search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "announcement"

    • பாரதிய ஜனதா மீதான காங்கிரசின் பயத்தால் கொடிகள் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியது.
    • சி.பி.எம். மற்றும் பா.ஜனதா கட்சிகள் எதிர்பாராத கூட்டணியை உருவாக்கி உள்ளன.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 3-ந் தேதி மனு தாக்கல் செய்ய வந்த அவர், ரோடு-ஷோவிலும் பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகள் எங்கும் காணப்படவில்லை.

    இதனை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விமர்சித்திருந்தார். பாரதிய ஜனதா மீதான காங்கிரசின் பயத்தால் கொடிகள் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியது. இந்த நிலையில் ராகுல்காந்தி வருகிற 15 மற்றும் 16-ந் தேதி வய நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பயன்படுத்தபட மாட்டாது என்று மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளருமான ஹாசன் கூறியதாவது:-

    வயநாட்டில் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த பிரசாரத்தின் போது, காங்கிரஸ் அல்லது கூட்டணி கட்சிகளின் கொடிகளை காட்டுவதை தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் சின்னங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். கட்சியின் முடிவுக்கான காரணங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் மற்ற தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் விரும்பினால் கொடியை பயன்படுத்தலாம்.

    அடுத்த வாரம் முழுவதும் கண்ணூர், திருச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங் களில் பங்கேற்க உள்ளார். சி.பி.எம். மற்றும் பா.ஜனதா கட்சிகள் எதிர்பாராத கூட்டணியை உருவாக்கி உள்ளன. தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து யாரிடம் இருந்தும் வழி காட்டுதல் தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம்.
    • தலிபான்களின் பணி காபூலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பொது இடங்களில் கல்லெறிந்து கொல்லும் தண்டனை மீண்டும் தொடங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தலிபான்களின் உச்ச தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா பேசும் ஆடியோ, அரசு தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பட்டது. அதில், விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம். விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும். தலிபான்களின் பணி காபூலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை. அது இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றார்.

    • பாராளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, கட்சிகள் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்த நிலையில் தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி, முன்னதாக பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆணவப்படுகொலை செய்வேன் என்றும், தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்றும், வருகின்ற காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என்று உளவுத்துறைக்கே சவால் விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து சூரியமூர்த்திக்கு பதிலாக வேறு வேட்பாளரை நியமிக்க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாதேஸ்வரனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குடிபோதையில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், காவல் துறையினருக்கு சவால் விடுவதுமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    இதுபோன்ற நிகழ்வுகளால் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள் மீது மக்கள் தங்கள் நம்பிக்கை இழந்து வருவதுடன், இதுபோன்ற சர்ச்சையான வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட அறிவிக்க கூடாது எனவும் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    • தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரிய தலைவர்கள் ஆகியோர் உபயோகப்படுத்தும் அரசு வாகனங்கள் திரும்ப பெறப்படும்.
    • பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான வாகனங்கள் மற்றும் மொபைல், சியூஜி எண்கள் வழங்கப்படும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அமலுக்கு வரும் நடைமுறைகள் வருமாறு:-

    அரசு அலுவலங்களில் உள்ள அனைத்து வாழும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்படும். பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் கொடிகள் ஆகியவை மறைக்கப்படும்.

    அரசு கட்டிடங்களில் இடம் பெற்றுள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் விளம்பர பலகைகள் மறைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் (எம்.எல்.ஏ., எம்.பி.) அலுவலகங்களை பூட்டி பொதுப்பணித்துறை வசம் சாவி ஒப்படைக்க வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரிய தலைவர்கள் ஆகியோர் உபயோகப்படுத்தும் அரசு வாகனங்கள் திரும்ப பெறப்படும். அனைத்து மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் நிலைக்குழுக்கள், பணியாற்றுவதற்கான சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான வாகனங்கள் மற்றும் மொபைல், சியூஜி எண்கள் வழங்கப்படும்.

    அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சியினர் தொடர்பான சின்னங்கள், வாசகங்கள் மறைக்கப்படும். அரசு மற்றும் தனியார்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அழித்தல் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்கும் வகையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும். தனிநபர்கள் வைத்துள்ள துப்பாக்கிகளை சம்பந்த ப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    அரசின் புதிய நலத்திட்டங்களை தொடங்குதல் மற்றும் புதிய பயனாளிகள் தேர்வு செய்தல் நிறுத்தி வைக்கப்படும். மக்கள் குறைதீர்வு மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் பெறும் நிகழ்வுகள் தடை செய்யப்படும்.

