என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mutharasan"

    • டியூட் படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
    • டியூட் படத்தில் ஆணவக்கொலைக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டியூட் படம், வசூலை குவித்து வருகிறது.

    தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில், 'டியூட்' திரைப்படத்தைப் சிறப்புக் காட்சியை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், CPI முன்னாள் மாநிலச் செலயாளர் முத்தரசன் ஆகியோர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன், கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    10 ஆண்டுகளாக இப்பொறுப்பில் முத்தரசன் இருந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மு.வீரபாண்டியின், சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.

    • அதோடு 2026 தேர்தலில் உங்கள் சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என்கிறார் முத்தரசன்.
    • உங்க அப்பாவே வந்தாலும் முடியாது. 2021 ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாங்கள் வென்று காட்டினோம்.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காட்பாடி, வேலூர், ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.

    காட்பாடி தொகுதி சித்தூர் பேருந்து நிலையம் அருகே புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் இணைந்து மக்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    காட்பாடி தொகுதி பாதி நகரம், பாதி கிராமம், விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம், பயிர்க்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம், பேரிடர் நேரத்தில் பயிர்க்காப்பீடு மூலம் இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். வறட்சி நிவாரணம் கொடுக்கப்பட்டது.

    நேற்றைய தினம் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் சேலம் மாநாட்டில் பேசினார். எடப்பாடி பழனிசாமி கம்யூனிஸ்ட் கட்சியை தரம் தாழ்ந்து பேசுவதாகச் சொல்கிறார். நான் என்ன கேட்டேன், கம்யூனிஸ்ட் எதிர்க்கட்சியா அல்லது ஆளும்கட்சியா? எங்க வரிசையில்தான் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்றுதான் கேட்டேன்.

    மக்களுக்கு பிரச்சனை வரும்போது, அதை அரசுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். கூட்டணியாக இருந்தாலும் குரல் கொடுக்க வேண்டும், அதைத்தான் சுட்டிக்காட்டினேன். ஆனால் அவருக்கு கோபம் வந்து ஏதேதோ பேசியிருக்கார். அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் பணம் வாங்கியதாக நான் சொன்னதாகச் சொல்கிறார். அதை நாங்கள் சொல்லவில்லை. உங்களைக் காட்டிக்கொடுத்ததே திமுகதான். நாங்கள் சொல்லவில்லை. செய்தி வெளியானதா இல்லையா? தேர்தல் நிதி கொடுக்கப்பட்டதா… இல்லையா?.

    பாஜகவுடன் கூட்டணி வைத்ததை தப்பு என்கிறார் முத்தரசன். திமுக கூட பாஜக-வோடு கூட்டணி அமைத்து மத்தியில் அங்கம் வகித்தது எல்லாம் முத்தரசனுக்குத் தெரியவில்லை. அதைப் பேசுவதற்கு முடியாத முத்தரசனுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியுமில்லை.

    அதோடு 2026 தேர்தலில் உங்கள் சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என்கிறார் முத்தரசன்.

    உங்க அப்பாவே வந்தாலும் முடியாது. 2021 ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாங்கள் வென்று காட்டினோம், எடப்பாடி தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியும் இல்லாமல் எடப்பாடி தொகுதியில் 45 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறோம். நாங்கள் மக்களுக்காக உழைத்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிப்பார்கள்.

    உங்களைப் போல காலத்துக்கேற்ப நிறம் மாறுகின்ற கட்சி அதிமுக அல்ல, பஞ்சோந்தி போல் நிறம் மாறுவதில்லை. கொள்கையின் அடிப்படையில்தான் செயல்படும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்துக்கு மட்டும்தான்.

    நீங்கள் கொள்கை என்கிறீர்கள், திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரே கொள்கையா? நேற்றைக்கு முன் தினம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது, 'நான் பாதி கம்யூனிஸ்ட்' என்கிறார். அப்படியென்றால் பாதியை விழுங்கிவிட்டார்.

    கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான் சொல்வது இதுதான். திமுக தவறுக்கு துணை போகாதீர்கள், உங்களுக்கென தனிச் செல்வாக்கு உள்ளது. அது சரிந்துகொண்டு வருகிறது என்று சொன்னேன். தன்னை பாதி கம்யூனிஸ்ட் என்கிறார் ஸ்டாலின. அதாவது பாதியை விழுங்கிவிட்டார் ஸ்டாலின். இனியும் நீங்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் உங்களை யாரலும் காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.
    • தனிச்சட்டம் இயற்றினால் ஓபிசி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மாயை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

    * சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினோம்.

    * தனிச்சட்டம் இயற்ற வேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.

    * தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.

    * தனிச்சட்டம் இயற்ற வேண்டியதன் தேவையை அரசும் உணர்ந்திருக்கிறது.

    * சாதி ஆணவ படுகொலைகள் அதிகரிப்பது கவலைக்குரியது.

    * சாதி வெறியிலிருந்து மக்கள் விடுபட்டு வரவேண்டியது அவசியமாகிறது.

    * ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்பதை பல அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

    * தனிச்சட்டம் வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

    * நீதிபதி ராமசுப்ரமணியம் தனிச்சட்டம் வேண்டும் என்பதை தீர்ப்பாகவே வழங்கி இருக்கிறார்.

    * சாதி ஆணவ கொலை என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கான பிரச்சனை.

    * ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சட்டம் நடைமுறையில் உள்ளது.

    * தனிச்சட்டம் இயற்றினால் ஓபிசி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மாயை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்தனர்.
    • திருமாவளவன், முத்தரசன், சண்முகம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து பேசினர்.

    சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்தனர்.

    வி.சி.க. தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து பேசினர்.

    • தமிழக மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
    • துரோகத்தை எதிர்த்து போராடும் தமிழக மக்களுடன் இ.பி.எஸ். துணை நிற்கவில்லை.

    இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * தமிழ்நாட்டிற்கு எதிராக துரோகம் செய்யும் கட்சியாக பா.ஜ.க. செயல்படுகிறது.

    * தமிழக மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.

    * துரோகம் இழைத்து வரும் பா.ஜ.க.வுடன் அணி சேர்வது தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதாகும்.

    * துரோகத்தை எதிர்த்து போராடும் தமிழக மக்களுடன் இ.பி.எஸ். துணை நிற்கவில்லை.

    * தமிழக மக்களை காட்டி கொடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிதம்பரம் சென்றபோது நடராஜரிடம் ஞானஸ்தானம் பெற்றாரா என தெரியவில்லை.
    • பா.ஜ.க. அணி ரத்ன கம்பளம் அல்ல ரத்தக்கறை படிந்த கம்பளம்.

    சென்னை:

    சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்தை முன் வைத்து கோவையில் பிரசாரத்தை தொடங்கினார்.

    தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கமே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சென்ற சட்டமன்றத் தேர்தலில் சொன்னது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. பி.ஜே.பி.யோடு இருந்த காரணத்தினால் தமிழகம் ஒட்டுமொத்தமாக பி.ஜே.பி.யால் வளைக்கப்படுகிறது. கபளீகரம் செய்யப்படுகிறது.

    ஆகவே தமிழகத்தை மீட்க வேண்டும் என்கிற அரசியல் முழக்கத்தை நாங்கள் வைத்தோம். அந்த முழக்கத்தை இரவலாக பெற்று இப்போது எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். அவர் கோவையில் பேசுகிறபோது, கம்யூனிஸ்டுகளே இல்லை. அவர்களது முகவரியே இல்லை. காணாமல் போய் விட்டார்கள் என்று மேட்டுப்பாளையம் கூட்டத்தில் பேசினார்.

    ஒரு வாரம் இடைவெளியில் என்ன ஞானஸ்தானம் பெற்றார் என தெரியவில்லை. சிதம்பரம் சென்றபோது நடராஜரிடம் ஞானஸ்தானம் பெற்றாரா என தெரியவில்லை.

    கம்யூனிஸ்டுகள், வி.சி.க. போன்ற கட்சிகள் எங்கள் அணிக்கு வர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். கோவையில் கம்யூனிஸ்டு கட்சிகள் இல்லை என்று கூறிவிட்டு சிதம்பரத்தில் கம்யூனிஸ்டு கட்சி எங்கள் அணிக்கு வர வேண்டும் என்று பேசுவது நல்ல நகைச்சுவையாகும்.

