என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவிப்பு"

    • தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் வந்த வக்கீல் கைது
    • பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததினால் நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் புனித தேவ குமார் இவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

    இவர் 14.10.2022 அன்று மண்ணெண்ணை பாட்டிலுடன் தான் தீ குளிக்க போவதாக அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டிருந்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது :-

    குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான குழித்துறையில் இருந்து மடிச்சல் செல்லும் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் சுமார் 3 வருடமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்ய பல முறை புகார் அளித்தும் குழித்துறை நகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால் இந்த மாதம் 30-ந் தேதி சாலையை செப்பனிட வில்லை என்றால் தான் 31-ந் தேதி குழித்துறை சந்திப்பில் தீ குளிக்க போவதாக மண்ணெண்ணை பாட்டிலுடன் அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் விடுத்திருந்தார்.

    அந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் அவரிடம் சில நாட்களில் சாலையை செப்பனிடுவோம் என்றும், இப்போது எங்களிடம் போதிய நிதி இல்லை என்றும் பேச்சு வார்தையில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு உடன்படாத அவர் இன்று காலை தீ குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் தனது வீட்டில் இருந்து கிளம்பிய போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததினால் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவிநாசி, வீரபாண்டி, பல்லடம், பனப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

    அவிநாசி :

    பல்லடம், பனப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 5-ந்தேதி (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் : பல்லடம் துணை மின் நிலையம்( காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை): பல்லடம் நகரம், வடுகபாளையம், வடுகபாளையம்புதூா், அனுப்பட்டி, சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம், சின்னூா், கொசவம்பாளையம், வெங்கிட்டாபுரம்.

    பனப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை):பனப்பாளையம், சேரன் நகா், ராயா்பாளையம், நல்லாகவுண்டம்பாளையம், எல்லங்காடு, மாதப்பூா், மெஜஸ்டிக் சா்க்கிள், செந்தில் நகா், பெத்தாம்பாளையம், மாதேஸ்வரன் நகா், சிங்கனூா்.

    உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி அறிவித்துள்ளாா் மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: உடுமலை காந்தி நகா், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பாா்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனூா், குரல்குட்டை, மடத்தூா், மலையாண்டிப்பட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூா், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், வீரசோழபுரம்.

    அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா். மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூா், சக்தி நகா், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம்.

    வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா். மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வீரபாண்டி, பாலாஜி நகா், முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம் (வாய்க்கால்மேடு), குளத்துப்பாளையம், கரைப்பாளையம், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகா், லட்சுமி நகா், சின்னக்கரை, முல்லை நகா், டி.கே.டி.மில்.

    • அரசு ஆவணங்களை பாதுகாத்து வரும் பெட்டகமாக கோவை மாவட்ட ஆவணக்காப்பகம் செயல்பட்டு வருகிறது.
    • நிர்வாகம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    வரலாற்று சிறப்புமிக்க பழமையான ஆவணங்கள் பற்றி விவரங்களை கோவை மாவட்ட ஆவணக்காப்பகத்திற்கு தகவல்தெரிவிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரிக்கு எதிரில், அரசு ஆவணங்களை பாதுகாத்து வரும் பெட்டகமாக கோவை மாவட்ட ஆவணக்காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவணக்காப்பகத்தில் மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    வரலாறு புனைய அடிப்படை ஆதாரம் ஆவணங்களே. ஆவணங்கள் என்பது அரசுத் துறை ஆவணங்கள் மற்றும் தனியார் ஆவணங்கள் என்று இரு வகைப்படும் ஆதாரபூர்வமாக மற்றும் முழுமையான வரலாற்றை எழுதுவதற்கு அரசுத்துறை ஆவணங்கள் முக்கிய பங்கு வைக்கின்றன.

