search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்பு குழுவில் சேர விண்ணப்பிக்கலாம்
    X

    கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்பு குழுவில் சேர விண்ணப்பிக்கலாம்

    • விருதுநகர் மாவட்ட கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக்குழுவில் சேர ஆதிதிராவிடர், பழங்குடியினர், சமூக ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கொத்தடிமைத் தொழிலாளர் உறுப்பினர்- செயலாளரும், தொழிலாளர் உதவி ஆணையருமான (அமலாக்கம்) காளி தாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின்படி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    மேற்கண்ட விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமை யிலான கொத்தடிமைத் தொழிலாளர் மாவட்ட கண்காணிப்புக் குழுவை திருத்தி அமைக்க கலெக்டர் மேகநாதரெட்டி ஒப்புதல் அளித்துள்ளார்.

    கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டப்பிரிவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 3 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் 2 பேரும் கலெக்டரால் கொத்தடிமைத் தொழிலா ளர் மாவட்ட கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் விருதுநகர் மாவட்ட கொத்தடிமைத் தொழிலாளர் மாவட்ட கண்காணிப்புக் குழுவிற்கு உறுப்பினராக சமீபத்திய புகைப்படம் ஒட்டப்பட்ட சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், சுய விருப்பக் கடிதம், குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை ''தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), 1/13சி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட கலெக்டர் வளாகம், விருதுநகர்'' என்ற முகவரிக்கு வருகிற 2.12.2022அன்று மாலை 5.00மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×