search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vedaranyam"

    • படகை ஏற்றி வலையை சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர்.
    • வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் மீன்பிடி வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த நாகை பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆறுக்காட்டுத்துறை மீனவர்களின் வலையின் மீது விசை படகை ஏற்றி வலையை சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் ஆறுக்காட்டுத்துறை மீனவ்ாகளின் வலையை விசைப்படகு மூலம் சேதப்படுத்திய நாகை மீனவர்களை கண்டித்தும், இழுவை மடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த பைபர் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து, நேற்று முதல் கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று தொடர்ந்து 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் சுமார் ரூ.5 லட்சம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர்.

    இந்நிலையில் இது தொடர்பாக இன்று மீன்வளத்துறை அதிகாரிகள் ஆறுக்காட்டுதுறை மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்த தொடர் வேலை நிறுத்தத்தால் அப்பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே சிறுதலைக்காடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 50). மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் இவரும், அதே ஊரை சேர்ந்த லெட்சுமணன் (30), ராஜதுரை (28), ராமநாதன் (38), புகழ்ராஜ் (28), ராம பெருமாள் (26), ராமன் (26) மற்றும் பன்னாள் சக்கரம் பேட்டையை சேர்ந்த பாக்கிய ராஜ் (26) ஆகிய 8 மீனவர்களும், ராமானுஜத்திற்கு சொந்தமான படகில் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அப்போது அனைவரும் சிறுதலைக்காட்டு கிராமத்திற்கு தெற்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்த நிலையில் இருந்த படகு ஒன்று அவர்களது வலையில் சிக்கியது. அதனை கண்ட அவர்கள் உடனடியாக தங்களது படகில் கட்டி இழுத்து நள்ளிரவு கரைக்கு வந்தனர்.

    பின்னர், இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படகை கைப்பற்றி அதில் சோதனை செய்தனர். அப்போது படகில் TRB-A-1260 JFN என்றும், இரு பக்கத்திலும் Y.S.S merini என்றும் எழுதப் பட்டுள்ளது. இந்த படகு நீலம், கருப்பு, வெள்ளை நிறத்தில் இருந்தது. ஆனால் இந்த படகில் என்ஜின் மற்றும் வலைகள் ஏதும் இல்லை.

    படகில் எழுதப்பட்ட படகின் எண் மற்றும் அதன் தோற்றத்தை வைத்து, அது இலங்கை நாட்டை சேர்ந்த படகு என்றும், இது கரை ஒரத்தில் மீன் பிடிக்கும் படகு என்றும் தெரிய வந்துள்ளது. இந்த படகு கள்ளக்கடத்தலுக்கு பயன்படுத்தியதா? வேறு யாரும் இலங்கையில் இருந்து வந்தார்களா? அல்லது யாழ்ப்பாணம் பகுதியில் கரையில் இருந்த படகு காற்றின் வேகத்தால் இங்கு வந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • படகின் எஞ்சின் பழுதானதால் இந்திய கடல் பகுதியில் வந்தது தெரிய வந்தது.
    • 2 மீனவர்களையும் மீட்டு கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுதுறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்தனர். பின்னர் அவர்கள் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஆறுகாட்டுத்துறை மீனவகிராமத்துக்கு கிழக்கே வங்ககடலில் சுமார் 2 நாட்டிகல் மைல் தொலைவில் ஒரு பைபர் படகு நிற்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இலங்கைக்கு சொந்தமான பைபர் படகில் 2 மீனவர்கள் இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து 2 மீனவர்களையும் மீட்டு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரனையில் அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் , மைக்கேல் பெர்னாண்டோ என்பதும் கடலில் மீன் பிடித்த போது திடீரென படகின் எஞ்சின் பழுதானதால் இந்திய கடல் பகுதியில் வந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார்கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • மாசிமக பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பி க்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் ஐதீக திருவிழா வருகிற 11-ந்தேதியும், தேர் திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதியும், தெப்பத்திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு விநாயகர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    இதுபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பகவிநாயகர், கட்சுவான் முனிஸ்வரர்சுவாமி கோவில் விநாயகர், தோப்புத்துறை வரம் தரும் விநாயகமூர்த்தி, இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர்,தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் மணர்குள சித்தி விநாயகர் ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யம் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர்களுக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    ஆங்காங்கே பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • ரூ.25 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டப்பட்டது.
    • பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நாகை சாலையில் கல்வித்துறைக்கு சொந்தமான இடத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கல்வி துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன், கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த வழகறிஞர் நாமசிவாயம், சமூக ஆர்வலர் வசந்தி செல்வகுமார், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், பல்வேறு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
    • நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

    மேலும், நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டனர்.

    ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன், நகர வடிவமைப்பு மேற்பார்வையாளர் அருள் முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

    • இந்நிலையில் கடந்த 20 நாட்களாகவெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது.
    • இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து தற்போதுவரைவிட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்புஉற்பத்தி நடைபெறுகிறது. இதில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 ஆயிரம் ஏக்கரிலும் இரண்டு தனியார் நிறுவனங்கள் 6 ஆயிரம் ஏக்கரிலும் உப்பு உற்பத்தி செய்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம்செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும்வழக்கமாக இந்த ஒன்பது மாதகாலத்தில் 6.50 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யபடும் இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து தற்போதுவரைவிட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 20 நாட்களாகவெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வேதாரண்யம் பகுதியில் மழை பெய்தது. குறிப்பாக உப்பள பகுதியான கோடிக்காடு, அகஸ்தியன் பள்ளி, கடிநெல்வயல் பகுதியில் சற்று கூடுதலாக மழை பெய்ததுஇதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் எப்போதும் பரபரப்பாக வேலை செய்துவரும் உப்பள பகுதி வெறிச்சோடி காணப்பட்டன

    இதனால் உப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாத்திகளில் உள்ள உப்பை சேகரித்து தார்பாய்களை மற்றும் பனைமட்டைகளை கொண்டு மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மீண்டும் உற்பத்தி தொடங்குவதற்கு ஒரு வார காலம் ஆகும் எனவும்அடிக்கடி மழை பெய்தால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி இலக்கைஎட்ட முடியாது எனவும் இதனால் உப்பு விலை ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார்.
    • முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    வேதாரண்யம் :

    வேதாரண்யம் அருகே தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் நிஷாந்தி தலைமையில் பெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நடப்பு ஆண்டிற்குரிய கல்வி திட்டம் குறித்தும் பள்ளி வளர்ச்சி பணிகளின் செயல்பாடுகள் குறித்து தலைமையாசிரியர் தெட்சணாமூர்த்திஉட்பட கல்வி குழுவாளர்கள் பேசினர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஐடி கார்டு, பெல்ட், ஷூ உட்பட உபகரணங்கள் வழங்குவது, அரசிடம் விதிகள் படி பள்ளிக்கு தேவையான உதவிகள் பெறுவது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றிகூறினார்.

    • தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது.
    • ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி அகஸ்தியன்பள்ளி உப்புசத்தியா கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் சாலை ரூ.2 கோடியே 27 லட்சத்தில் போடும் பணி தீவிரவமாக நடைபெற்று 30 நாளில் புதிய தார்சாலை போடபட்டுள்ளது.

    வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் பாதை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது அதன்பிறகு முற்றிலுமாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.

    இதனை சரி செய்ய நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்திரவிட்டார். இதையொட்டி நகராட்சியின் சார்பில் 2 கோடியே 27 லட்சம் செலவில் தார் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்றது

    நாடு சுதந்திரம் அடைவதற்காக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1931ஆம் ஆண்டு ராஜாஜி சர்தார் வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் உப்பு சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது அதன் நினைவாக 1949ம் ஆண்டு அகஸ்தியன்பள்ளியில் சுமார் ஒரு ஏக்கர் இடத்தில் உப்பு சத்யாகிரக நினைவுத்தூபி கட்டப்பட்டது மேலும் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடத்தியதால் ராஜாஜியை அங்கு சிறை வைத்தனர்

    தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது. இதனருகில் பூந்தோப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது. இதனால் உப்பு சத்தியாகிரகம் நினைவு ஸ்தூபி, ராஜாஜி சிறை வைத்த இடம் ஆகிய வரலாற்று நினைவு இடங்களை பார்க்க இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோரும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்

    இதையடுத்து சாலை யை உடனடியாகசீர் செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர் இந்தநிலையில் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 2 கோடியே 27லட்சம் செலவில் இரண்டரை கிலோமீட்டர் தூரம் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது பணி துவங்கபட்ட 30 நாளில் பணி முடிக்கபட்டு தற்போது பொதுமக்கள் பயன்பட்டிற்கு சாலை திறக்கபட்டுள்ளது

    புதிதாக அமைக்கபட்ட சாலையினைநகராட்சி நிர்வாக மண்டலசெயற்பொறியாளர் பார்த்திபன்நக ரமன்ற தலைவர் புகழேந்தி துணைத்தலைவர் மங்களநாயகி நகராட்சி கமிஷனர் ஹேமலதா பொறியாளர் முகமதுஇ ப்ராகிம் ஆகியோர் சாலை பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

    • வேதாரண்யத்தில் அ.தி.மு.க.வினர் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டி இருந்தனர்.
    • தகவல் அறிந்து வந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வினர் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டி இருந்தனர்.

    இந்த நிலையில் வேதாரண்யம் ராஜாஜிபூங்கா எதிரே முன்னாள் நகர துணை செயலாளர் வீரராசு ,நகர அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் சதீஷ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரித்து கோஷமிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    • வேதாரண்யம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார்.
    • இப்பயிற்சியில் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரஞ்சித் மற்றும் மோகன் தகட்டூர் கிராம விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூர் வருவாய் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் வேதாரண்யம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பது குறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பான வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து வேதாரண்யம் வட்டார வேளாண்மை அலுவலர் யோகேஷ், வேளாண்மை உதவி அலுவலர்கள் இந்திரா, தமிழன்பன், அனீஷ்தோட்டக்கலைத் துறை சார்பாக தோட்டக்கலை உதவி அலுவலர் நிறைமதி வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் கந்தசாமி கலந்துகொணடு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர் .

    வேதாரண்யம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார். இப்பயிற்சியில் பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரஞ்சித் மற்றும் மோகன் தகட்டூர் கிராம விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    ×