    நாட்டின் முழுமையான வரலாற்றை அறிவதற்கு அரசின் ஆவணங்கள் மட்டும் இன்றி தனியார் நிறுவனங்கள், கோவில்கள், கல்வி நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் ஆகியவற்றின் வசமுள்ள ஆவணங்களும் ஆராயப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தனிநபர், மத அமைப்புகள், கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், ஜமீன்தார்கள் மற்றும் சமஸ்தானங்களிடமிருந்தும் தனியார் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன

    இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் தங்கள் வாழ்ந்த இடங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து காந்திஜி, நேருஜி போன்ற முக்கிய தலைவர்களுக்கு கடிதங்கள் வாயிலாக தெரிவித்திருப்பின் அத்தலைவர்களிடமிருந்து வீரர்களுக்கு பதில் கிடைக்கப்பெற்றிருக்கும். இக்கடிதங்கள் பாதுகாக்கப்பட்டால் இந்திய சுதந்திரப் போர் பற்றி அறிய பயன்படும். ஆங்கிலேய ஆட்சியின்போது ஜமீன்தார்கள் மற்றும் ஆங்கிலேயரும் இடையே கடிதப் போக்குவரத்து நடைபெற்றிருக்கும். அப்படிப்பட்ட ஜமீன்தார்களின் சந்ததிகள் தம் மூதாதையர்கள் விட்டுச்சென்ற் வாழ்க்கை குறிப்புகள், காலக்குறிப்புகள் மற்றும் கடித போக்குவரத்துகள் நாட்டின் ஒரு பகுதியின் வரலாற்றை வெளிக்கொணர பேருதவியாக இருக்கும்.

    இந்து, கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் தங்கள் கோவில் பற்றிய புராணங்கள், வரலாற்று குறிப்புகள் புத்தக வடிவிலோ, செப்பு பட்டயங்களாகவோ, கிடைக்கப் பெற்றால் அவை சமய வழிபாடு பற்றி அறிய பேருதவியாக இருக்கும்.

    தங்களால் அனுப்பப்படும் ஆவணங்கள் விஞ்ஞான ரீதியாக செப்பனிட்டும், ஸ்கேன் செய்து கணினியில் பதியப்பட்டும் மற்றும் மைக்ரோ பிலிம் எடுத்தும் கோவை மாவட்ட ஆவண காப்பகத்தில் பாதுகாப்புடன் அது பற்றி விவரங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படும் வகையில் தேசிய தனியார் ஆவணங்கள் பதிவேட்டின் பதிந்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    எனவே, தங்களிடம் உள்ள பழமை வாய்ந்த பயனுள்ள ஆவணங்களை பாதுகாக்கவும், ஆராய்ச்சியாளர்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக, ஆவணங்களை பாதுகாக்கும் பெட்டகமாக திகழும் கோவை மாவட்டத்தில் உள்ள தொடர்புடைய முகவரி உதவி ஆணையர், மாவட்ட ஆவணக்காப்பகம், சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி எதிரில், சிறுவானி மெயின் ரோடு, பேரூர், கோவை - 641010.தொலைபேசி: 0422 - 2609474. என்ற முகவரியிலும், drccbe@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் ஆவணங்கள் அல்லது அது பற்றிய விவரங்களைஅனுப்பி வைக்கலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நகர-வட்டார தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • இந்த புதிய நகர வட்டார தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியில் 3 நகர தலைவர்கள், 10 வட்டார தலைவர்கள் பதிவிகள் உள்ளது. இந்த தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த புதிய தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைமையினால் அங்கீகரி க்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலோடு விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நகர, வட்டார காங்கிரஸ் தலைவர்களை மாவட்ட தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    இதில் ராஜபாளையம் நகரத் தலைவராக சங்கர் கணேஷ், சாத்தூர் நகர தலைவராக அய்யப்பன், ஸ்ரீவில்லி புத்தூர் நகர தலைவராக வன்னியராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல் ராஜ பாளையம் மேற்கு வட்டார தலைவராக கணேசன், ராஜபாளையம் கிழக்கு வட்டார தலைவராக கோபால கிருஷ்ணன், வெம்பக்கோட்டை கிழக்கு வட்டார தலைவராக கணேசன் வெம்பக்கோட்டை வடக்கு தலைவராக செல்வக்கனி, வெம்பக்கோட்டை மேற்கு வட்டார தலைவராக பவுல்ராஜ், சாத்தூர் மேற்கு வட்டார தலைவராக கார்த்திக், ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு வட்டார தலைவராக பாலகுருநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு வட்டார தலைவராக முருகராஜ், வத்ராயிருப்பு மேற்கு வட்டார தலைவராக லட்சுமணன், வத்ராயிருப்பு கிழக்கு வட்டார தலைவராக சுப்பிரமணியன் ஆகியோர் அறிவிக்கபட்டுள்ளனர்.

