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினார்கள். ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கிய பண்ணைத் தோட்ட உரிமையாளர் சந்துரு மீது நாகூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொத்தடிமை தொழிலாளர்கள் சட்டம்-1976ன் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அந்த சிறுவனின் தந்தையிடமும் அரசு அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது மாரிமுத்து கூறுகையில், “கஜா புயலால் எங்கள் வீடு தரைமட்டமாகி விட்டது. அதை பழுது பார்க்க எங்களிடம் எந்த பணமும் இல்லை.

    வயல்களிலும் வேலை வாய்ப்பு இல்லை. எனவே தான் இந்த முடிவு எடுக்க வேண்டியதாகி விட்டது. எனது மகனை அனுப்ப வேண்டிய நிர்பந்தத்தால் இதை செய்தேன்” என்றார். #GajaCyclone
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுக்கோட்டை அருகே புயலால் பாதித்த விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்த டீக்கடைக்காரர் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளார். #GajaCyclone
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் கிராமமானது செழிப்பான பகுதியாகும். இங்கு மலர்கள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் தென்னை, பலா, வாழை ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.

    கஜா புயலால் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். விவசாயமும் பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலர் உதவிகள் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். இதையடுத்து அவர் தனது கடையில் டீ குடித்ததற்காக நீண்ட நாட்களாக கடன் வைத்திருந்த விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கடை பலகையில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.

    இது குறித்து சிவக்குமார் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக இந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறேன். புயலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பாக்கித்தொகையை அவர்களால் இப்போதைக்கு திருப்பி வழங்க முடியாது என்று நினைத்தேன்.

    அதனால் என்னால் இயன்ற உதவியை அவர்களுக்கு செய்யும் வகையில் ஒட்டுமொத்த கடன் பாக்கியையும் தள்ளுபடி செய்து விட்டேன் என்றார். விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடனை தள்ளுபடி செய்த சிவக்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    விவசாயிகள் தங்களது பயிர்க்கடன் தள்ளுபடியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களின் டீ குடித்த கடனை கடைக்காரர் தானாகவே தள்ளுபடி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #GajaCyclone
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கஜா புயலால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதால் சிங்கப்பூரில் வேலை பார்த்த விவசாயி மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பட்டுக்கோட்டை:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த மாதம் 16-ந் தேதி கஜா புயல் கரையை கடந்தது. அப்போது வீசிய பேய் காற்றில் டெல்டா மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. வீடுகளை இழந்தும், பயிர்களை இழந்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    கஜா புயல் பாதிப்பால் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்தும், மாரடைப்பாலும் இறந்துள்ளனர்.

    இந்த நிலையில் புயலால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதால் சிங்கப்பூரில் வேலை பார்த்த விவசாயி மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் கலைவாணன் (வயது 32). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கஜா புயலால் கருணாநிதி வசித்து வந்த ஓட்டுவீடு சேதமடைந்தது. மேலும் அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நின்ற மரங்கள் பல முறிந்து பேரிழப்பை ஏற்படுத்தின.

    இந்த நிலையில் கஜா புயலில் தங்களது வீடு மற்றும் தென்னந்தோப்பு பாதிக்கப்பட்டது குறித்து சிங்கப்பூரில் இருந்த கலைவாணனுக்கு அவரது குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர். இதை கேட்டு அவர் மிகவும் வேதனைப்பட்டார்.

    அப்போது அவர் தனது குடும்பத்தினரிடம் சேதம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு கவலையில் ஆழ்ந்தார். இதில் இருந்து தங்கள் குடும்பம் மீள்வது கடினம் என்று கருதி மனமுடைந்த அவர் இனி வாழ்வதை விட சாவதே மேல் என்று விபரீத முடிவு எடுத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வாழ்க்கையில் விரக்தியடைந்த கலைவாணன் சிங்கப்பூரில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நேற்று இரவு சொந்த ஊரான திட்டக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

