search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vedaranyam"

    • அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • மாசிமக பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பி க்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் ஐதீக திருவிழா வருகிற 11-ந்தேதியும், தேர் திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதியும், தெப்பத்திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு விநாயகர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    இதுபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பகவிநாயகர், கட்சுவான் முனிஸ்வரர்சுவாமி கோவில் விநாயகர், தோப்புத்துறை வரம் தரும் விநாயகமூர்த்தி, இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர்,தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் மணர்குள சித்தி விநாயகர் ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யம் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர்களுக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    ஆங்காங்கே பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • ரூ.25 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டப்பட்டது.
    • பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நாகை சாலையில் கல்வித்துறைக்கு சொந்தமான இடத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கல்வி துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன், கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த வழகறிஞர் நாமசிவாயம், சமூக ஆர்வலர் வசந்தி செல்வகுமார், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், பல்வேறு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
    • நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

    மேலும், நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டனர்.

    ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன், நகர வடிவமைப்பு மேற்பார்வையாளர் அருள் முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

    • இந்நிலையில் கடந்த 20 நாட்களாகவெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது.
    • இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து தற்போதுவரைவிட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்புஉற்பத்தி நடைபெறுகிறது. இதில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 ஆயிரம் ஏக்கரிலும் இரண்டு தனியார் நிறுவனங்கள் 6 ஆயிரம் ஏக்கரிலும் உப்பு உற்பத்தி செய்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம்செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும்வழக்கமாக இந்த ஒன்பது மாதகாலத்தில் 6.50 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யபடும் இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து தற்போதுவரைவிட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 20 நாட்களாகவெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வேதாரண்யம் பகுதியில் மழை பெய்தது. குறிப்பாக உப்பள பகுதியான கோடிக்காடு, அகஸ்தியன் பள்ளி, கடிநெல்வயல் பகுதியில் சற்று கூடுதலாக மழை பெய்ததுஇதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் எப்போதும் பரபரப்பாக வேலை செய்துவரும் உப்பள பகுதி வெறிச்சோடி காணப்பட்டன

    இதனால் உப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாத்திகளில் உள்ள உப்பை சேகரித்து தார்பாய்களை மற்றும் பனைமட்டைகளை கொண்டு மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மீண்டும் உற்பத்தி தொடங்குவதற்கு ஒரு வார காலம் ஆகும் எனவும்அடிக்கடி மழை பெய்தால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி இலக்கைஎட்ட முடியாது எனவும் இதனால் உப்பு விலை ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார்.
    • முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    வேதாரண்யம் :

    வேதாரண்யம் அருகே தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் நிஷாந்தி தலைமையில் பெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நடப்பு ஆண்டிற்குரிய கல்வி திட்டம் குறித்தும் பள்ளி வளர்ச்சி பணிகளின் செயல்பாடுகள் குறித்து தலைமையாசிரியர் தெட்சணாமூர்த்திஉட்பட கல்வி குழுவாளர்கள் பேசினர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஐடி கார்டு, பெல்ட், ஷூ உட்பட உபகரணங்கள் வழங்குவது, அரசிடம் விதிகள் படி பள்ளிக்கு தேவையான உதவிகள் பெறுவது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றிகூறினார்.

    • தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது.
    • ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி அகஸ்தியன்பள்ளி உப்புசத்தியா கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் சாலை ரூ.2 கோடியே 27 லட்சத்தில் போடும் பணி தீவிரவமாக நடைபெற்று 30 நாளில் புதிய தார்சாலை போடபட்டுள்ளது.

    வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் பாதை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது அதன்பிறகு முற்றிலுமாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.

    இதனை சரி செய்ய நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்திரவிட்டார். இதையொட்டி நகராட்சியின் சார்பில் 2 கோடியே 27 லட்சம் செலவில் தார் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்றது

    நாடு சுதந்திரம் அடைவதற்காக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1931ஆம் ஆண்டு ராஜாஜி சர்தார் வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் உப்பு சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது அதன் நினைவாக 1949ம் ஆண்டு அகஸ்தியன்பள்ளியில் சுமார் ஒரு ஏக்கர் இடத்தில் உப்பு சத்யாகிரக நினைவுத்தூபி கட்டப்பட்டது மேலும் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடத்தியதால் ராஜாஜியை அங்கு சிறை வைத்தனர்

    தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது. இதனருகில் பூந்தோப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது. இதனால் உப்பு சத்தியாகிரகம் நினைவு ஸ்தூபி, ராஜாஜி சிறை வைத்த இடம் ஆகிய வரலாற்று நினைவு இடங்களை பார்க்க இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோரும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்