    இந்த புதிய நகர வட்டார தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர் ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது.
    • நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை

    திருப்பூர் : 

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் சோமனூரில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த மூன்று மாதங்களாக, ஆணைய தலைவர், அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மின் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. தொழில் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி அரசு உடனடியாக மின் கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    சாதா விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறை வரும் காலங்களில் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டணம் குறைக்கப்படும் வரை, மின் கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்து 70 நாட்கள் ஆகியுள்ளது. நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வாகை சூடவா படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தை கதைக்களமாக கொண்ட படத்தில் தஞ்சாவூரை சேர்ந்த நான் நடித்துள்ளது பெருமை அளிக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரை கதைக்களமாக கொண்டு பட்டத்து அரசன் என்ற திரைப்படம் கடந்த 25-ந் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாகவும், ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

    இதைவிட முக்கிய கதை பாத்திரங்களில் ராஜ்கிரன், ராதிகா, சிங்கம்புலி, ஆர்.கே. சுரேஷ், தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தை சேர்ந்த சிங். முருகா, அதே பகுதியை சேர்ந்த குழந்தை நட்சத்திரங்களான சிங். கோகுல், சிவானிசிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாப்பட்டை சேர்ந்த சற்குணம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட 6 படங்களை இயக்கி தயாரித்துள்ளார்.

    இதில் வாகை சூடவா படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் இயக்குனர் சற்குணம் மற்றும் படத்தில் நடித்த வல்லத்தை சேர்ந்த சிங். முருகா ஆகியோர் தஞ்சையில் உள்ள விஜயா தியேட்டருக்கு வந்தனர்.அவர்களுக்கு தஞ்சை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பலர் அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

    அப்போது இயக்குனர் சற்குணம் அளித்த பேட்டியில், பட்டத்து அரசன் நான் இயக்கிய ஏழாவது திரைப்படம் ஆகும்.

    அடுத்து ஒரு வெப் சீரியல் இயக்குகிறேன்.அதனை தொடர்ந்து நான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

    நடிகர் சிங். முருகா கூறும்போது, தஞ்சாவூர் மாவட்டத்தை கதைக்களமாக கொண்ட படத்தில் தஞ்சாவூரை சேர்ந்த நான் நடித்துள்ளது பெருமை அளிக்கிறது.மேலும் குழந்தை நட்சத்திரங்களாக நமது பகுதியை சேர்ந்த சிங் .கோகுல், சிவானிசிங் இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளனர்.

    படத்தை இயக்கிய சற்குணமும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.நான் அடுத்து வெப் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறேன். அதன் பின்னர் அடுத்த படங்களின் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

    • அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது.
    • சாலை சீரமைக்கப்படாமல் அப்பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலையூர் காடு, மூலக்காடு, மணியக்காரனுர், குறுக்கு பள்ளம் உள்ளிட்ட ஐந்து கிராமப் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கிருந்து தினமும் பணிக்கு செல்வோர் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து நேரடி போக்குவரத்து வசதியும், சாலை வசதியும் இல்லாததால் சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்து வசதிகளை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.

    இந்த கிராமங்களுக்கு செல்லும் சுமார் எட்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட முக்கிய சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பே உடைந்து சேதமாகி தார் சாலை முழுவதும் தரமற்ற மண் சாலையாக மாறிவிட்டது. தொடர்ந்து அதே சாலையில் அரசு பேருந்துகளும் பயணித்து வந்தன.

    இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை மிகவும் மோசமாக இருப்பதால் பேருந்துகள் செல்ல முடியாத தகுதியற்ற சாலையாக மாறிவிட்டதாக கூறி சேலம் மாவட்டம் மேச்சேரியில் இருந்து வந்த வழித்தட எண் 24, 8, 10 அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது.