    பறக்கும் படை சோதனையின் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்படும். தனிநபர்கள் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப ரிவர்த்தனை செய்தால் கண்காணிக்கப்படும்.

    மேற்கண்ட நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும்.

    • நாங்கள் என்ன தீவிரவாதிகளா சமூக விரோதிகளா எங்களை பார்த்து ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள்.
    • எங்களை தடுத்து நிறுத்தும் முயற்சி உங்கள் இயலாமையை காட்டுகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் படித்து வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி இன்று தலைமைச் செயலகம் முற்றிலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்ததால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒஎஸ் ஷர்மிளாவின் மகன் திருமணம் நேற்று பெங்களூருவில் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் பெங்களூரில் இருந்து விமான மூலம் ஷர்மிளா கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    பின்னர் அம்பாபுரத்தில் உள்ள முன்னாள் எம்பி ராமச்சந்திர ராவ் வீட்டிற்கு செல்ல காரில் புறப்பட்டு வந்தார். அப்போது போலீசார் ஷர்மிளாவின் காரை பின் தொடர்ந்து வந்தனர்.

    இதனால் உஷாரான ஷர்மிளா விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்னா பவனில் தங்கினார்.

    ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தக்கூட உரிமை இல்லையா. இங்கு போலீசார் தடுப்பு அமைத்து உள்ளனர். இந்த சூழ்நிலை எனக்கு அவமானமாக இல்லையா.

    நாங்கள் என்ன தீவிரவாதிகளா சமூக விரோதிகளா எங்களை பார்த்து ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள்.

    எங்களை தடுத்து நிறுத்தும் முயற்சி உங்கள் இயலாமையை காட்டுகிறது என்றார்.

    • தாந்த நாடு கிராமத்தில் 00-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 100 ஆண்டு வசித்து வருகின்றனர்.
    • பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் சாலை சீரமைக்கப்படவில்லை.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தாந்த நாடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 100 ஆண்டு வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இதனால் சாலையை சீரமைத்து தர வேண்டும் என அவர்கள் பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து விட்டனர். ஆனால் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    எனவே சாலையை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இல்லாவிட்டால் கறுப்புக் கொடியேற்றி மறியலில் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.    

    • வருகிற 10-ந் தேதிக்குள் சிவகங்கை மாவட்டத்தில் 1000 பா.ஜ.க. கொடிகள் ஏற்றப்படும்.
    • பிரதமர் மோடியின் பாஜக அரசின் சாதனைகள் மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மேப்பல் சக்தி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையி லான அரசு இந்தியா முழுவதற்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஊழலற்ற அரசு என்ற பெயரினை மக்களிடம் பெற்றுள்ளது. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையி லான அரசு அமைய உள்ளது.

    இத்தகைய நல்லாட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி அரசின் சாத னைகளை வெளிப்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் 1000 பா.ஜ.க. கொடிகள் புதிதாக ஏற்றப்படவேண்டும்.கொடிஏற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் இம்மாதம் கடந்த 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 1000 பா.ஜ.க. கொடிகள் மாவட்டம் நகரம் ஒன்றிய, பேரூர் பகுதிகளில் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதிகளில் மாவட்ட, ஒன்றிய, நகர, பா.ஜ.கவினர் செய்துவருகிறார்கள்.இதில் பிரதமர் மோடியின் பாஜக அரசின் சாதனைகள் மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு உடனடியாக மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
    • மீனவர்களின் தடைக்கால நிதி, படகு பழுது பார்க்கும் நிதியை இரட்டிப்பாக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கூட்டம் நடத்தினர். கூட்டத்தின் முடிவில், மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு உடனடியாக மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். மீன்பிடி துறை முகத்தின் முகத்துவாரத்தை உடனே தூர்வார வேண்டும். மீனவர்கள் இட ஒதுக்கீட்டில் எம்.பி.சி -யில் இருந்து இ.பி.சி -க்கு மாற்றியதை மீண்டும் எம்.பி.சி -க்கு மாற்ற வேண்டும். டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மீனவர்களின் தடைக்கால நிதி, படகு பழுது பார்க்கும் நிதியை இரட்டிப்பாக்கவேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்க ளைச் சேர்ந்த மீனவர்களும் வருகின்ற 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது, மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்து, புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

    • ஒரு துணை அமைப்பாளர் தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருத்தல் அவசியம்.
    • ஆவணங்களுடன் வருகின்ற 18-ந்தேதி மாலைக்குள் மாவட்ட ஒப்படைக்க வேண்டும்.

