search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coconut price"

    • தமிழகத்தில் தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளது.
    • பண்டிகை நாட்கள் வரும் சூழலில் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தேங்காய், கொப்பரை விற்பனையில் கிடைக்கும் பணத்தை வைத்து விவசாயிகள், வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.தென்னை விவசாயத்துக்கான இடுபொருட்கள் விலை, ஆட்கள் கூலி அனைத்தும் உயர்ந்துள்ள சூழலில் கடந்த, 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தேங்காய் விலை சரிந்தது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு மத்திய அரசு நிர்ணயித்த ஆதார விலையில், கிலோ 105.90 ரூபாய்க்கு கடந்த மாதம் வரை கொள்முதல் செய்யப்பட்டது.ஆனால் இதுவும் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றன. ஒரு விவசாயிடம் இருந்து ஒரு முறை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ததற்கு பணம் பட்டுவாடா செய்யவும் காலதாமதம் ஏற்பட்டது. கொள்முதல் நாட்கள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.இதுபோன்ற பிரச்னைகளால் கொள்முதல் செய்தும் விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்கவில்லை.

    தமிழகத்தில் தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளது. தற்போது தொடர்ந்து பண்டிகை நாட்கள் வரும் சூழலில் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதற்கு நேர்மாறாக விலை குறைந்து வருவது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வியாபாரிகள், பெருநிறுவனங்கள், இடைத்தரகர்கள் கைகோர்த்து சிண்டிக்கேட் அமைத்து விலையை குறைப்பதாகவிவசாயிகள் கூறுகின்றனர்.

    காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி கடந்த வாரம், ஒரு டன் பச்சை காய் 24,500 ரூபாயாக இருந்தது. தற்போது 23 ஆயிரமாகவும், 26 ஆயிரம் ரூபாயாக இருந்த கருப்பு காய் 25 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.கடந்த சில வாரமாக ஒரு டின் (15 கிலோ) தேங்காய் எண்ணெய் 1,850 ரூபாயாக இருந்தது. நடப்பு வாரம் 1,770 ரூபாயாகவும் குறைந்துள்ளது. தேங்காய் பவுடர் கிலோ, 125 ரூபாயாக குறைந்துள்ளது. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:- பருவமழை தொடர்ந்து பெய்ததால் கொப்பரை உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது சீசன் நிறைவடையும் நிலையில் மார்க்கெட்டில் 50 சதவீதம் தேங்காய் வரத்து மட்டும் உள்ளது.ஆனால் கடந்த, 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சீசன் இல்லாத சூழலில், வரத்து குறைந்து விலை உயர்வது வாடிக்கை. ஆனால், 'சிண்டிக்கேட்' அமைத்து விலையை குறைக்கின்றனர்.அதே நேரத்தில் நுகர்வோருக்கு தேங்காய் எண்ணெய் விலை குறையவில்லை. விவசாயிகளை நசுக்கும் செயலாக இது கருதப்படுகிறது. ஆயில் நிறுவனங்கள், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளை லாபம் பார்க்க திட்டமிடுகின்றன.கடந்தாண்டு மார்க்கெட்டில் 95 - 100 ரூபாய் வரை விலை இருந்தது. அப்போதும், சிண்டிகேட்' அமைத்து 80 ரூபாயாக குறைத்தனர். ஆனால், வரத்து குறைவால் விலை மீண்டும் உயர்ந்தது. அதே நிலை மீண்டும் வரும் என எதிர்பார்க்கிறோம்.தற்போது, ஓணம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. இதனால் விலை உயரும் வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கஜா புயலால் தென்னை மரங்கள் அழிந்ததால் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ரெகுநாதபுரம், காஞ்சிரங்குடி, பெரிய பட்டினம், தாமரைக்குளம், பெருங்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தென்னை விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இதன் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலை கிடைத்து வந்தது.

    இங்கு பறிக்கப்படும் தேங்காய்களை மதுரையில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வந்தனர். அங்கிருந்து காங்கேயம், வெள்ளக்கோயில், ஈரோடு போன்ற ஊர்களில் உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

    மாவட்டத்தில் சில ஆண்டுகளாக மழை பொய்த்ததால் தேங்காய் விளைச்சலில் பெரும் சரிவு ஏற்பட்டது. தேங்காய் விலையும் வீழ்ச்சியடையத் தொடங்கியது.

    இந்த விலை வீழ்ச்சி படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக தென்னை விவசாயிகள் பலர் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பில் தஞ்சாவூர் மாவட்டம் உட்பட டெல்டா மாவட்டங்களில் இருந்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதையடுத்து கொப்பரை தேங்காய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

    கஜா புயலுக்கு முன்பு கிலோ ரூ.22க்கு விற்பனையான தேங்காயை புயலுக்கு பின் தேவை அதிகரிப்பால் தற்போது கிலோ ரூ.33 முதல் ரூ.35 வரை மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தேங்காய் விலை வீழ்ச்சியும் சில வாரங்களில் சரியாவதும் வழக்கமாக இருந்து வந்த நிலையில் கஜா புயலுக்கு பின்பு விலை அதிகரித்து வருகிறது.

    ரெகுநாதபுரம் தேங்காய் மொத்த வியாபாரி செல்வம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டுகளில் மழை இல்லாததால் காய்களின் வடிவம் மாறி காய்ப்பு குறைந்து விட்டது. வழக்கமாக ஒரு தேங்காய் எடை 400 கிராம் வரை இருக்கும். மழை இல்லாததால் காயின் எடை குறைந்து தற்போது அதிகபட்சமாக 250 கிராம் உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பருவ மழையால் நீர் ஆதாரம் உயர்ந்துள்ளது. ஆகவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் பறிக்கக் கூடிய தேங்காய் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் உரம், மருந்தடிப்பு, வெட்டுக்கூலி, உரி கூலி இப்படி பல்வேறு கூடுதல் செலவினங்களை தாங்கி கொண்டு தென்னை விவசாயிகள் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென்னை விவசாயி பெரியபட்டினம் அப்துல் மாலிக் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தேங்காய்க்கு விலை கிடைக்காமல் ஏராளமான விவசாயிகள் நஷ்டமடைந்து தென்னந்தோப்புகளை வீட்டடி மனைகளுக்கு பிளாட் போட்டு விற்பனை செய்துவிட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.

    பல்வேறு சுமைகளை தாங்கி தென்னை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தோம். விலை அதிகரித்துள்ள நிலையில் மரத்தில் காய்ப்பு இல்லாத நிலை உள்ளது.

    மரத்திற்கு தண்ணீர் விடுவதற்கு கிணறுகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு தேங்காய் காய்ப்பு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்றார்.

    ×