search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theppatri Festival"

    • அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • மாசிமக பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பி க்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் ஐதீக திருவிழா வருகிற 11-ந்தேதியும், தேர் திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதியும், தெப்பத்திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • பங்குனி மாதத்தின் கடைசி நாளில் தேரோட்டம் நடைபெறும்.
    • சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் பவனி வருவார்கள்.

    இந்த கோவிலில் சுவாமிக்கு, அம்பாளுக்கு என்று இரு தனித்தனி தேர்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தின் கடைசி நாளில் கோலாகலமாக தேரோட்டம் நடைபெறும். ஆனால் தேரோட்டம் இந்த கோவிலில் நடக்காது. தேர்கள் ஆழ்வார்குறிச்சியில் உள்ள சிவந்தியப்பர் கோவில் முன்பு நிறுத்தப்பட்டு உள்ளன. அங்குதான் தேரோட்டம் நடைபெறும்.

    கொடியேற்றம் மட்டும்தான் சிவசைலம் கோவிலில் நடைபெறும். கொடியேற்றம் முடிந்ததும் அன்றே சிவசைலநாதரும், பரமகல்யாணி அம்பாளும் அங்கிருந்து ஆழ்வார்குறிச்சியில் உள்ள சிவந்தியப்பர் கோவிலுக்கு எழுந்தருளுவர். திருவிழாவின் பிற உற்சவங்கள் அனைத்தும் அந்த கோவிலிலேயே நடைபெறும்.

    விழாவின் 11-வது நாள், அதாவது பங்குனி மாதத்தின் கடைசி நாள் தேரோட்டம் நடைபெறும். அன்று காலை சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் நான்கு வீதிகளிலும் பவனி வருவார்கள்.

    அம்பாள் பரமகல்யாணியின் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துவந்து நிலையத்தில் சேர்ப்பது இதில் தனிச்சிறப்பாகும்.

    இந்த தேர்த்திருவிழாவில் ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    தேரோட்டம் முடிந்த மறுநாள் அதாவது `சித்திரை விசு' (தமிழ்ப் புத்தாண்டு) அன்று சுவாமியும், அம்பாளும் மறுபடியும் சிவசைலம் கோவிலுக்கு எழுந்தருளுவார்கள். அங்கு கோவிலை அடைந்ததும், கடனாநதியில் தீர்த்தவாரி நடத்தப்பட்டு சுவாமியும் அம்பாளும் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    இதேபோல் தைப்பூச திருநாள் அன்று தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவும் ஆழ்வார்குறிச்சியில்தான் நடக்கும். இதற்காக சுவாமியும், அம்பாளும் சிவசைலத்தில் இருந்து அழைத்து வரப்படுவார்கள்.

    ×