என் மலர்
நீங்கள் தேடியது "Karunanidhi Centenary celebration"
- ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான ஒத்திகை பழவேற்காடு கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.
- எலைட் பள்ளியின் 100 மாணவர்களும் பள்ளியின் தாளாளர் ஜெபஸ்டின் மற்றும் இருபதுக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
சென்னை:
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை இணைந்து ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான ஒத்திகை நேற்று (சனிக்கிழமை) மாலை பழவேற்காடு கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.
அதில் தன்னார்வலர்கள் மற்றும் செங்குன்றம் பகுதியில் இயங்கி வரும் எலைட் பள்ளியின் 100 மாணவர்களும் பள்ளியின் தாளாளர் ஜெபஸ்டின் மற்றும் இருபதுக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அப்போது ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு 9,300 பனை விதைகளை நடவு செய்தனர். இதனை செயல்படுத்திட எவ்வளவு நேரம் செலவாகிறது என்பதை அறிந்து கொள்ளவே இந்த ஒத்திகை நடைபெற்றது.
மேலும் ஒரு பனை விதைக்கும் இன்னொரு பனை விதைக்கும் ஒரு மீட்டர் தூரம் இருக்க வேண்டும் பனை விதைகளை எப்படி குறுக்கும் நெடுக்குமாக நட வேண்டும் விதையை எந்த நிலையில் குழியில் வைக்க வேண்டும் போன்ற அனைத்து செய்முறை விளக்கங்களும் செய்து காட்டப்பட்டன.
இதனை பின்பற்றியே, ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்ய திட்டமிடபட்டுள்ளது.
ஒத்திகை நிகழ்ச்சியை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணனின் மகனும், பனை ஆர்வலருமான கார்த்திக் நாராயணன் தலைமை தாங்கி விதை நடவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிரீன்நீடா அமைப்பினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜ வேலு, இணை ஒருங்கிணைப்பாளர் ரபிக் முகமது, திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் மற்றும் பனை வாரிய அலுவலர்கள் குமரன், ஜெபராஜ் டேவிட், தன்னார்வலர் பொன்னேரி பாலகிருஷ்ணன், தங்கமுத்து, முனீஸ்வரன், முகப்பேர் ராஜ்குமார், மதுரவாயல் அலெக்ஸ் , ஆர்.கே நகர் ராஜேஷ், பழவேற்காடு சுரேஷ்குமார், மகளிர் ஆர்வலர்கள் ஆனந்தி, விஜயலட்சுமி, முருகேஸ்வரி,சிவசாந்தி, ராஜ புஷ்பம், சாந்தி, கவுசல்யா உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
- தங்கை கனிமொழி முன்னெடுக்கும் “கலைஞர் 100”-ல் வினாடி-வினா போட்டி முயற்சி பாராட்டத்தக்கது.
- செப்டம்பர் 15-ம் நாள் தொடங்கவுள்ள உள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில் தங்கை கனிமொழி முன்னெடுக்கும் "கலைஞர் 100"-ல் வினாடி-வினா போட்டி முயற்சி பாராட்டத்தக்கது. செப்டம்பர் 15-ம் நாள் தொடங்கவுள்ள உள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
- கூட்டத்தில் அமைச்சர்கள், விழாக்குழு உறுப்பினர்கள், அணிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- உலக புகைப்பட தினத்தையொட்டி பத்திரிகை புகைப்பட கலைஞர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
சென்னை:
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தி.மு.க. சார்பில் சிறப்பாக நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அமைச்சர்கள், விழாக்குழு உறுப்பினர்கள், அணிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் பத்திரிகை புகைப்பட கலைஞர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். மேலும் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
- இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
- பரிசோதனையில் 4 ஆயிரத்து 56 நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
சென்னை :
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் கடந்த 24-ந்தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 885 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டுள்ளனர்.
இந்த மருத்துவ முகாமில் 35 ஆயிரத்து 138 பேர் சித்தா மற்றும் இந்திய மருத்துவத்திற்காக பதிவு செய்து பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பரிசோதித்து நோய் கண்டறியப்பட்டவர்கள் விவரம் வருமாறு:
* மருத்துவ முகாமில் வினியோகிக்கப்பட்ட மருந்துகளின் செலவு தொகை ரூ.42 லட்சத்து 31 ஆயிரத்து 404 ஆகும்.
* நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்காக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 48 பேர் பரிசோதித்து கொண்டனர்.
* நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று 14 ஆயிரத்து 471 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் 4 ஆயிரத்து 56 நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
* ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று 19 ஆயிரத்து 217 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் 5 ஆயிரத்து 576 ரத்த அழுத்த நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
* நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று 8 ஆயிரத்து 333 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் இந்த 2 நோய்களினாலும் 2 ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
* கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை 7 ஆயிரத்து 849 பேர் மேற்கொண்டனர். இதில் 762 பேருக்கு கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டது.
* மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை 8 ஆயிரத்து 712 பேர் மேற்கொண்டனர். இதில் 1,176 பேருக்கு மார்பக புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டது.
* ரத்த சோகை கண்டறியும் பரிசோதனையை 44 ஆயிரத்து 165 பேர் செய்துகொண்டனர். இதில் 5 ஆயிரத்து 492 பேருக்கு ரத்த சோகை இருப்பது தெரிய வந்தது.
* சிறுநீரக செயல்பாட்டை கண்டறியும் பரிசோதனையை 28 ஆயிரத்து 553 பேர் செய்து கொண்டனர். இதில் 785 பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
* ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து கண்டறியும் பரிசோதனையை 28 ஆயிரத்து 658 பேர் மேற்கொண்டனர். இதில் 1,299 பேருக்கு ரத்த கொழுப்பு அதிகம் இருப்பது தெரிய வந்தது.
* 12 ஆயிரத்து 817 பேர் காசநோய் பரிசோதனை மேற்கொண்டனர். சளி பரிசோதனைக்கான 4 ஆயிரத்து 366 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 289 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
* 12 ஆயிரத்து 591 பேர் தொழுநோய் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 133 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேல் பரிசோதனையில் 14 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
* கொரோனா பரிசோதனை 936 பேர் செய்து கொண்டனர்.
* பல் பரிசோதனையை 13 ஆயிரத்து 685 பேர் மேற்கொண்டனர். இதில் 1,565 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
* இ.சி.ஜி. பரிசோதனையை 14 ஆயிரத்து 894 பேர் எடுத்துக் கொண்டனர். இதில் 1,238 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
* 'எக்கோ' பரிசோதனையை 7 ஆயிரத்து 20 பேர் எடுத்துக் கொண்டனர். இதில் 715 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
* முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 13 ஆயிரத்து 125 பேர் பதிவு செய்து கொண்டனர்.
* தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 852 பேர் கண் கண்ணாடி பெற்றனர்.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
- மருத்துவ முகாம்களில் காலையிலேயே பெருமளவில் மக்கள் திரண்டனர்.
- முன்பெல்லாம் சிறப்பு மருத்துவ வசதிகளை பெற அரசு ஆஸ்பத்திரிகளை தேடி செல்ல வேண்டும்.
சென்னை:
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. சென்னையில் மட்டும் 11 இடங்களில் நடந்தது.
சென்னை கோடம்பாக்கத்தில் மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவ முகாம்களில் காலையிலேயே பெருமளவில் மக்கள் திரண்டனர். பலர் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்திருந்தார்கள்.
முகாம்களில் பொதுமருத்துவம், பொதுவான மருத்துவ ஆலோசனைகள், ரத்தத்தில் கொழுப்புச்சத்து, முழு ரத்த பரிசோதனை, மார்பக பரிசோதனை, காசநோய் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, பல், கண், குழந்தை பேறு உள்ளிட்ட அனைத்து விதமான நோய்கள் கண்டறிதல், தேவைப்படுபவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
தனியார் ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்தால் ஆயிரக்கணக்கில் செலவாகும் என்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து உடல் பரிசோதனை செய்து கொண்டார்கள்.
மருத்துவ முகாம் பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முதலில் தொடங்கியவர் கலைஞர். அவர் வாழும் காலம் வரை இந்த துறைக்காக ஏராளமான திட்டங்களையும் பெருமளவு நிதியையும் ஒதுக்கினார்.
எனவே அவரது நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது சிறப்புக்குரியது.
முன்பெல்லாம் சிறப்பு மருத்துவ வசதிகளை பெற அரசு ஆஸ்பத்திரிகளை தேடி செல்ல வேண்டும். ஆனால் தளபதி ஆட்சியில் மக்களை தேடி மருத்துவம் சென்று கொண்டிருக்கிறது.
இன்று நடந்து வரும் முகாமிலும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு முகாமிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விபத்துகளில் சிக்கிய 1 லட்சத்து 672 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளார்கள். விபத்துகளினால் ஏற்படும் இறப்பும் குறைந்து இருக்கிறது என்றார்.
பின்னர் அவரிடம் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை தொடர்பாக சந்தேகம் கிளப்புவது பற்றியும் வெளிப்படை தன்மையாக நடக்கவில்லை என்றும் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, வெளிப்படை தன்மை என்றால் நேரு ஸ்டேடியத்தில் ஆயிரம் பேரை கூட்டி வந்து டேபிள் போட்டு அதில் வைத்தா ஆபரேஷன் செய்வார்கள்? சந்தேகம் கிளப்புபவர்களை இதய அறுவை சிகிச்சை செய்துகொள்ள சொல்லுங்கள். அப்போதுதான் தெரியும் என்றார் கோபமாக.
- சென்னையில் 10 இடங்களில் நாளை மருத்துவ முகாம் நடக்கிறது.
