search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Porkichi"

    • தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மதுரை கல்லூரி வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

    மதுரை

    சேலத்தில் வருகிற டிசம் பர் மாதம் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு பிர மாண்டாக நடைபெற உள் ளது. இதையொட்டி கட்சியி னரை உற்சாகப்படுத்தும் வகையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் செய்து செயல் வீரர்கள் கூட்டத்தில் பங் கேற்று வருகிறார்.

    அத்துடன் தி.மு.க. விற்காக உழைத்த மூத்த முன்னோடிகளுக்கு அவர் பொற்கிழி களும் வழங்கி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்தார்.

    விமான நிலையத்தில் அவரை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாள ருமான பி.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன், மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோரது தலைமையில் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் மற்றும் திரளான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் இரவில் தனி யார் ஓட்டலில் தங்கிய அவர் இன்று காலை மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள துவாரகா பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்பத் தலை விகளுக்கான மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1,000 பெறும் பயனாளிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு உரிமைத் தொகை பெறுவதற் கான வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேலூரில் உள்ள கலைஞர் திடலில் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் மூத்த முன் னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைெபற் றது. விழாவில் கழக மூத்த முன்னோடிகள் 3 ஆயிரம் பேருக்கு ரூ.10 ஆயிரத்துடன் கூடிய பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் வழங்கி பேசினார்.

    அப்போது தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டி யலிட்ட அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து மாலை 5 மணிக்கு வண்டியூர் அருகே மஸ்தான்பட்டியில் சுங்கச் சாவடி எதிரில் கலை ஞர் திடலில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திருவுரு வச்சிலையை திறந்து வைக் கிறார். மேலும், 100 அடி கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடிேயற்றுகிறார்.

    இதையடுத்து விரகனூர் அருகே ரிங் ரோட்டில் அமைந்துள்ள கருணாநிதி திடலில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோச னைகள் வழங்குகிறார். பின்னர் இரவில் அழ கர்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.

    நாளை (21-ந்தேதி, வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள முத்தப்பன்பட்டி யில் நடைபெறும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா நினைவேந் தல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    தொடர்ந்து அங்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் தலைமை யில் நடைபெறும் விழாவில் தி.மு.க. மூத்த முன்னோடிக ளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார். மாலையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடை பெறும் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கி றார்.

    மாலை 5 மணிக்கு மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மதுரை கல்லூரி வளாகத்தில் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற் கிழி வழங்குகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டத் தில் 7,000 மூத்த முன்னோடி களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.7 கோடி மதிப்பில் பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி, மணிமாறன், தளபதி எம்.எல்.ஏ. மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
    • லின் பங்கேற்று இளைஞர் அணி யினருக்கு பல்வேறு ஆலோச னைகளை வழங்கு கிறார்.

    மேலூர்

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு மேலூரில் கலை ஞர் திடலில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற் றாண்டு விழா நடைபெறு கிறது. விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலா ளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின் பங்கேற்று, தி.மு.க. மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கிறார். அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு வண்டியூர் அருகே உள்ள மஸ்தான் பட்டியில் கருணாநிதியின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் 100 அடி உயர கொடிக்கம்பத் தில் தி.மு.க. கொடியேற்றுகிறார்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இதே போல் கொடியேற்ற நிகழ்ச்சியினை தொடர்ந்து மதுரை விரகனூர் சுற்றுச்சா லையில் அமைந்துள்ள கலைஞர் திடலில் ஒருங்கி ணைந்த மதுரை மாவட்டத் தின் இளைஞர் அணியினர் பங்கேற்கும் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர் அணி யினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கு கிறார். விழாவிற்கான ஏற்பா டுகளை அமைச்சர் பி. மூர்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் மற்றும் மாவட்ட கழகத்தினர், இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.

    • தி.மு.க. முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார்.
    • அலமேலு ஆறுமுகம், கருணாநிதி சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கி னார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், கருணாநிதி சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

    அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் உதயசூரின் எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், வடக்கு ஒன்றிய செயலாளர் அரவிந்தன், சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • காலை 9.20 மணிக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா கொடியேற்றுகிறார்.
    • அனைவரும் வருகை புரிந்து விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், பயனாளிகள், தி.மு.க.தொண்டர்கள் திரளாக கலந்து சிறப்பிக்குமாறு பொதுப் பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (19- ந் தேதி) கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் காலை 9.20 மணிக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா கொடி யேற்றுகிறார். காலை 9.40மணிக்கு கூவனூரில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதி 2022- 2023ன்கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை திறப்பு விழாநடக்கிறது.

