கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: பொதுமக்கள் பங்கேற்க அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு

காலை 9.20 மணிக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா கொடியேற்றுகிறார்.அனைவரும் வருகை புரிந்து விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: பொதுமக்கள்  பங்கேற்க அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், பயனாளிகள், தி.மு.க.தொண்டர்கள் திரளாக கலந்து சிறப்பிக்குமாறு பொதுப் பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (19- ந் தேதி) கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் காலை 9.20 மணிக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா கொடி யேற்றுகிறார். காலை 9.40மணிக்கு கூவனூரில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதி 2022- 2023ன்கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை திறப்பு விழாநடக்கிறது.

காலை 10 மணிக்கு மாடாம்பூண்டியில் கருணா நிதி நூற்றாண்டு விழா கொடியேற்றியும், காலை 10.30 மணியளவில் லா.கூடலூர் தியாகதுருகத்தில் பால் முகவர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சியிலும், தொடர்ந்து மதியம் 12 மணி யளவில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பகல் 12.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திலும், மாலை 5 மணியளவில் உலகங்காத்தான் கிராமத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

பின்னர், மாலை 6.15 மணிக்கு மாடூர் ஏ.என்.பி திருமண மண்டபத்தில் தி.மு.க. முன்னோடி களுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாலை 7.15 மணியளவில் எலவனாசூர்கோட்டையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கொடியேற்று விழாவிலும், நிறைவாக மாலை 7.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை லலிதா திருமண மண்டபத்தில் திமுக சமூக வலைதள செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடலும், தி.மு.க.முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் கள்ளக் குறிச்சி மாவட்டதைச் சேர்ந்த பொது மக்கள், பயனாளிகள், தி.மு.க. முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரும் வருகை புரிந்து விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com