- சென்னையில் 10 இடங்களில் நாளை மருத்துவ முகாம் நடக்கிறது.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் நாளை 100 இடங்களில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இந்த மருத்துவ முகாம்களில் பொதுமருத்துவம், பல் மருத்துவம், பொது ஆலோசனை, உடலில் கொழுப்பு சத்து கண்டறிதல் முழு ரத்த பரிசோதனை, மார்பக பரிசோதனை, காச நோய் பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ, காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, சித்த மருத்துவம், தோல் நோய், குழந்தைப்பேறு, மன நல ஆலோசனை, கண் பார்வை குறைபாடு, தொழுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். தேவையானவர்களுக்கு மருந்துகளும் வழங்கப்படும்.
சென்னையில் 10 இடங்களில் நாளை இந்த முகாம் நடக்கிறது. முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:-
1. சென்னை நடுநிலைப் பள்ளி, கத்திவாக்கம்,
2. மான்போர்டு பள்ளி, சிங்கார வேலன் நகர், 4-வது தெரு, புத்தாகரம், கொளத்தூர்.
3. சென்னை மேல்நிலைப்பள்ளி, புதிய வண்ணாரபேட்டை.
4. சி.எஸ்.இ. பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஷேக் மேஸ்திரி தெரு, ராயபுரம்.
5. ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளி, செல்லியம்மன் நகர், அத்திப்பட்டு, அம்பத்தூர்.
6. சென்னை நடுநிலைப் பள்ளி, சிவன்கோவில் தெரு, வில்லிவாக்கம்.
7. சென்னை மேல்நிலைப் பள்ளி, புலியூர், ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்.
8. அரசு பள்ளி, சன்னதி தெரு, மதுரவாயல்.
9. ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப் பள்ளி, பொன்னியம்மன் கோவில் தெரு, ஆலந்தூர்.
10. பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பள்ளிக்கரணை.
- பொதுமக்கள் பயன்பெறலாம்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 இடங்களிலும் 24-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இந்த மருத்துவ முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை. சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி,பெண்களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்க்கொள்ளப்படுகிறது.
மேலும் பொது மருத்துவம். பொது அறுவை சிகிச்சை. மகளிர் மருத்துவம், கண், காது மூக்கு, தொண்டை, பல் மருத்துவம்,எலும்பியல் மற்றும் மனநல மருத்துவம்,காசநோய் பரிசோதனை மற்றும் தொழுநோய் உள்பட அனைத்திற்கும் சிறப்பு மருத்துவர்களால் பன்னோக்கு மருத்துவ சிகிச்சையும், இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாளு கலெக்டர் வளர்மதி கேட்டு கொண்டுள்ளார்.
- கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- நிகழ்ச்சியில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளார்.
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டம் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது.
இதற்காக ரூ.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பே திருவாரூர் வந்து விட்டார். நேற்று விழா ஏற்பாடுகளை கவனித்தார். இன்று காலையிலும் கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியை காண வந்திருந்தார்.
காலை 10 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சி மங்கள இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. முதலில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை வாசித்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதன் பிறகு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்தார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைக் கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அமர்ந்து பார்வையிட்டனர்.
காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் உணவு இடைவேளைக்கு பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.
கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திருவாரூர் வந்துள்ளனர். விழா நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் அதிக அளவில் போடப்பட்டு உள்ளது.
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
- ஆன்மீகவாதிகள் கலைஞரின் புகழ் குறித்து வாழ்த்தி பேசுகிறார்கள்.
சென்னை:
சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதி கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பொன்னழகு திருமண மண்டபத்தில் நடக்கிறது. பகுதி செயலாளர் கே.கண்ணன் தலைமை தாங்குகிறார். பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., மாநகராட்சி கணக்கு குழு தலைவர் க.தனசேகரன், ராசா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிவஞான பாலய சுவாமிகள், கோவை சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமானந்த குமரகுருபர அடிகளார், கவிஞர் இளைய கம்பன் ஆகிய ஆன்மீகவாதிகள் கலைஞரின் புகழ் குறித்து வாழ்த்தி பேசுகிறார்கள்.
நிகழ்ச்சியில் தமிழச்சி தங்க பாண்டியன், துணைமேயர் மகேஷ்குமார், காசி முத்துமாணிக்கம், அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., துரைராஜ், முருகேசன், தங்கராஜ் வாசுகி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
- நல்லூர் பகுதி 47-வது வார்டில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது
- வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜ், ஆறுமுகம், மனோகரன், பத்ரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டம் தெற்கு மாநகருக்கு உட்பட்ட நல்லூர் பகுதி 47-வது வார்டில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைமுன்னிட்டு தெருமுனைக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மேயர் தினேஷ்குமார், 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, பகுதி செயலாளர் மேங்கோ பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
கட்சியின் தலைமை கழக பேச்சாளர்கள் கந்தலி கண்ணன், மனோகர் பாபு ஆகியோர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து பேசினார்கள். இதில் வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜ், ஆறுமு–கம், மனோகரன், பத்ரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.