என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதல்வருடன் சந்திப்பு ஏன்?- தி.மு.க. கூட்டணி தலைவர்கள் விளக்கம்
    X

    முதல்வருடன் சந்திப்பு ஏன்?- தி.மு.க. கூட்டணி தலைவர்கள் விளக்கம்

    • தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.
    • தனிச்சட்டம் இயற்றினால் ஓபிசி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மாயை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

    * சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினோம்.

    * தனிச்சட்டம் இயற்ற வேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.

    * தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.

    * தனிச்சட்டம் இயற்ற வேண்டியதன் தேவையை அரசும் உணர்ந்திருக்கிறது.

    * சாதி ஆணவ படுகொலைகள் அதிகரிப்பது கவலைக்குரியது.

    * சாதி வெறியிலிருந்து மக்கள் விடுபட்டு வரவேண்டியது அவசியமாகிறது.

    * ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்பதை பல அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

    * தனிச்சட்டம் வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

    * நீதிபதி ராமசுப்ரமணியம் தனிச்சட்டம் வேண்டும் என்பதை தீர்ப்பாகவே வழங்கி இருக்கிறார்.

    * சாதி ஆணவ கொலை என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கான பிரச்சனை.

    * ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சட்டம் நடைமுறையில் உள்ளது.

    * தனிச்சட்டம் இயற்றினால் ஓபிசி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மாயை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×