search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடிசாவிலிருந்து ரயில் மூலம்  உரங்கள் தருமபுரி வருகை
    X

    ஓடிசாவிலிருந்து ரயில் மூலம் உரங்கள் தருமபுரி வருகை

    • 331 மெட்ரிக் டன் காம்ளக்ஸ் உரம் தருமபுரி ரயில் நிலையம் வந்தடைந்தது.
    • விவசாய தேவைக்கு பயன்படுத்த மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா கூறியுள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக் கடைகளுக்கு வினியோகம் செய்ய டி.ஏ.பி உரம் 1027 மெட்ரிக் டன்னும் 331 மெட்ரிக் டன் காம்ளக்ஸ் உரம் தருமபுரி ரயில் நிலையம் வந்தடைந்தது.

    தருமபுரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 76 மெட்ரிக் டன் டி.ஏ.பியும், காம்ப்ளக்ஸ் 20 மெட்ரிக் டன்னும், கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 70 மெட்ரிக் டன் டி.ஏ.பியும் 25 மெட்ரிக் டன் காம்ளக்ஸ் உரங்களும்,

    திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 60 மெட்ரிக்டன் டி.ஏ.பி உரமும், தருமபுரி மாவட்ட இருப்பு கிடங்கில் 310 டன் டி.ஏ.பி உரமும் காம்ளக்ஸ் உரம் 130 மெட்ரிக் டன்னும், கிருஷ்ணகிரி மாவட்ட இருப்பு கிடங்கில் 511 மெட்ரிக் டன் டி.ஏ.பி உரங்களும் 136 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு வைக்கப்பட்டன.

    லாரிகளில் மூலம் பிரித்து அனுப்பும் பணியினை தருமபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு தாம்சன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது இப்கோ தருமபுரி மாவட்ட விற்பனை அலுவலர் அப்துல்லா உடனிருந்தார். மேலும் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 2923 மெட்ரிக் டன்னும் டி.ஏ.பி 3043 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 811 மெட்ரிக் டன்னும் காம்ளக்ஸ் 4668 மெட்ரிக் டன்ணும், சூப்பர் பாஸ்பேட் 395 மெட்ரிக் டன்னும் மொத்தம் 11840 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட் டுள்ளது.

    விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு மானிய உரங்களை பெற்று தங்களின் விவசாய தேவைக்கு பயன்படுத்த வேண்டுமாய் தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×