    எங்கள் அணிக்கு வந்தால் ரத்ன கம்பளம் விரித்து வரவேற்போம் என்றும் சொல்லி இருக்கிறார். அவர் ஏற்கனவே சேர்ந்திருக்கிற பா.ஜ.க. அணி ரத்ன கம்பளம் அல்ல ரத்தக்கறை படிந்த கம்பளம்.

    அந்த ரத்தக்கறை படிந்த கம்பளத்தில் எடப்பாடி பயணம் பண்ணுகிறார். அதன் ஆபத்தை உணராமல் அல்லது ஆபத்தை உணர்ந்தும் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக அவர் பயணம் பண்ணுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.
    • தி.மு.க. கூட்டணியை உடைத்து அவர்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள் என பா.ஜ.க. கூறிக்கொண்டிருக்கிறது.

    சேலம்:

    சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

    இதில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதையொட்டி சேலத்தில் அதன் லோகோவை அறிமுகப்படுத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் லோகோவை வெளியிட்டு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது,

    அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று திரும்ப திரும்ப உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல தலைவர்களும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். கூட்டணியை பலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்கிறார்கள்.

    பா.ஜ.க. விரும்பும் கூட்டணி பலமான கூட்டணியாக அமையும், எதிரிகளால் எதிர்கொள்ள முடியாத கூட்டணியாக அமையும் என்று கற்பனையாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர பாரதிய ஜனதா கூட்டணி கருவே உருவாகவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார்கள்.

    தி.மு.க. கூட்டணி கட்சிகளை உடைத்து அங்கிருந்து பல கட்சிகள் எங்களுக்கு வருவார்கள் என்று பா.ஜ.க. தலைவர்களும் சொல்கிறார்கள்.

    தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கூட்டணியும் இவ்வளவு நாள் நீடித்தது கிடையாது.

    இந்த கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல, கொள்கைக்காக அமைந்த கூட்டணி. 2 பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம். தி.மு.க. கூட்டணி ஒரு போதும் உடையாது.

    தி.மு.க. கூட்டணியை உடைத்து அவர்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள் என பா.ஜ.க. கூறிக்கொண்டிருக்கிறது.

    முருகனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பா.ஜ.க. முருகன் மாநாட்டால் பா.ஜ.க. வெற்றிபெற முடியாது. நெருக்கடி நிர்பந்தத்தின் பேரில் அ.தி.மு.க. வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மடியில் கனம் இருந்ததால் பா.ஜ.க.வின் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு கட்சி மீது குற்றம் சாட்டும் அரசியல்வாதி அவர் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும்.
    • தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் மன்னிப்பது தான் தமிழனின் பண்பு.

    நாகப்பட்டினம்:

    நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 30-வது தேசிய மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநாடு பணிகள் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.

    இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே பா.ஜ.க.வுடன் எக்காலத்திலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, கூட்டணி வைக்கப்போவதும் இல்லை என எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கூறி வந்தனர்.

    ஆனால் திடீரென பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து இதுதான் விடியல் கூட்டணி என்றும், இந்த கூட்டணியால் தான் மக்களுக்கு எதையும் செய்ய முடியும். அதனால் என்ன விளைவுகள் வந்தாலும் அதை எதிர்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இந்த கூட்டணி அ.தி.மு.க தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை.

    நிர்பந்தம், அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து தான் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். சரத்பவார் கட்சி, சிவசேனா கட்சியின் நிலை என்ன ஆனது. பா.ஜ.க தன்னுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியை நயவஞ்சகமாக அழித்துவிடும். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் மத்திய அரசை தமிழக மக்களே எதிர்க்கின்றனர்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஊழல் குறித்து அண்ணாமலை பேசினார். இன்று கூட்டணி வைத்துள்ள காரணத்தால் அ.தி.மு.க.வினர் ஊழல் செய்யவில்லை என பேசுவார்களா?.

