என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் நகராட்சியில் புகையில்லாமல் போகி கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
- ஜெயங்கொண்டம் நகராட்சியில் புகையில்லாமல் போகி கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
- நகராட்சி விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாது:- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர். அதில் ஏற்படும் குப்பைகளை புது இடங்களில் கொட்டாமல் தங்கள் பகுதிக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து அவர்களிடம் தர வேண்டும். போகிப் பண்டிகை அன்று குப்பைகளை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம். மேலும் நகராட்சி விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
Next Story