    இப்பகுதியில் இருந்து மலையூர் காட்டிற்கு செல்லும் சுமார் 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் போக்குவரத்து வசதிக்காக இரண்டு மாதங்களாக தவித்து வருகின்றனர்.

    இது குறித்து மாலைமலர் நாளிதழில் விரிவான செய்தி கடந்த 3-ந்தேதி வெளியானது.இந்நிலையில் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து கழக அதிகாரிகளை மீண்டும் சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

    ஆனால் சாலை சீரமைக்கப்படாமல் அப்பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.எனவே இப்பகுதி மக்களின் தேவைக்கான தீர்வு மாவட்ட நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது.

    • தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும்.
    • தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும்

    சென்னை:

    மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழ நுழைவுத் தேர்வுக்கான (கியூட்) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.

    மத்திய பல்கலைக்கழகங்களில் 2023-ம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத்தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    அதன்படி, இளங்கலை படிப்புகளுக்கான கியூட் 2023 தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 முதல் 31-ந்தேதிகள் வரை நடைபெறும் என்றும், விண்ணப்பதிவு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 3-வது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடைபெறும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. https://www.nta.ac.in/cuetexam என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    பொது, ஓ.பி.சி., இ.டபுள்யு.எஸ். பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ. 650, எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ரூ.550. தேர்வு கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தவேண்டும்.

    கியூட் நுழைவுத் தேர்வை இந்தியாவிற்கு உள்ளே 259 நகரங்களில் உள்ள 489 தேர்வு மையங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    • பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
    • விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு "மஞ்சப்பை விருதுகள்" வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பபைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பப் படிவங்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே மாதம் 1ம்தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்துள்ளது.
    • மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சிறப்பு முகாம் தொடங்கி நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை மின்வாரிய அதிகாரி ஆய்வு செய்தார்.மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் இணைக்கவேண்டும் என முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

    இதனையடுத்து மீண்டும் சிறப்பு முகாம்கள் அமைத்து ஆதார் எண் இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே சீர்காழி வாணிவிலாஸ் துவக்கப்பள்ளியில் மின்சாரவாரியம் சார்பில் மின் நுகர்வோர்கள் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சிறப்பு முகாம் தொடங்கி நடந்தது.

    இந்த பணியை மின்வாரிய செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மின்வாரிய துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசித்ரா, உதவி கணக்கு அலுவலர் (பொ) செந்தாமரை, உதவி பொறியாளர் முத்துக்குமார், மின்வாரிய பணியாளர் ஆனத்தக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார்
    • நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023ம் ஆண்டு பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோகத் திட்ட அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நியாய விலைக் கடைகள் மூலமாக வருகிற 9ந் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4 லட்சத்து 90 ஆயிரத்து 338 குடும்ப அட்டைதாரர்களுக்கு (இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உட்பட) பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கும், நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையிலும், தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறை மூலமாக நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை வருகிற 8ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது. மேலும், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் சென்றாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடையில் வழங்கப்படும். எனவே, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் பெற்றுச் செல்ல நியாய விலைக்கடைக்கு வர வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கும் பணியை குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி சீராக விநியோக செய்வதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், வட்ட அளவிலும் கட்டுபாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மின்னனு குடும்ப அட்டைதாரர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்களிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1967 மற்றும் 1800-425-5901 என்ற எண்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான தகவல்கள் ஏதுமிருப்பின் தொடர்பு கொண்டு ெதரிவிக்கலாம்.

    • ஜெயங்கொண்டம் நகராட்சியில் புகையில்லாமல் போகி கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
    • நகராட்சி விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாது:- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர். அதில் ஏற்படும் குப்பைகளை புது இடங்களில் கொட்டாமல் தங்கள் பகுதிக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து அவர்களிடம் தர வேண்டும். போகிப் பண்டிகை அன்று குப்பைகளை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம். மேலும் நகராட்சி விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

    ×