    கடலூர்:

    வேளாண்மைத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணிக்கு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் ஆகிய அமைப்பாளர்கள். – துணை அமைப்பாளர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர். துணை அமைப்பாளர்களில் ஒருவர் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவும், பெண் துணை அமைப்பாளர் ஒருவரும் இருப்பது அவசியம். ஒரு துணை அமைப்பாளர் தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருத்தல் அவசியம்.

    நியமிக்கப்படவுள்ள நிர்வாகிகள் அனைவரும் கல்லுரி , டிப்ளமோ படிப்பை முடித்தவராகவோ அல்லது தற்போது கல்லூரியில் பயிலக்கூடியவராகவோ இருத்தல் வேண்டும். இப்பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்போர் கடலூர் கிழக்கு மாவட்ட அலுவலகம் ,வலைதள முகவரியிலிருந்தோ பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வருகின்ற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலைக்குள் மாவட்ட ஒப்படைக்க வேண்டும். அமைப்பாளர் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் அந்தந்த மாவட்டத்திலேயே மாணவர் அணி நிர்வாகிகளால் நடத்தப்படும். நேர்காணல் நடைபெறும் நாள், நேரம், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக தொடருவதாக அறிவித்துள்ளது.
    • உற்பத்தி மற்றும் வினியோகத்தை எளிதாக்க வழிவகுக்கும்.

    திருப்பூர் :

    ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக தொடருவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

    அமெரிக்க மத்திய வங்கி கடந்த 15 நாட்களில் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. ரிசர்வ் வங்கியும் இதை பின்பற்றும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரெப்போ விகிதம் உயர்த்தப்படவில்லை. இதன்மூலமாக வர்த்தக முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். வளர்ச்சியை ஒப்பிடுகையில் பெரும்பாலான மத்திய வங்கிகள் பணவீக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், ரிசர்வ் வங்கி இரண்டுக்கும் இடையே நல்ல சமநிலையை உருவாக்கி வளர்ச்சிக்கு முதன்மை அளிக்கிறது. அதிகரித்து வரும் முதலீடு மேலும் உற்பத்தி மற்றும் வினியோகத்தை எளிதாக்க வழிவகுக்கும். அடுத்த 2 மாதங்களில் பணவீக்கம் குறையும். கடந்த ஆண்டு பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 15 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது உலகளாவிய வர்த்தகத்தின் பின்னணியில் பெரிய சாதனையாகும். ரெப்போ விகிதம் அதே நிலையில் தொடர்வது வர்த்தக வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அனுமதியின்றி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • வர்த்தக நிறுவனங்கள் ரஜினி பெயரை அனுமதியின்றி பயன்படுத்துவதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம் பாரதி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    பல தளங்களில் பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அவரது அனுமதியின்றி பயன்படுத்துகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

    இதனால் ரஜினியுடைய பெயர், புகைப்படம், குரலை ஒப்புதல் இன்றி வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பால் இளைஞர்கள் ஏமாற்றமடைந்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.
    • குரூப்-4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்கள் தெரி விக்காததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னு ரிமை வழங்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களில் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு இந்த 18 மாத காலத்திலே எத்தனை பேர்களுக்கு வேலைகள் வழங்கி இருக்கிறது. 74 லட்சம் பேர் அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

    கடந்து சில மாதங்க ளுக்கு முன்பு குரூப் 4 பணியிடங்களுக்கு இது வரை இல்லாத வகை யில் 21, 85,328 பேர் விண்ணப்பித்தி ருக்கிறார்கள். அப்படி எதிர்பார்த்து காத்திருக்கிற பலருக்கு டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட போட்டி தேர்வு அட்டவணை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக் கூடிய குரூப்-2, குரூப்- 3 பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாததும், குரூப்-4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்கள் தெரி விக்காததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    குரூப்-1 தேர்வில் எத்தனை காலி இடங்கள் என்ற விவ ரங்கள் இல்லாததும் இளை ஞர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் 5.50 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் என்று சொன்னது கானல் நீராகத்தான் உள்ளது. எனவே கடந்த 18 மாதத்தில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    ×