    தங்களது குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டி வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்த கலைவாணன் புயல் ஏற்படுத்திய இழப்பை அறிந்து தற்கொலை செய்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட கலைவாணனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கஜா புயலால் பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் மிகவும் பாதித்த 50 கிராமங்களுக்கு 25 ஆயிரம் தென்னங்கன்றுகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
    சென்னை:

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிரந்தரமான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தென்னங்கன்றுகள் வழங்க தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

    புயலில் அதிக அளவில் சேதமானது அந்த பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமான தென்னை மரங்கள் தான்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் மிகவும் பாதித்த 50 கிராமங்களை மா.சுப்பிரமணியன் தேர்வு செய்துள்ளார்.

    இந்த கிராமங்களுக்கு 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

    இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நவீன ஒட்டு ரக மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

    வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பட்டுக்கோட்டை அருகில் உள்ள சூரப்பள்ளம் கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்குகிறார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொடைக்கானலில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்ததால் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்று கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #GajaCyclone #KarunanidhiStatue
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடைக்கானல் கீழ் மலை கிராமங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு உள்ள பழங்குடியின மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் முறையாக சென்றடையவில்லை. ஒரு சில தன்னார்வலர்கள் மட்டுமே உதவி செய்து உள்ளனர். நிவாரண உதவிகள் வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கிராம மக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலை மாற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    சென்னையில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது. புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக நான் ஏற்கனவே பயணதிட்டம் தயார் செய்து நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி இருந்தேன். புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்ததால் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #GajaCyclone #KarunanidhiStatue
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் தங்கி இருக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #TNMinisters #EdappadiPalaniswami
    சென்னை:

    வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 16-ந்தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் வழியாக கரையை கடந்தது.

    மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயங்கர சூறைக்காற்று வீசியதால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் கடுமையான பேரழிவு ஏற்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கான தென்னை மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. ஏராளமான வீடுகள் இடிந்தும் சேதம் அடைந்தும் மக்களை கடுமையாக பாதிப்பு அடையச் செய்துள்ளது. இதனால் நிவாரண முகாம்களிலேயே மக்கள் தங்கி உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது.

    போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக சாய்ந்து விழுந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்களை நட்டும், நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்தில் சேதம் அடைந்த மின்சார வயர்களுக்கு பதில் புதிய வயர்களை மாற்றியும் மின் இணைப்பு வழங்கினார்கள். இதனால் குடிநீர் பிரச்சனையை ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது.

    நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது மீண்டும் பலத்த மழை பெய்ததால் பணிகள் பாதிக்கப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் மழையால் சேரும் சக்தியுமாக மாறியதால் தொற்று நோய் பரவாமல் இருக்க தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்காங்கே மருத்துவ முகாம்களும் நடைபெற்று வருகிறது.

    தமிழக அரசின் அனைத்து துறை அதிகாரிகளும், அலுவலர்களும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக அமைச்சர்கள் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு துரிதமாக பணிகள் நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

    மத்தியக் குழுவும் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு சென்றுள்ளதால் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் மத்திய அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


    பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    புயலால் பாதிக்கப்பட்ட 2.15 லட்சம் குடும்பங்கள் 415 முகாம்களில் தொடர்ந்து தங்கிஉள்ளனர். இவர்கள் சொந்த இடங்களுக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது.

    மேலும் 6 லட்சம் குடும்பங்களுக்கு உடனடியாக மண்எண்ணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்எண்ணை விநியோகம் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக குடும்பம் ஒன்றுக்கு 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படுகிறது.