    ஒரு கட்சி மீது குற்றம் சாட்டும் அரசியல்வாதி அவர் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அ.தி.மு.க போன்ற கரை படிந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, ஊழல் பற்றி பேச உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகுதியில்லை. மேலும் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் மன்னிப்பது தான் தமிழனின் பண்பு.

    ஆட்சி, அதிகாரத்தை பிடிக்கவே அனைவரும் அரசியல் கட்சி நடத்துகின்றனர். கம்யூனிஸ்டு கட்சியும் ஒரு நாள் தமிழகத்தையும், இந்தியாவையும் ஆளும். அப்போது கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் முதலமைச்சராகவும், பிரதமராகவும் ஆவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் வேலை இல்லா கால ஊதியம் மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்.
    • கல்விக்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்த வலியுறுத்தி வங்கிகள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டல் விடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கே எனது வேலை? என்ற தொடர் பரப்புரை பயண எழுச்சி மாநாடு திருச்சியில் வரும் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்து உள்ளது. தனியார் மயத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அவுட் சோர்சிங் செய்யும் முறையை தேர்ந்தெடுத்து குறைவான ஊதியத்தில் ஆட்களை பணிக்கு அமர்த்தியிருக்கின்றனர்.

    மேலும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். அனைத்து துறைகளிலும் உள்ள ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்,

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அனைத்தையும் இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை தொடர் பரப்புரை பயணம் எழுச்சி மாநாடு திருச்சி புத்தூரில் 2-ந்தேதி நடைபெறுகிறது.

    முன்பு இருந்த பிரதமர்கள் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் பல உருவாக்கப்பட்டு வந்தன. ஆனால் நரேந்திர மோடி ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தை கூட உருவாக்கவில்லை. 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டார்.

    தனியாரை ஊக்குவிக்கும் வகையிலேயே 2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அதானிக்கு தனியார் முதலீடு அதிகம் வழங்கப்படுகிறது. இது குறித்து விவாதிக்க வேண்டும் என்பதுதான் எதிர்கட்சிகள் கோரிக்கை.

    அதானிக்கு ஏஜெண்டாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்பது தான் அவமானமாக, வெட்கக்கேடாக உள்ளது. இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் வேலை இல்லா கால ஊதியம் மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்.

    கல்விக்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்த வலியுறுத்தி வங்கிகள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டல் விடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அதேபோன்று கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை மத்திய அரசு எந்தஒரு பதிலும் அளிக்கவில்லை.

    ராகுல் காந்தி எம்.பி. மோடி சமூகம் பற்றி அவதூறாக பேசியதான வழக்கில் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு, அவரது வீட்டை காலி செய்வது என்பது ஜனநாயக விரோதம். எதிர்க்கட்சிகளே இல்லாத சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வரும் முன்னோட்டம் தான் இது. இந்திய ஜனநாயகத்திற்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சம்மட்டி அடிதான் இது. தேர்தலின் போது பா.ஜ.க. அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.

    தி.மு.க. அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்த முடியாது, நடத்தவும் மாட்டோம். ஏனென்றால் கடந்த எடப்பாடி ஆட்சியை விட தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜ்பவனை கமலாலயம் ஆக்க உங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது.
    • பிரதமர் மோடியும், உள்துறை மந்திரியும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் திமிர்த்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார்.

    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்ட பொறுப்பானது மதிக்கத் தக்க கண்ணியமான ஒரு பொறுப்பு. ஆனால் தொடர்ந்து அந்த பொறுப்புக்கு அவர் களங்கம் ஏற்படுத்தி வருகிறார். சட்டப்பேரவையில் கவர்னர் உரை என்பது அமைச்சரவையால் தயாரிக்கப்பட்டு அவரது ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு முதல் நாள் இரவு 12 மணிக்கு தான் அச்சடிக்கப்படும்.