    இதையடுத்து சாலை யை உடனடியாகசீர் செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர் இந்தநிலையில் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 2 கோடியே 27லட்சம் செலவில் இரண்டரை கிலோமீட்டர் தூரம் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது பணி துவங்கபட்ட 30 நாளில் பணி முடிக்கபட்டு தற்போது பொதுமக்கள் பயன்பட்டிற்கு சாலை திறக்கபட்டுள்ளது

    புதிதாக அமைக்கபட்ட சாலையினைநகராட்சி நிர்வாக மண்டலசெயற்பொறியாளர் பார்த்திபன்நக ரமன்ற தலைவர் புகழேந்தி துணைத்தலைவர் மங்களநாயகி நகராட்சி கமிஷனர் ஹேமலதா பொறியாளர் முகமதுஇ ப்ராகிம் ஆகியோர் சாலை பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

    • வேதாரண்யத்தில் அ.தி.மு.க.வினர் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டி இருந்தனர்.
    • தகவல் அறிந்து வந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வினர் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டி இருந்தனர்.

    இந்த நிலையில் வேதாரண்யம் ராஜாஜிபூங்கா எதிரே முன்னாள் நகர துணை செயலாளர் வீரராசு ,நகர அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் சதீஷ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரித்து கோஷமிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    • வேதாரண்யம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார்.
    • இப்பயிற்சியில் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரஞ்சித் மற்றும் மோகன் தகட்டூர் கிராம விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூர் வருவாய் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் வேதாரண்யம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பது குறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பான வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து வேதாரண்யம் வட்டார வேளாண்மை அலுவலர் யோகேஷ், வேளாண்மை உதவி அலுவலர்கள் இந்திரா, தமிழன்பன், அனீஷ்தோட்டக்கலைத் துறை சார்பாக தோட்டக்கலை உதவி அலுவலர் நிறைமதி வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் கந்தசாமி கலந்துகொணடு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர் .

    வேதாரண்யம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார். இப்பயிற்சியில் பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரஞ்சித் மற்றும் மோகன் தகட்டூர் கிராம விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    • பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு சார்பாக மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.
    • பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் வீடுவீடாக மரக்கன்றுகள் வழங்கபட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு சார்பாக மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.

    மாவட்ட கல்வியாளர் பிரிவு துணைத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார் . மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக வேதாரண்யம் தெற்கு ஒன்றிய தலைவர் கரு.நாகராஜன் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 250 நபர்களுக்கு பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன .பின்னர் பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் வீடுவீடாக மரக்கன்றுகள் வழங்கபட்டது.

    வேதாரண்யம் அருகே குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கள்ளிமேடு ஊராட்சியில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நிலத்தடி நீர் உப்பு தன்மையை அடைந்து விட்டது.

    இதனால் இப்பகுதிக்கு கடந்த 25 ஆண்டுக்களுக்கு முன்பு அருகில் உள்ள கிராமமான தாமரைபுலத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் தனியாரிடம் இடம் வாங்கி கிணறு வைத்து அதிலிருந்து தண்ணீர் எடுத்து வழங்கப்பட்டு வந்தது.

    மேலும் இந்த கிராமத்திற்கு அனைக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் தாமரைப்புலத்திலிருந்து கள்ளிமேட்டிற்கு தண்ணீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்இணைப்புகள் பாதிக்கப்பட்டது.

    அதனை சீர் செய்வதற்கு அப்பகுதி மக்கள் விடவில்லை. எங்கள் பகுதியிலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என கூறி தடுத்துவிட்டனர். இதனால் 25 ஆண்டுகளாக தாமரைப்புலத்திலிருந்து கள்ளிமேட்டிற்கு வழங்கிவந்த குடிநீர் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அணைக்கரை கூட்டுகுடிநீர் திட்டத்தினை மட்டுமே நம்பி குடிநீர் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. கோடைகாலம் என்பதால் அணைக்கரை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வாரத்திற்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது.

    அதுவும் குறைந்த அளவில் வருவதால் ஒரு வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு குடம் மட்டுமே பிடிக்கமுடிகிறது. இதனால் கள்ளிமேடு பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

    எனவே ஊராட்சி நிர்வாகம் தாமரைப் புலத்தில் உள்ள மின்இணைப்புகளை சரிசெய்து மீண்டும் அங்கிருந்து கள்ளிமேட்டிற்கு குடிநீர் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேதாரண்யம் பகுதியில் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பங்களில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் இன்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஓரடியங்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றனர். அதேபோல் தலைஞாயிறு, கரியாப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டுவந்தனர்.

    இதுகுறித்து வேதாரண்யம், கரியாப்பட்டினம், தலைஞாயிறு போலீஸ் நிலையங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதையடுத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த தொடர் விசாரணையில் குற்றவாளிகள் யார் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நீர்மூலை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 28), அமிர்தரூபன் (24), தலைஞாயிறு பகுதியை சேர்ந்த ரமேஷ் (26), பாலசிங்கம் (26) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்கள் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்துப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×