search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Committee"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக இன்று மதுரை வந்தடைந்தனர்.
    • தூத்துக்குடியில் ஸ்டேட் பாங்க் காலனி, முத்தம்மாள் காலனி பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் அதீத கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது பெய்த கனமழையால் தாமிர பரணி ஆற்றில் சுமார் 1 லட்சம் கன அடி நீர் சென்றது.

    இதனால் ஆறு மற்றும் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்தது.இதனால் சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டு பல்வேறு கிராமங்கள் தனித்தீவாக மாறின.

    குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதிகள் முழுவதும் 4-வது நாளாக இன்றும் வெள்ளத்தில் மிதக்கிறது. திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஏரல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கிறது.

    மேலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் நீரில் முழ்கின. இதேபோல நெல்லை மாவட்டத்திலும் கடுமையான வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இப்பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழு, தமிழ்நாடு அரசு துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு, சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

    இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் தென் மாவட்டங்களில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக இன்று காலை மதுரை வந்தடைந்தனர்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி வந்த மத்திய குழுவினர் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

    தூத்துக்குடியில் ஸ்டேட் பாங்க் காலனி, முத்தம்மாள் காலனி பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். படகில் சென்று மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தொடர்ந்து நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தீவுகளாக மாறின.
    • பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து மத்திய குழுவினருக்கு காணொலி மூலமாக மாவட்ட நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களை கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழை புரட்டிப்போட்டுவிட்டது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தீவுகளாக மாறின.

    பல கிராமங்கள் அதாவது ஏரல், ஸ்ரீவைகுண்டம், முக்காணி, அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம், பரமன்குறிச்சி, பள்ளத்தூர், தேரிக்குடியிருப்பு உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்து தத்தளிக்கின்றன.

    இந்நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் இன்று தூத்துக்குடி வந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய குழு பங்கேற்றுள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து மத்திய குழுவினருக்கு காணொலி மூலமாக மாவட்ட நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர்.

    ஆலோசனைக்கு பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு நேரில் பார்வையிடுகிறது.

    • டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யும் உரிமையை தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு வழங்க வேண்டும்.
    • மத்திய குழுவினர் நீடாமங்கலம் அருகே அரிச்சாபுரம் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

    தஞ்சாவூா்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை கொட்டியது.

    பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான பல்லாயிரக்கணக்கான சம்பா நெற்பயிர்கள், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் பாதிக்கப்பட்டன.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டெல்டா மாவட்டங்களில் கடந்த 5-ந் தேதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதற்கு மறுநாள் 6-ம் தேதி முதலமைச்சரிடம் சேத விவரங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் பயிர் இழப்பீட்டு நிவாரணத் தொகையை முதலமைச்சர் அறிவித்தார்.

    தொடர்ந்து கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் தளர்வு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

    அதனை ஏற்று சென்னை தரக்கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூர் தர கட்டுப்பாட்டு மையம் அதிகாரிகள் பிரபாகரன், போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் நேற்று நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் மனுக்கள் பெற்றனர். இன்று 2-வது நாளாக தங்களது ஆய்வை தொடர்ந்தனர்.

    அதன்படி முதலில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் என்ற இடத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களது ஆய்வை தொடங்கினர். கொள்முதலுக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லின் தன்மையை பரிசோதித்தனர். தாங்கள் கொண்டு வந்த எந்திரம் மூலம் ஈரப்பதம் எந்த அளவில் உள்ளது என்று சோதனையிட்டனர். பின்னர் நெல்லின் மாதிரிகளை சேகரித்துக் கொண்டனர். கொள்முதல் செய்யப்படும் விதம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

    அப்போது விவசாயிகள், பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதம் ஆனதோடு நெல்மணிகளின் ஈரப்பதம் 22 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது 19 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் நாங்கள் நெல்மணிகளை உலர்த்த பாடுபட வேண்டி உள்ளது. போதுமான அளவில் உலர்களம் இல்லாததால் நெல்லின் ஈரப்பதம் குறைக்க முடியவில்லை. எனவே 22 சதவீதம் முறையிலான நெல்மணிகளை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து நீங்கள் மத்திய அரசிடம் பேசி உடனடி தீர்வு காண வேண்டும். மேலும் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யும் உரிமையை தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு வழங்க வேண்டும்.

    இதற்கு மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குழுவினர் கூறினர்.

    இதனை தொடர்ந்து மத்திய குழுவினர் நீடாமங்கலம் அருகே அரிச்சாபுரம் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அங்கும் விவசாயிகள் கொடுத்த மனுவை வாங்கி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    இதையடுத்து மாவட்டத்தில் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, வேளாண் அதிகாரிகள், கொள்முதல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் உடன் இருந்தனர்.

    தஞ்சையில் இன்று மாலை தஞ்சை மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    அதன் பின்னர் டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கின்றனர். அதன் அடிப்படையில் நெல்லின் ஈரப்பதத்தை எத்தனை சதவீதம் வரை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவிக்கும்.

    • காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்தன.
    • பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

    இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக் குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளதாக தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து மத்திய குழு இன்று ஆய்வு செய்கிறது. யூனுஸ், பிரபாகரன், போயா ஆகிய தொழிநுட்ப வல்லுநர்கள் அடங்கிய மத்திய குழு இன்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும், பயிர் பாதிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    இந்த ஆய்வின் முடிவில், அவர்கள் மத்திய அரசுக்கு அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து தமிழக அரசுக்கு உத்தரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
    • மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

    அந்தக் கடிதத்தில், 'பிப்ரவரி மாதத்தில் (இம்மாதம்) நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் சுமார் ஒரு லட்சம் எக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்து.

    வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி அறுவடை பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பதம் அளவு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

    இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளதாக தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகிறது.

    • மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

    அந்தக் கடிதத்தில், 'பிப்ரவரி மாதத்தில் (இம்மாதம்) நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் சுமார் ஒரு லட்சம் எக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்து.

    வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி அறுவடை பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பதம் அளவு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

    இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உள்ளது. அதாவது, மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளனர். அதன்பின்பு, மத்தியக்குழு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு வருகிறதா என்பதையும் தெரிந்து கொண்டார்.
    • 100 நாள் வேலை திட்டத்தின் பயன்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் வேலை வழங்கப்படுகிறது, ஒரு நாள் வேலைக்கான கூலி என்ன போன்றவை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றிய ஊராட்சிகளில் திருக்கடையூர், தலையுடையார் கோயில்பத்து, மற்றும் முடிதிருச்சம்பள் ஊராட்சியில் உள்ள வட்டார நாற்றங்கால் உற்பத்தி மையத்தை ஆய்வு செய்தனர். மழை நீர் சேகரிப்பு குறித்தும் கேட்டறிந்தனர்.

    இதில் மத்திய ஆய்வு குழு பொறுப்பு அலுவலரும், மத்திய ஜவுளித்துறை துணை செயலாளருமான சுக்லா, தொழில்நுட்ப விஞ்ஞானி ஸ்ரீ சௌஸ்ரீ பாபு பாலாசாஹிப் மற்றும் குழுவினர் 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் கலந்துரையாடினர்.

    அப்போது பொறுப்பு அலுவலர், 100 நாள் வேலை திட்டத்தின் பயன்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் வேலை வழங்கப்படுகிறது, ஒரு நாள் வேலைக்கான கூலி என்ன போன்றவை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு வருகிறதா என்பதையும் தெரிந்து கொண்டார். மேலும் நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்துவதற்கான சோதனை ஆய்வு செய்து காண்பிக்கப்பட்டது.

    இதனையடுத்து மத்திய குழுவினர் அந்த மையத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மரங்க் கன்றுகள் பூக்கள், பழங்கள், மூலிகை செடிகள் உள்ளிட்டவைகளின் நாற்றாங்களை பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள், மைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, தண்ணீர் ஊற்றினர். ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், உதவி திட்ட அலுவலர் பிரபாகர், செயற்பொறியாளர் பிரேம்குமார், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, குத்தாலம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், ஜனகர், தமிழ்ச்செல்வன் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஸ்ரீதர், ஊராட்சி செயலாளர் முருகவேல் மற்றும் அலுவலர்கள், மகளீர் சுயகுழுவினர் உள்ளிட்ட பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் மொத்த சேத மதிப்பு தோராயமாக ரூ.199 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    வேலூர்

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள சேத பாதிப்புகளை மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

    மத்திய நிதியமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையில் மத்திய நீர்வள ஆதார முகமையின் இயக்குநர் தங்கமணி மற்றும் பவ்யா பாண்டே ஆகியோருடன் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு மின் ஆளுமை நிர்வாக இணை இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் மழை வெள்ள சேத பாதிப்புகள் குறித்து கூறப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். 9 கால்நடைகள், 14 ஆயிரத்து 800 கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளன. மழைக்கால நிவாரண முகாம்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். 627 வீடுகள் பகுதியாகவும், 72 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் மொத்தம் 2.32 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தொடர் மழையால் 101 ஏரிகளில் 83 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

    அதேபோல், மாவட்டம் முழுவதும் 68 இடங்களில் 101.08 கி.மீ சாலைகள் சேதமடைந்துள்ளன. 16 தரைப்பாலங்கள், சிறுபாலங்கள், 30 ஏரி, குளங்கள், ஊரணிகள் சேமதடைந்துள்ளன. 9 மேல்நிலை குடிநீர் தொட்டிகள், 38 ஆழ்துளை கிணறுகள், 16,457 மீட்டர் தொலைவுக்கு குடிநீர் குழாய்கள், 18 திறந்தவெளி கிணறுகள் சேதமடைந்துள்ளன.

    மாவட்டத்தில் நெற்பயிர்களுடன் தோட்டக்கலை பயிர்கள் என மொத்தம் 606.95 ஹெக்டேர் அளவுக்கு சேதமடைந்துள்ளன.பாதிப்பு கணக்கெடுக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

    தொடர்ந்து நடந்து வருவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். வேலூர் மாவட்டத்தில் மொத்த சேத மதிப்பு தோராயமாக ரூ.199 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகளால் வேளாண்மை துறையின் 2781 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 2050 ஹெக்டேர் வேளாண்மை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 382 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.

    வேளாண்துறை சேதங்களுக்கு ரூ.3.29 கோடி. தோட்டக்கலை துறைக்கு ரூ.52 லட்சம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறைக்கு ரூ.11.8 கோடி, நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5.4 கோடி. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.5.38 கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.2.18 கோடி.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ரூ.1 கோடி. பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் மருத்துவ கட்டிடங்கள் ரூ.1 கோடியே 27 லட்சம், வருவாய்த்துறைக்கு ரூ.78 லட்சமும் என மொத்தமாக ரூ.29 கோடியே 44 லட்சம் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது என மத்திய குழுவிற்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான குழுவினர் இன்று காலை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

    குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலை எங்கும் மழைநீர் தேங்கியது. விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பயிர்கள் அழுகின.

    மழை நீரில் மூழ்கியுள்ள பயிர்கள்

    இதையடுத்து, தமிழகத்திற்கு விரைந்த மத்தியக் குழுவினர் இரண்டு பிரிவாக பிரிந்து கடந்த 3 நாட்களாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர், இன்று காலை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வு குறித்து மத்தியக் குழுவினர் முதல்வரிடம் ஆலோசனை நடத்தினர்.


