search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது கழிப்பறை கட்டும் பணி; அதிகாரி ஆய்வு
    X

    கழிப்பறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் ஆய்வு.

    பொது கழிப்பறை கட்டும் பணி; அதிகாரி ஆய்வு

    • பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
    • நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

    மேலும், நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டனர்.

    ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன், நகர வடிவமைப்பு மேற்பார்வையாளர் அருள் முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

    Next Story
    ×