    இதற்காக தற்போதைக்கு 1,075 கி.லிட்டர் மண்எண்ணை தேவைப்படுகிறது. தொடர்ந்து மண்எண்ணை விநியோகம் செய்து கூடுதலாக 1,675 கி.லிட்டர் தேவைப்படுவதால் உடனடியாக ஒதுக்கீடு செய்ய உதவுமாறு சேத பகுதிகளை பார்வையிட்ட ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம் தமிழக உணவு அமைச்சர் காமராஜ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    புயலால் சேதம் அடைந்த தென்னை மற்றும் பயிர்கள் பற்றி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. சாய்ந்து விழுந்த தென்னைகளை அகற்றியதும் அந்த இடத்தில் புதிய கன்றுகளை நட தமிழக வேளாண்மைத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் போதுமான தென்னங்கன்றுகள் இல்லை என்றால் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது புயல் பாதித்த மாவட்டங்களில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் அனைத்துத் துறையைச் சேர்ந்த அலுவலர்களும், ஊழியர்களும் 8,000 பேர் முகாமிட்டு நிவாரண பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்து இங்குள்ள அலுவலக பணிகளை முடித்து விட்டு மீண்டும் நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.

    இந்த வாரத்துக்குள் நிவாரணப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்யும் மழையால் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அமைச்சர்களை தொடர்ந்து அங்கேயே பணி முடியும் வரை தங்கியிருந்து கவனிக்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் அமைச்சர்கள், அவர்களது உதவியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் டெல்டா மாவட்டங்களிலேயே தங்கி உள்ளனர்.

    நிவாரணப் பணிகள் பற்றி மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவர் கூறும்போது, பணிகள் முழு வீச்சில் நடை பெறுகிறது. மக்களின் அன்றாட இயல்புநிலை திரும்பி வருகிறது. தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. என்றாலும் முழுவதுமாக இயல்பு நிலை திரும்ப இன்னும் 10 நாட்கள் ஆகும் என்று தெரிவித்தார்.

    அடுத்த வாரம் புயல் நிவாரணப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்தில் நிவாரண பணிகளின் முன்னேற்றம், இன்னும் மேற்கொள்ள வேண்டும். தேவையான நடவடிக்கைகள், உதவிகள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. அதன் பிறகே அமைச்சர்களும், அதிகாரிகளும் சென்னை திரும்புவார்கள். அதுவரை டெல்டா மாவட்டங்களில் தங்கி இருப்பார்கள் என்று தெரிய வருகிறது. #GajaCyclone #TNMinisters #EdappadiPalaniswami
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப்பகுதியில் 90 சதவீத புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #GajaCyclone
    புதுக்கோட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து மரங்களை அப்புறப்படுத்துதல், மின் கம்பங்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் கந்தர்வக்கோட்டை பகுதிகளில் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், டாக்டர். சி.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் கொட்டும் மழையிலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை அகற்றி ஜே.சி.பி. எந்திரங்களின் உதவியுடன் புதிய மின்கம்பங்களை நடும் பணிகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பணிகளில் எந்தவித தொய்வுமின்றி மிகவும் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருந்தை பார்வையிட்ட அமைச்சர்கள், மின்வாரிய ஊழியர்களை பாராட்டினர்.

    அப்போது அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் உத்தரவின்படி அமைச்சர்கள் தொடர்ந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    துணை முதல்வர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர், அடப்பங்கரை சத்திரம், கந்தவர்வக்கோட்டை, பந்தக்கோட்டை, மருதன்கோன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.

    தற்போதுகூட கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை பிரதான சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் கேரள மாநிலத்தில் இருந்து மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் மோசஸ்ராஜ்குமார் தலைமையில் 26 பேர் அடங்கிய குழுவினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபோன்று மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப்பகுதிகளிலும் மின்கம்பங்கள் சீர்செய்து மின் விநியோகம் வழங்கும் பணியும், சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியும், பாதிக்கப்பட்ட பயிர்கள், வீடுகள் குறித்த சேத மதிப்பீடுகளை கணக்கெடுக்கும் பணியும், குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யும் பணியும், பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப்பகுதியில் 90 சதவீத புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. கிராமப்பகுதிகளில் சுமார் 45,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், அவற்றை சீர்செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஓரிரு தினங்களுக்குள் பெரும்பான்மையான பகுதிகளுக்கும் முழுமையாக மின் விநியோகம் செய்யும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ‌ஷம்பு கல்லோலிகர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். #GajaCyclone
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print