    அதனை அப்படியே வாசிக்க வேண்டும் என்பது மரபு. அதில் ஒரு பகுதியை நீக்குவதும், இன்னொரு பகுதியை சேர்ப்பதற்கும் அவருக்கு உரிமை கிடையாது. மேலும் அந்த கொள்கை, திட்டத்தின் மீது கருத்துக்களை சொல்லும் உரிமை என்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்குதான் இருக்கிறது. உரை பொய்யானது என்று கவர்னர் கூறுவது அபத்தமானது, கண்டனத்திற்குரியது. கவர்னர் இவ்வாறு பேசுவது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு யோக்கியமான அரசாக இருந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசும் அவரை இந்த நேரம் டிஸ்மிஸ் செய்து, கைது செய்திருக்க வேண்டும். ஆனால் யோக்கியமற்ற அரசாக இருக்கின்ற காரணத்தால் அவரது இஷ்டத்துக்கு கருத்து சொல்கிறார். சனாதனத்தை தான் ஏற்றுக் கொள்வதாக சொல்கிறார். சனாதனம் தான் நாட்டின் சீரழிவுக்கு காரணம்.

    நாங்கள் ரவியை கேட்டுக் கொள்வதெல்லாம் நீங்கள் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். தொண்டனாக, பா.ஜ.க. தொண்டனாக இருந்து என்ன வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்திற்கு பேசலாம். ராஜ்பவனை கமலாலயம் ஆக்க உங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது. ராஜ்பவன் மாநில அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. உங்களுக்கு சம்பளத்தை மக்களின் வரிப்பணத்தில் கொட்டிக் கொடுக்கிறார்கள்.

    பிரதமர் மோடியும், உள்துறை மந்திரியும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் திமிர்த்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார். தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உண்மைக்கு புறம்பான மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் கருத்துக்கள் உள்ள படமாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. உளவுத்துறையும் கடுமையாக எச்சரித்துள்ளது. மக்களிடையே மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். நாங்கள் ஒற்றுமையை எதிர்பார்க்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளது என்று முத்தரசன் பேசினார்.
    • எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சேது ராமன் நினைவு திடலில் விவசாய தொழிலாளர்கள் சங்க 13-வது மாநில மாநாடு நிறைவு விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை வகித்தார்.

    இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்க தேசிய பொதுச்செயலாளர் குல்சார்சிங் கொரியா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் முன்னிலை வகித்தனர்.

    மாநாட்டில் தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ள விவசாய தொழி லாளர்களின் சமூக பொருளாதார நிலைமை களை ஆய்வு செய்ய உயர்மட்ட ஆய்வு குழு அமைக்க வேண்டும், 100 நாள் திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆகவும், கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது. பின்னர் முத்தரசன் பேசியதாவது:-

    விவசாய தொழிலா ளர்கள் அமைப்பு ரீதியாக அணி திரண்டால் எத்தகைய அரசியல் சூழலையும் எதிர்கொள்ள முடியும். 9 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.830 உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீது 260 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயருகிறது.

    மத்திய அரசின் தவறான கொள்கைகளால் முடிவால் விலைவாசி உயர்ந்துள்ளது. மாமன்னரிடம் குறுநில மன்னர்கள் பிச்சை கேட்பது போல அனைத்து மாநில முதல்வர்களும், பிரதமரிடம் சென்று நிதி தாருங்கள் என கெஞ்ச வேண்டிய நிலைமை உள்ளது.

    இவை எல்லாவற்றையும் எதிர்த்து, நாட்டின் நலனுக் காக நாம் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்த நாளான ஆகஸ்டு 9-ந்தேதி 'மோடியே வெளியேறு' என்ற போராட் டம் தொழிற்சங்கள் சார்பில் நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் நடைபெற உள்ளது.

    ஆகஸ்ட் 20-ல் இளைஞர் மற்றும் மாணவர் பெரு மன்றம் சார்பில் சென்னை யில் பேரணியும், அக்டோபர் 1, 2 தேதிகளில் மாதர் சங்க பேரணி நடைபெறுகிறது. விலைவாசி உயர்வு, வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி அரசை கண்டித்து செப்டம்பர் 12,13,14 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவகங்கள் முன் தொடர் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் எம்.பி.க்கள் சுப்பராயன், செல்வராஜ், சி.பி.ஐ. மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ராமச் சந்திரன், மாரிமுத்து, முன்னாள் எம்.பி.க்கள் லிங்கம், அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×