என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi Statue"

    • தென்காசி, கோவில்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றார்.
    • விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தூத்துக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா நடக்கிறது.

    இதற்கிடையே, தென்காசி, கோவில்பட்டி பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அங்கிருந்து கோவில்பட்டிக்கு புறப்பட்டார்.

    கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலையில் நகர திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் முன் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கோவில்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகர தி.மு.க. அலுவலகம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அங்கு நூலகத்தையும் திறந்துவைத்தார்.

    இதில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில், மின்வாரிய அலுவலகம் எதிரில், 3 சென்ட் இடத்தில் நகர தி.மு.க. அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 2 தளங்களை கொண்ட இந்த அலுவலகத்தின் முன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 8 அடி உயரத்தில் பீடம், 8 அடி உயரத்தில் சிலை என மொத்தம் 16 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

    மேலும், இந்த அலுவலகத்தில் தரைதளத்தில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தில் வைப்பதற்காக, தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன.

    அந்தப் புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் நூலகத்திற்கு வந்து அங்குள்ள புத்தகங்களை வாசிக்கலாம்.

    புதிதாக கட்டப்பட்ட கட்சி அலுவலகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    முதலமைச்சர் வருகையை ஒட்டி, கனிமொழி எம்பி., தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் ஆகியோர் கோவில்பட்டிக்கு வந்து, புதிய தி.மு.க., அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய இடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

    அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் வழிகாட்டுதலின்படி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவரும் தி.மு.க. நகரச் செயலாளருமான (மேற்கு) கருணாநிதி, நகர (கிழக்கு) பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில், நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

    • குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • 7-ந்தேதி காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் 6-ந் தேதி மாலை நாகர்கோவில் வருகிறார். அன்று நாகர்கோவிலில் நடைபெறும் தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் கலந்து கொள்கிறார். இதுபோல தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகிறார்கள்.

    மறுநாள் 7-ந்தேதி காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அதன்பின்பு நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.

    அன்று மதியம் அவர் குமரி மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அலுவலகத்திற்குள் சென்ற நிர்வாகிகள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் தி.மு.க. அலுவலகத்தின் முன் பகுதியில் சாலையின் இருபுறமும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 6 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு அதன்மேல் 8½ அடி உயரத்தில் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார். பின்னர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி, மனோ தங்கராஜ் ஆகியோரும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த 25 அடி உயர கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார். பின்னர் கட்சி அலுவலகத்திற்குள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக விழாவிற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜே. ஸ்டாலின், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் புத்தகம், பொன்னாடை வழங்கி வரவேற்றனர்.

    கட்சி அலுவலகத்திற்குள் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள். கட்சி அலுவலகத்திற்குள் நிர்வாகிகள் 80 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து கருணாநிதியின் சிலையை தயார் செய்த மீஞ்சூரைச்சேர்ந்த தீனதயாளனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசையும், தங்க மோதிரத்தையும் வழங்கி கவுரவப்படுத்தினார். பின்னர் மேயர் மகேஷ் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தின் மாதிரி நினைவு பரிசை அவர் வழங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, தாமரை பாரதி, சதாசிவம் ஒன்றிய செயலாளர்கள் பாபு, சுரேந்திரகுமார், மாநகரச் செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் வருகையையடுத்து அவ்வை சண்முகம் சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது.

    தி.மு.க. அலுவலகத்திற்குள் சென்ற நிர்வாகிகள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் தி.மு.க. அலுவலகத்தின் முன் பகுதியில் சாலையின் இருபுறமும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார்.
    • சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் அண்ணா பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை (வெண்கலம்) அமைக்கப்படும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சேலம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அண்ணா பூங்கா வளாகத்தில் மண்டபம் கட்டுமான பணி மற்றும் கருணாநிதி சிலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.

