search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை சீரமைக்காவிட்டால் மறியல் போராட்டம் - பொதுமக்கள் அறிவிப்பு
    X

    சாலையை சீரமைக்காவிட்டால் மறியல் போராட்டம் - பொதுமக்கள் அறிவிப்பு

    • தாந்த நாடு கிராமத்தில் 00-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 100 ஆண்டு வசித்து வருகின்றனர்.
    • பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் சாலை சீரமைக்கப்படவில்லை.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தாந்த நாடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 100 ஆண்டு வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இதனால் சாலையை சீரமைத்து தர வேண்டும் என அவர்கள் பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து விட்டனர். ஆனால் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    எனவே சாலையை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இல்லாவிட்டால் கறுப்புக் கொடியேற்றி மறியலில் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×