என் மலர்
நீங்கள் தேடியது "Tea shop owner"
- பால் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதாள் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது
சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது
பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
01-09-2025 முதல் டீக்கடை விலைபட்டியல்
பால் - ரூ.15
லெமன் டீ - ரூ.15
காபி - ரூ.20
ஸ்பெஷல் டீ - ரூ.20
ராகி மால்ட் - ரூ.20
சுக்கு காபி - ரூ.20
பூஸ்ட் - ரூ.25
ஹார்லிக்ஸ் - ரூ.25
பார்சல்
கப் டீ - ரூ.45
கப்-பால் - ரூ.45
கப் காபி - ரூ.60
ஸ்பெஷல் கப் டீ - ரூ.60
ராகி மால்ட் - ரூ.60
சுக்கு காபி - ரூ.60
பூஸ்ட் - ரூ.70
ஹார்லிக்ஸ் கப் - ரூ.70
ஸ்னாக்ஸ்
போன்டா / பஜ்ஜி / சமோசா 15 /- (Each)
- பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதாள் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது
சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளை முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது
பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
01-09-2025 முதல் டீக்கடை விலைபட்டியல்
பால் - ரூ.15
லெமன் டீ - ரூ.15
காபி - ரூ.20
ஸ்பெஷல் டீ - ரூ.20
ராகி மால்ட் - ரூ.20
சுக்கு காபி - ரூ.20
பூஸ்ட் - ரூ.25
ஹார்லிக்ஸ் - ரூ.25
பார்சல்
கப் டீ - ரூ.45
கப்-பால் - ரூ.45
கப் காபி - ரூ.60
ஸ்பெஷல் கப் டீ - ரூ.60
ராகி மால்ட் - ரூ.60
சுக்கு காபி - ரூ.60
பூஸ்ட் - ரூ.70
ஹார்லிக்ஸ் கப் - ரூ.70
ஸ்னாக்ஸ்
போன்டா / பஜ்ஜி / சமோசா 15 /- (Each)
- சம்பவத்தன்று காலை முருகேசன் வீட்டின் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார்.
- இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்னிவலசு சிவாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன் (34). இவர் பெருந்துறையில் டீ கடை வைத்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி (23). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் முருகேசன் ஒரு பெண்ணுடன் போனில் பேசியது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவத்தன்று காலை முருகேசன் வீட்டின் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முருகேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் கிராமமானது செழிப்பான பகுதியாகும். இங்கு மலர்கள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் தென்னை, பலா, வாழை ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.
கஜா புயலால் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். விவசாயமும் பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலர் உதவிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். இதையடுத்து அவர் தனது கடையில் டீ குடித்ததற்காக நீண்ட நாட்களாக கடன் வைத்திருந்த விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கடை பலகையில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.
இது குறித்து சிவக்குமார் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக இந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறேன். புயலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பாக்கித்தொகையை அவர்களால் இப்போதைக்கு திருப்பி வழங்க முடியாது என்று நினைத்தேன்.
அதனால் என்னால் இயன்ற உதவியை அவர்களுக்கு செய்யும் வகையில் ஒட்டுமொத்த கடன் பாக்கியையும் தள்ளுபடி செய்து விட்டேன் என்றார். விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடனை தள்ளுபடி செய்த சிவக்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
விவசாயிகள் தங்களது பயிர்க்கடன் தள்ளுபடியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களின் டீ குடித்த கடனை கடைக்காரர் தானாகவே தள்ளுபடி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone






