search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jalshakti Abhiyan"

    • மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு வருகிறதா என்பதையும் தெரிந்து கொண்டார்.
    • 100 நாள் வேலை திட்டத்தின் பயன்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் வேலை வழங்கப்படுகிறது, ஒரு நாள் வேலைக்கான கூலி என்ன போன்றவை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றிய ஊராட்சிகளில் திருக்கடையூர், தலையுடையார் கோயில்பத்து, மற்றும் முடிதிருச்சம்பள் ஊராட்சியில் உள்ள வட்டார நாற்றங்கால் உற்பத்தி மையத்தை ஆய்வு செய்தனர். மழை நீர் சேகரிப்பு குறித்தும் கேட்டறிந்தனர்.

    இதில் மத்திய ஆய்வு குழு பொறுப்பு அலுவலரும், மத்திய ஜவுளித்துறை துணை செயலாளருமான சுக்லா, தொழில்நுட்ப விஞ்ஞானி ஸ்ரீ சௌஸ்ரீ பாபு பாலாசாஹிப் மற்றும் குழுவினர் 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் கலந்துரையாடினர்.

    அப்போது பொறுப்பு அலுவலர், 100 நாள் வேலை திட்டத்தின் பயன்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் வேலை வழங்கப்படுகிறது, ஒரு நாள் வேலைக்கான கூலி என்ன போன்றவை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு வருகிறதா என்பதையும் தெரிந்து கொண்டார். மேலும் நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்துவதற்கான சோதனை ஆய்வு செய்து காண்பிக்கப்பட்டது.

    இதனையடுத்து மத்திய குழுவினர் அந்த மையத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மரங்க் கன்றுகள் பூக்கள், பழங்கள், மூலிகை செடிகள் உள்ளிட்டவைகளின் நாற்றாங்களை பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள், மைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, தண்ணீர் ஊற்றினர். ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், உதவி திட்ட அலுவலர் பிரபாகர், செயற்பொறியாளர் பிரேம்குமார், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, குத்தாலம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், ஜனகர், தமிழ்ச்செல்வன் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஸ்ரீதர், ஊராட்சி செயலாளர் முருகவேல் மற்றும் அலுவலர்கள், மகளீர் சுயகுழுவினர் உள்ளிட்ட பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×