search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலை சிற்றுண்டி திட்டம்-கண்காணிப்பு குழு அமைப்பு
    X

    கோப்புபடம். 

    காலை சிற்றுண்டி திட்டம்-கண்காணிப்பு குழு அமைப்பு

    • 1,543 அரசு துவக்கப்பள்ளிகளில் படிக்கும் 1.15 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
    • பிரத்யேகமாக கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.

    குண்டடம்:

    பள்ளி குழந்தைகளுக்கு மதியம் பள்ளியில் சத்துணவு வழங்கப்படுகிறது. ஏழை குழந்தைகள் பலர் காலையில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்றனர் என்ற குறைபாடு உள்ளது. இதனை போக்கும் வகையில், துவக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வர உள்ளது.முதல்கட்டமாக 1,543 அரசு துவக்கப்பள்ளிகளில் படிக்கும் 1.15 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில், குண்டடம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகள் இதற்கு தேர்வாகியுள்ளன. சிற்றுண்டி, காலை 8:15 மணிக்கு முன்னரே, தயாரிக்கப்பட வேண்டும்.இத்திட்டத்துக்கு மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகள், சமையல் செய்து அனுப்புவதற்கான கூடங்கள், கிழமைதோறும் என்னென்ன உணவுகள் தயாரிக்க வேண்டுமென்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.பட்டியலில் உள்ள உணவுகளில், மாணவர்கள் விரும்பும் உணவு வகைகளை, பள்ளி மேலாண்மை குழுவினரின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்து, சமைத்து தர வேண்டும். இதற்காக பிரத்யேகமாக கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.

    கிராமப்புறங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு ஊராட்சி தலைவர் கண்காணிப்பு குழு தலைவராகவும், பள்ளி தலைமையாசிரியர் ஒருங்கிணைப்பாளராகவும், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும்.நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளுக்கு கண்காணிப்பு குழு தலைவராக ஆணையரால் நியமிக்கப்பட்ட அலுவலரும், தலைமையாசிரியர் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவர். திட்டம் குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துரைப்பதோடு அதன் தரம் குறித்து, கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான கூட்டம் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படுகிறது.

    Next Story
    ×