search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1000 பா.ஜ.க. கொடிகள் ஏற்றப்படும்
    X

    1000 பா.ஜ.க. கொடிகள் ஏற்றப்படும்

    • வருகிற 10-ந் தேதிக்குள் சிவகங்கை மாவட்டத்தில் 1000 பா.ஜ.க. கொடிகள் ஏற்றப்படும்.
    • பிரதமர் மோடியின் பாஜக அரசின் சாதனைகள் மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மேப்பல் சக்தி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையி லான அரசு இந்தியா முழுவதற்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஊழலற்ற அரசு என்ற பெயரினை மக்களிடம் பெற்றுள்ளது. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையி லான அரசு அமைய உள்ளது.

    இத்தகைய நல்லாட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி அரசின் சாத னைகளை வெளிப்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் 1000 பா.ஜ.க. கொடிகள் புதிதாக ஏற்றப்படவேண்டும்.கொடிஏற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் இம்மாதம் கடந்த 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 1000 பா.ஜ.க. கொடிகள் மாவட்டம் நகரம் ஒன்றிய, பேரூர் பகுதிகளில் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதிகளில் மாவட்ட, ஒன்றிய, நகர, பா.ஜ.கவினர் செய்துவருகிறார்கள்.இதில் பிரதமர் மோடியின் பாஜக அரசின் சாதனைகள் மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×