search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monitoring Committee"

    • கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுக்கு வந்தன.
    • வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    கோவை:

    பாராளுமன்றத்திற்கு ஏப்.19 முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

    முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுக்கு வந்தன.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கலைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அந்த மாநிலங்களையொட்டிய தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு செயல்பாட்டில் இருக்கும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளான வாளையார், கோபாலபுரம் ஆகிய 2 சோதனை சாவடிகளில் தலா ஒரு நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட உள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்ட கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக்குழுவில் சேர ஆதிதிராவிடர், பழங்குடியினர், சமூக ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கொத்தடிமைத் தொழிலாளர் உறுப்பினர்- செயலாளரும், தொழிலாளர் உதவி ஆணையருமான (அமலாக்கம்) காளி தாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின்படி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    மேற்கண்ட விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமை யிலான கொத்தடிமைத் தொழிலாளர் மாவட்ட கண்காணிப்புக் குழுவை திருத்தி அமைக்க கலெக்டர் மேகநாதரெட்டி ஒப்புதல் அளித்துள்ளார்.

    கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டப்பிரிவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 3 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் 2 பேரும் கலெக்டரால் கொத்தடிமைத் தொழிலா ளர் மாவட்ட கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் விருதுநகர் மாவட்ட கொத்தடிமைத் தொழிலாளர் மாவட்ட கண்காணிப்புக் குழுவிற்கு உறுப்பினராக சமீபத்திய புகைப்படம் ஒட்டப்பட்ட சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், சுய விருப்பக் கடிதம், குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை ''தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), 1/13சி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட கலெக்டர் வளாகம், விருதுநகர்'' என்ற முகவரிக்கு வருகிற 2.12.2022அன்று மாலை 5.00மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1,543 அரசு துவக்கப்பள்ளிகளில் படிக்கும் 1.15 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
    • பிரத்யேகமாக கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.

    குண்டடம்:

    பள்ளி குழந்தைகளுக்கு மதியம் பள்ளியில் சத்துணவு வழங்கப்படுகிறது. ஏழை குழந்தைகள் பலர் காலையில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்றனர் என்ற குறைபாடு உள்ளது. இதனை போக்கும் வகையில், துவக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வர உள்ளது.முதல்கட்டமாக 1,543 அரசு துவக்கப்பள்ளிகளில் படிக்கும் 1.15 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில், குண்டடம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகள் இதற்கு தேர்வாகியுள்ளன. சிற்றுண்டி, காலை 8:15 மணிக்கு முன்னரே, தயாரிக்கப்பட வேண்டும்.இத்திட்டத்துக்கு மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகள், சமையல் செய்து அனுப்புவதற்கான கூடங்கள், கிழமைதோறும் என்னென்ன உணவுகள் தயாரிக்க வேண்டுமென்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.பட்டியலில் உள்ள உணவுகளில், மாணவர்கள் விரும்பும் உணவு வகைகளை, பள்ளி மேலாண்மை குழுவினரின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்து, சமைத்து தர வேண்டும். இதற்காக பிரத்யேகமாக கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.

    கிராமப்புறங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு ஊராட்சி தலைவர் கண்காணிப்பு குழு தலைவராகவும், பள்ளி தலைமையாசிரியர் ஒருங்கிணைப்பாளராகவும், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும்.நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளுக்கு கண்காணிப்பு குழு தலைவராக ஆணையரால் நியமிக்கப்பட்ட அலுவலரும், தலைமையாசிரியர் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவர். திட்டம் குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துரைப்பதோடு அதன் தரம் குறித்து, கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான கூட்டம் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படுகிறது.

    • கண்காணிப்புக் குழு தலைவரும், எம்.பி.யுமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.
    • துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு தலைவரும், எம்.பி.யுமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.

    இதில், வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, பள்ளி கல்வித் துறை, கனிமவளத் துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடா்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.

    இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.75 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் அவா் வழங்கினாா். கூட்டத்தில்மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், கோவை எம்.பி., பி.ஆா்.நடராஜன், ஈரோடு எம்.பி., கணேசமூா்த்தி, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், துணை மேயா் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா்பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • பேபி அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தமிழகம் வலியுறுத்தல்.
    • வள்ளக்கடவு வழியாக 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும்.

    முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவின் 16-வது கூட்டம் குழுவின் அதன் தலைவர் குல்சன்ராஜ் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, கண்காணிப்புக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கேரள அரசு சார்பிலும் அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணையை ஒட்டிய பேபி அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில், பேபி அணையின் கீழ் பகுதியில் இடையூராக உள்ள 15 மரங்களை வெட்டி அகற்ற அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினார்கள்.

    அதைப்போல அணைப்பகுதிக்கு வள்ளக்கடவு வழியாக செல்ல 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை கணக்கிட்டு, தமிழகத்துக்கு உரிய நீரை பகிர வேண்டும் என்றும் தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×