பணத்தகராறில் டீக்கடை உரிமையாளருக்கு உருட்டுகட்டை அடி

பணத்தகராறில் டீக்கடை உரிமையாளரை உருட்டுகட்டையால் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பணத்தகராறில் டீக்கடை உரிமையாளருக்கு உருட்டுகட்டை அடி
Published on

திருச்சி:

திருச்சி டி.வி.எஸ்.டோல் கேட் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் கருப்பசாமி (28). இவர் தொழிலுக்காக திருச்சி தில்லை நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். பின்னர் அந்த பணத்தை திருப்பி செலுத்த வில்லை. 

இந்நிலையில் ரமேஷ்குமார் தனது உறவினர் சபரிசீனிவாசனுடன் டீக்கடைக்குசென்று கருப்பசாமியிடம் பணம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ்குமார் உருட்டுகட்டையால் கருப்பசாமியை தாக்கினர். இதில் அவரின் மண்டை உடைந்தது. 

இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குபதிவு செய்து ரமேஷ்குமார், சபரிசீனிவாசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com