    சுமார் 1,713 சதுரடி பரப்பில் மண்டபம் அமைக்கப்பட்டு, அங்கு 20 அடி உயரத்தில் பிரமாண்டமாக கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை அவரது சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

    தி.மு.க. தொண்டர்கள் புடைசூழ தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார். அப்போது கட்சியினர் மகிழ்ச்சி பொங்க, ஆரவாரத்துடன் கலைஞர் புகழ் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். பிரமாண்ட கருணாநிதி சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

    கருணாநிதியையும், சேலத்தையும் பிரித்து பார்க்க முடியாது. திரையுலகில் உச்சம் தொடவும், அரசியல் அஸ்திவாரத்திற்கும் கருணாநிதி வாழ்வில் சேலம் முக்கிய பங்காற்றி உள்ளது. கருணாநிதிக்கு திருவாரூரை தாய் வீடு என்றால், சேலத்தை அவரது புகுந்த வீடு என்று குறிப்பிடும் அளவுக்கு சேலத்துடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. திருவாரூரில் வசித்தபோது நாடகத்துறையில் இருந்த அவர் திரைப்படத்துறைக்கு வந்தது சேலத்தில்தான்.

    சேலம் மாடர்ன் தியேட்டர்சில் இணைந்து அவர் மந்திரி குமாரி படத்துக்கு கதை வசனம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு படங்களுக்கு அவர் கதை வசனம் எழுத தொடக்கமாக அமைந்தது சேலம். அந்த காலத்தில் தனது தாயார் அஞ்சுகம் அம்மாளுடன் சேலம் கோட்டை பகுதியில் ஹமீத் சாகிப் தெருவில் கருணாநிதி ரூ.50 வாடகைக்கு குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் சேலத்துக்கும் கருணாநிதிக்கும் உள்ல நெருங்கிய தொடர்பை அறியலாம். அவருக்கு சேலத்தில் பிரமாண்டமான சிலை அமைந்திருப்பது சேலத்துக்கு கிடைத்த பெருமை என்று தி.மு.க. தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

    • சேலத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
    • ஒரே நேரத்தில் 80 பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு பஸ் நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார்.

    தனி விமானம் மூலம் சேலம் வந்த அவரை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆகியோர் வரவேற்றனர்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் 5 ரோடு அருகே உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் இரவு அஸ்தம்பட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்கினார்.

    சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலையை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் அவர் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம், போஸ் மைதானம், வ.உ.சி. மார்க்கெட், பெரியார் பேரங்காடி ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு 50 ஆயிரத்து 202 பயனாளிகளுக்கு ரூ.170.32 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    விழாவில் மேட்டூர் மற்றும் எடப்பாடி நகராட்சிகளில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேட்டூரில் ரூ.6.7 கோடி செலவிலும், எடப்பாடியில் ரூ. 5 கோடி மதிப்பிலும் புதிய பஸ் நிலையங்கள் கட்டப்படுகின்றன.

    போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி புனரமைத்து அழகுப்படுத்தும் பணிகள், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    மேலும் உத்தமசோழபுரம்-திருமணிமுத்தாற்றின் குறுக்கே மற்றும் தென்னங்குடிபாளையம்-வசிஷ்ட ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.235.82 கோடி யில் 331 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.653 கோடியில் இளம்பிள்ளை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கண சாலை ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் முதற்கட்டமாக 301 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் ரூ.102 கோடியில் கட்டப்பட்டுள்ள சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கான மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் உள்பட சேலம் மாவட்டத்தில் ரூ.1,367.47 கோடியில் முடிவுற்ற 390 பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    • தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலக்குழு கூட்டம் மண்டலத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
    • உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க ஆணையிட்ட முதலமைச்சருக்கு நன்றி.

    சென்னை:

    தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலக்குழு கூட்டம் மண்டலத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    முன்னாள் முதலமைச்சரும் முத்தமிழ் அறிஞருமான டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதையொட்டி திராவிட இயக்க சிந்தனைகளை திரைப்பட வசனங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் விதைத்து சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர், தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்று தந்தவர், மாநில உரிமைகளுக்காக போராடிய மாபெரும் தலைவர், நவீன தமிழகத்தை மட்டுமல்ல நவீன இந்தியாவையும் உருவாக்கியவர் என புகழப்படும் கருணாநிதியை போற்றும் வகையில் மண்டலம் 1-ல் பம்மல் அலுவலகத்தில் முன்பு நுழைவு வாயலில் முழு அளவு கலைஞரின் வெண்கல சிலை அமைக்க ஏகமனதாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு மேயர் அனுப்பி வைக்க இக்கூட்டம் முடிவு செய்கிறது.

    உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க ஆணையிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தி.மு.க. முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார்.
    • அலமேலு ஆறுமுகம், கருணாநிதி சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கி னார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், கருணாநிதி சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

    அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் உதயசூரின் எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், வடக்கு ஒன்றிய செயலாளர் அரவிந்தன், சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தமிழகத்தில் கற்க விடாமல் தி.மு.க. எதிர்த்து வருவதாக பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
    • பா.ஜ.க. அரசிற்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அடுத்த பெரியபணிச்சேரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் கலைஞர் படிப்பகம் தொடக்க விழா நடைபெற்றது.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கருணாநிதியின் வெண்கல உருவ சிலை மற்றும் புதிய படிப்பகத்தை திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நான் திறந்து வைக்கும் கலைஞர் கருணாநிதியின் 2-வது சிலை இதுவாகும். ஏற்கனவே கடந்த ஜூலையில் திருவண்ணாமலையில் நான் முதல் சிலையை திறந்து வைத்தேன்.

    கடந்த 2018-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நாங்கள் ஒரு பேனாவையும், பேப்பரையும் அவரிடத்தில் கொடுத்து, உங்களுக்கு பிடித்தமான பெயர்களை எழுதுங்கள் என்று கூறினோம்.

    முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் சுற்றி நின்று தங்களது பெயர்களை கலைஞர் எழுத மாட்டாரா என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

    ஆனால், அந்த நேரத்தில் கூட அவர் எழுதியது "அண்ணா" என்ற பெயரை தான். இதிலிருந்து கருணாநிதி பேரறிஞர் அண்ணா மீது எந்த அளவிற்கு மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார் என்று நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

    கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் தலைமுறை தலைமுறையாக தமிழக மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

    கலைஞருடைய திட்டங்களில் பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை இருந்தது. கலைஞரின் திட்டங்கள் அனைத்தும் சமூக பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் திட்டங்களாக இருந்தது. 3 கிலோ மீட்டருக்கு ஒரு அரசு பள்ளியை நிறுவினார்.

    மாணவர்களுக்கு வாரந்தோறும் சத்துணவுடன் முட்டையும் வழங்கினார். உயர்கல்வி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.

    பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார். கலைஞர் வழியில் தற்போதைய நமது முதலமைச்சரும் மத்திய அரசாங்கமே திரும்பிப் பார்க்கும் வகையில், பல நல்ல திட்டங்களை மக்களுக்காக செயலாற்றி வருகிறார்.

    கலைஞர் நம்மிடம் இருந்தால் என்னென்ன நல்ல திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்திருப்பாரோ அதைத்தான் தற்போது தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார். குறிப்பாக இல்லந்தோறும் கல்வி, பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மேலும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்ட திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

    வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இந்த காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அத்துடன் பெண்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

    நமது திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்று இந்த நூலகம் திறக்கப்பட்டு உள்ளது. அதுதான் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் உள்ள வித்தியாசம். என்றுமே தி.மு.க. மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.

    கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் அதானி 2-ம் இடத்திற்கு முன்னேறி வந்துள்ளார். தற்போது இந்தியாவில் அதானி விமான நிலையம், அதானி ரெயில் நிலையம், அதானி ஹார்பர் ஆகியவை வந்து உள்ளது.

    இதற்கெல்லாம் காரணம் அவர் மோடியின் நெருங்கிய நண்பர் என்பதாலே. மோடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போதெல்லாம் விமானி இல்லாமல் கூட பயணம் செய்வார்.