    கன்னியாகுமரியில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் நேரில் ஆய்வுசெய்தார்.
    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. கடந்த 12-ம் தேதி முதல் மிக கனத்த மழை கொட்டியது. அன்று முதல் தொடர்ந்து பெய்த மழையால் மாவட்டமே வெள்ளக் காடானது. பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி நேரில் ஆய்வுசெய்தார். தோவாளை பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வுசெய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே, மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நேற்று தமிழகம் வந்தடைந்தது. 

    இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் இன்று கன்னியாகுமரிக்கு செல்கின்றனர்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தரும் இந்தக் குழுவினர், அதன்பின் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு செல்ல உள்ளனர்.

    கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் வெள்ள சேதம் தொடர்பான புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின், வடக்கு தாமரைக்குளம், குமாரகோவில், பேயன்குழி, வைக்கல்லூர் ஆகிய பகுதிகளில் 11 இடங்களில் சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட உள்ளனர். இதன்பின், அவர்கள் இரவு மீண்டும் தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். 

    கஜா புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு இரண்டாவது கட்டமாக 353 கோடி ரூபாய் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #GajaCyclone #GajaCycloneRelief
    புதுடெல்லி:

    கஜா புயல் நாகை அருகே வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதனால் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தன. பாதிப்படைந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதையடுத்து, கஜா புயல் பாதிப்படைந்த பகுதிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.

    அதன்பின்னர், டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து முதல்கட்ட அறிக்கை அளித்தார்.
    கஜா புயல் நிவாரணமாக 15000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை விரைந்து அனுப்புமாறு கோரினார்.

    அதைத்தொடர்ந்து, சென்னை வந்த மத்திய குழுவினர் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வறிக்கை மத்திய அரசிடம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு இரண்டாவது கட்டமாக ரூ.353 கோடி நிதியை ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த நிவாரண தொகையை மாநில பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அளித்துள்ள இடைக்கால அறிக்கையின் படியும், மத்திய குழுவின் ஆய்வறிக்கையின் படியும் இந்த நிதியை ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #GajaCyclone #GajaCycloneRelief
    அரசு வீடு கட்டி கொடுக்கும் வரை புயல் பாதித்த மக்கள், தார்பாயிலேயே அகதிகளாக வாழ வேண்டுமா? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam #GajaStorm

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த வாரம் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு உதவிகளை செய்தார். மீண்டும் புயல் பாதித்த பகுதியை பார்வையிட சென்றுள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளை மீண்டும் பார்வையிடுவதற்காக எங்களுடைய குழுவை சார்ந்தவர்கள் இப்போது திருச்சி செல்கிறோம்.

    அங்கு ஏற்பட்ட பாதிப்பு மிக மோசமான ஒரு பாதிப்பு. அதில் இருந்து அந்த மக்கள் மீண்டு வருவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம்.

    தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டி கொடுப்பதாக அறிவித்துள்ளது. அந்த வீடுகள் கட்டி முடித்து ஒப்படைப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம். அதுவரையில் அந்த மக்கள் தார்ப்பாய்களின் கீழ் அகதிகளாக குடியிருக்க வேண்டுமா?

    எனவே இதை எல்லாம் முழுமையாக அறிந்து ஆய்வு செய்வதற்காக எங்கள் குழு தற்போது செல்கிறது.


    மத்திய அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் இல்லை என்று சொல்லி உள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

    இந்த டெல்டா பகுதிகள் தான் நாட்டில் அனைவருக்கும் சோறு போடுகிறது. எனவே நாட்டிற்கு சோறு கொடுக்கும் ஒரு முக்கியமான பகுதி இது.

    புயல் பாதித்த பகுதியை தேசிய பேரிடராக அறிவிப்பதுதான் சரியாக இருக்கும். எனக்கு தெரிந்தது எல்லாம் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதுதான். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    பிரதமர் இவ்வளவு பெரிய பாதிப்பை நிச்சயமாக வந்து பார்த்து இருக்க வேண்டும். ஒன்றுபட்டு அதற்காக குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam #GajaStorm

    ×