search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரங்கள்"

    • கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.
    • அரசின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை மீறி தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

    திருச்சுழி

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகள், கண் மாய்கள், குளம், குட்டை களில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

    திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தற்போது சுமார் 450-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் பயிரிட்டுள்ள விவசா யிகள் உரமிடுவது, களை எடுப்பது போன்ற பணி களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் நாற்று நடும் பணிகளையும் தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் விவசாயி களுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தட்டுபாடின்றி கிடைக்கும் வகையில் கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகள் மூலமாக உரங்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில் அடங்கல் கொடுத்து உரங்களை வாங்க உள்ளதாகவும், அப்படி கொடுத்தும் உரங்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதாகவும் இதனால் உரம் வாங்க தனியார்கடைகளை நாடி செல்லும் நிலை ஏற்பட் டுள்ளதாகவும் விவசாயி கள் கூறுகின்றனர்.

    தனியார் உரக்கடைகள் யூரியா உரங்களை அதிக ளவில் இருப்பு வைத்துக் கொண்டு உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது போன்ற ேதாற்றத்தை ஏற்படுத்தி அதிக விலைக்கு உரங்களை விற்கின்றனர். 45 கிலோ எடை கொண்ட யூரியா உர மூடைகள் ரூ.330 முதல் ரூ.350 வரை யிலும் சுமார் 50 கிலோ எடையுள்ள டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங் கள் ரூ.800 முதல் அதிக பட்சமாக ரூ.1600 வரை யிலும் விற்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும் இணை உரங்க ளையும் அதிக விலைக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாகவும், இதனால் யூரியா உரம் வாங்கும் போது 5 மடங்கு அதிக விலை கொண்ட டி.ஏ.பி போன்ற இணை உரங்களையும் வாங்க வேண்டி உள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    தனியார் உரக்கடைகளில் வாங்கும் உரங்களுக்கு ரசீதுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என வும், கைரேகை மற்றும் ஆதார் பதிவுகளை அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படு வதாகவும் சமூக ஆர்வ லர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

    அரசின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை மீறி தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருவதாகவும், பறக்கும் படையினர் மேற்கொள்ளும் ஆய்வு பெயரளவிலேயே உள்ள தாகவும் அவர்கள் தெரி விக்கின்றனர்.

    இந்த நிலையில் தீவிர மாக ஆய்வுகள் மேற்கொண்டு விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுத்து விவசாயி களுக்கு தடையின்றியும், சரியான விலையிலும் உரங்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
    • கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறுவை பயிர்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.40 கோடி இலக்கு நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது.

    எனவே, கடன் தேவைப்படும் விவசாயிகள் உடன் சிட்டா அடங்கல் நகலுடன் தாங்கள் உறுப்பி னராக உள்ள சங்கத்தில் கடன் மனு அளிக்க வேண்டும்.

    பயிர்கடன் தனிநபர் ரூ.1.6 லட்சம் வரையில் நபர் ஜாமீன் பேரில் அதிகபட்சமாக கடன் பெறலாம். நகை அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். ஏக்கர் ஒன்றுக்கு பயிர்கடன் ரொக்கமாக ரூ.28 ஆயிரத்து 550, பொருள் பகுதியாக ரூ.7 ஆயிரத்து 550 ஆக மொத்தம் ரூ.36 ஆயிரத்து 100 வழங்கப்படும்.

    மேலும், பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள், குறுவை தொகுப்புக்கு தேவையான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110-க்கு பங்கு தொகை மற்றும் நுழைவு க்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

    இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் நாகப்பட்டினம் மண்டல இணைப்பதிவாளர் 73387 21201 என்ற எண்ணிற்கு அல்லது நாகப்பட்டினம் சரக துணைப்பதிவாளர் 90879 46937 என்ற எண்ணிற்கோ அல்லது துணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர் 90800 15003 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மங்களூர் துறைமுகத்தில் இருந்து விருத்தாசலம் ெரயில் நிலையத்திற்கு உர மூட்டைகள் வந்தன.
    • 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

    கடலூர்:

    தமிழகத்தில் நடைபெற இருக்கும் குருவைப் பட்ட சாகுபடிக்காக மங்களூர் துறைமுகத்தில் இருந்து விருத்தாசலம் ெரயில் நிலையத்திற்கு உர மூட்டைகள் வந்தன. பொட்டாஷ் 1080 மெட்ரிக் டன் உர மூட்டைகளும் , 253 மெட்ரிக் டன் கலப்பு உரங்களும் சரக்கு ெரயில் மூலம் வந்து இறக்கப்பட்டது. பின்னர் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

    • அனுமதிக்கப்பட்ட அளவு உரங்கள் மட்டுமே வழங்கபடும்.
    • விதிகளை மீறினால் உரங்களை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும்.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்டார பகுதியில் உள்ள உரக்கடை உரிமையாளர்கள் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் கி.லீலாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனையாளர் தங்களின் விற்பனைக்கான புதிய உரிமம் மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட வேணடும். மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரம் விற்கும் போது விவசாயிகளிடம் ஆதார் எண் கேட்டு வாங்க வேண்டும். பிறகு தான் உரம் மற்றும் இதர வேளாண் இடுபொருட்களை விற்க வேண்டும். ஒரே நபருக்கு அதிக உரங்களை விற்பனை செய்ய கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவு உரங்கள் மட்டுமே வழங்கபடும்.

    மேலும் உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனை செய்பவர்கள் கட்டாயம் விற்பனை ரசீது வழங்க வேண்டும். மேலும் விவசாயிகள் தவறாது விற்பனை ரசீதுகளை கேட்டு பெறவும். உரக்கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் அனுமதிக்கப்பட்ட உரம், பூச்சிமருந்துகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. தங்களின் விற்பனை உரிமம், விலை விவரங்களை அனைவரும் காணும்படி வைக்க வேண்டும். உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனை செய்பவர்கள் அனுமதி பெறாத நிறுவனங்களில் உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளை கொள்முதல் செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது.

    மொத்த விற்பனையாளர் உரங்களை வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்யவோ மாற்றம் செய்யவோ கூடாது. சில்லரை விற்பனையாளர்களுக்கு உரங்களை அளிக்கும் போது முறையான ஆவணங்களை கொடுத்து அனுப்ப வேண்டும். மீறினால் அத்தகைய உரங்களை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள பயிருக்கு தேவையான பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் பரிந்துரைக்கபட்ட உரம் பூச்சிமருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

    உரக்கடை உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலை மற்றும் விவசாயி அல்லாத நபர்களுக்கு உரங்களை விற்பனை செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டால் உரகட்டுபாட்டு ஆணை1985-ன்படி விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×