    ஆனால் "அதானி" இல்லாமல் ஒரு நாள் கூட பயணம் செய்ததில்லை. இது குறித்த ஆதாரங்களை புகைப்படத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியபோது தான் அவர் மீது வழக்கு பதிவு செய்து, பாராளுமன்றத்திற்கு வர முடியாமல் செய்தார்கள்.

    ஆனால் உச்சநீதிமன்றம் அவர்களது தலையில் சரியான கொட்டு கொட்டி, ராகுல் காந்தி மீது விதித்த தடையை ரத்து செய்தது.

    இதுவே பல்வேறு கட்சிகளின் கூட்டணியான "இந்தியா" அமைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

    இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தமிழகத்தில் கற்க விடாமல் தி.மு.க. எதிர்த்து வருவதாக பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். இந்தி உள்ளிட்ட பிற மொழிகளை கற்பதற்கு நாங்கள் என்றுமே தடையாக இருந்ததில்லை. மாறாக இந்தி திணிப்பை தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

    உங்களது பா.ஜ.க. அலுவலகம் சென்னை தியாகராஜ நகரில் தான் உள்ளது. அதன் அருகிலேயே இந்தி பிரச்சார சபா உள்ளது. நீங்கள் அங்கே சென்று தாராளமாக இந்தி கற்றுக்கொள்ள வேண்டியது தானே, உங்களை யார் தடுத்தார்கள். மணிப்பூரில் 5 மாதங்களுக்கும் மேலாக வன்முறை கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிகிறது.

    அதனை தடுக்க பா.ஜ.க. அரசிற்கு துப்பில்லை. பா.ஜ.க. அரசிற்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டணியால் இந்தியா என்ற வலுவான அமைப்பு உருவாகி உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை தெளிவாக முடிவெடுத்து சிந்தித்து நாம் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளரும் திருபெரும்புதூர் பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ.வுமான க.சுந்தர், மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி, இ.கருணாநிதி எம்எல்ஏ, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை, மனோகரன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம், கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜிஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் தி.க.பாஸ்கரன், கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் பா.சுதாகர் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதியின் சிலையை நெல்லை மாநகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • நெல்லை மாநகராட்சியிலும் கருணாநிதி சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    நெல்லை:

    தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது சிலையை நெல்லை மாநகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதோடு மட்டுமல்லாமல் நெல்லை மாநகராட்சியிலும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு கருணாநிதி சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில் மாநகராட்சி முன்பு அமைந்துள்ள அண்ணா சிலை அமைக்கப் பட்டு நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதனை அகற்றிவிட்டு புதிதாக முழு உருவ அண்ணா வெண்கல சிலையும், அதன் அருகிலேயே கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையும் அமைப்பதற்கு அனுமதி கோரி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு சென்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து மேயர் சரவணணிடமும் மனு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் மாலை ராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்தியானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், பேச்சிப் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மகளிரணி அனிதா, நெல்லை மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார், முன்னாள் நெல்லை மாவட்ட துணை செயலாளர் நவநீதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழா, திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது.
    • சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் 8 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    கருணாநிதி நூற்றாண்டு விழா, திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 76-வது நிகழ்ச்சியாக, கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்று உள்ளது.

    சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் 8 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    சிலையினை காணொலி காட்சி மூலமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன் முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன், துணை மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏற்றவாறு ஆராய்ந்து சிலையை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும் என்றார்.
    • கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    சென்னை:

    சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருவாரூர் தொகுதி வாளவாய்க்கால் ரவுண்டானாவில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை நிறுவ அரசு முன்வருமா? என்று பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியாதவது:-

    திருவாரூர் தொகுதி வாளவாய்க்கால் ரவுண்டானா நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்புதல் பெற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    அதேபோல். பொது இடத்திலோ சாலைகளிலோ சாலை ஓரத்திலோ சிலை வைப்பதற்கு தடை உள்ள காரணத்தினால் தான் உடனடியாக அனுமதி வழங்கப்பட முடியவில்லை. அதற்கு ஏற்றவாறு ஆராய்ந்து சிலையை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும் என்றார்.

    ×