    காலை 10 மணிக்கு மாடாம்பூண்டியில் கருணா நிதி நூற்றாண்டு விழா கொடியேற்றியும், காலை 10.30 மணியளவில் லா.கூடலூர் தியாகதுருகத்தில் பால் முகவர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சியிலும், தொடர்ந்து மதியம் 12 மணி யளவில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பகல் 12.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திலும், மாலை 5 மணியளவில் உலகங்காத்தான் கிராமத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    பின்னர், மாலை 6.15 மணிக்கு மாடூர் ஏ.என்.பி திருமண மண்டபத்தில் தி.மு.க. முன்னோடி களுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாலை 7.15 மணியளவில் எலவனாசூர்கோட்டையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கொடியேற்று விழாவிலும், நிறைவாக மாலை 7.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை லலிதா திருமண மண்டபத்தில் திமுக சமூக வலைதள செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடலும், தி.மு.க.முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் கள்ளக் குறிச்சி மாவட்டதைச் சேர்ந்த பொது மக்கள், பயனாளிகள், தி.மு.க. முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரும் வருகை புரிந்து விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் தி.மு.க. மூத்த தொண்டர்கள் 1,040 பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • 1,040 மூத்த தி.மு.க. தொண்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ் அடங்கிய பொற்கிழியை வழங்கி பேசினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் தி.மு.க. மூத்த தொண்டர்கள் 1,040 பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    பொற்கிழி வழங்கும் விழா சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த மற்றும் நலிந்த தி.மு.க தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டியில் நேற்று மாலை நடந்தது.

    சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வ கணபதி வரவேற்று பேசி னார். அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், வக்கீல் ராஜேந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதயநிதி ஸ்டாலின்

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர், 1,040 மூத்ததி.மு.க. தொண்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ் அடங்கிய பொற்கிழியை வழங்கி பேசினார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

    கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு எனது கைகளால் பொற்கிழி

    வழங்குவதை நான் பெரு மையாக கருதுகிறேன். காரணம் நான், காண கிடைக்காத அண்ணா வையும், பெரியாரையும் உங்கள் வழியாக காண்கி றேன். தி.மு.க.வின் அனைத்து இன்ப, துன்பங்க ளிலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பங்கு மிகப்பெரியது. அவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக முழுவதும் சுமார் 20 மாவட்டங்களில் தற்போது பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதிகளிலும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்படும்.

    மோடிக்கு விசுவாசம்

    அதேபோல் தி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளராக நான் பொறுப்பேற்ற பிறகு இளைஞர் அணி சார்பில் கூடுதலான நிதியாக சுமார் 24 கோடி ரூபாய் வங்கியில் இட்டு வைப்பு தொகையாக சேமிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையில் இருந்து

    கிடைக்கும் வட்டி தொகையை இரு மாதங்க ளுக்கு ஒரு முறை பெறப்பட்டு கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் அவர்கள் நலம் சார்ந்த செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

    இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவர் இருந்து வரும் கட்சியின் முதல் எழுத்தான அண்ணாவையே மறந்து, அவர் கருத்துகளுக்கு எதிரான கொள்கை கொண்ட நபர்களுடன் விசுவாசமாக உள்ளார். குறிப்பாக ஜெயலலிதா, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு விசுவாசம் இல்லாத நிலையில், தற்போது மோடி, அமித்ஷா, கவர்னர் ஆகியோருக்கு மட்டுமே விசுவாசமாக செயல்படுகிறார்.

    சுயமரியாதை

    தற்போது இடைத்தேர்த லுக்காக ஈரோடு பகுதியில் முகாமிட்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள பெரியாரின் நினைவு இல்லத்திற்கு சென்று, தனது தன்மானம், சுயமரியாதையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும். அதற்கு உங்கள் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான நேரு பணியாற்றி வருகிறார். அவருக்கு நீங்கள் உறுதுணையாக இருந்து வெற்றியை ஈட்டித்தர வேண்டும்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    ×