என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மறியல்"
- தேசியக்கொடியை முண்டாசாக அணிந்து வந்திருந்ததால் பரபரப்பு
- உறவினர்கள் சொத்துக்களை அபகரித்ததாக மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை.
ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் தவுலத். இவர் இன்று காலை தனது மனைவி, மாமியார், மகள், மற்றும் குழந்தையுடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் தவுலத் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கோஷங்களும் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவ ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று வண்டியில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போராட்ட த்தில் ஈடுபட்ட பெண் கூறியதாவது:-
எங்களுக்கு மேட்டு ப்பாளையம் பகுதியில் 8½ ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்த இடத்தை எனது உறவினர்கள், எனக்கு தெரியாமலேயே தி.மு.க பிரமுகர் ஒருவருக்கு விற்று விட்டனர்.
அதில் எனக்கான பங்கையும் அவர்கள் தரவில்லை. இதுதொ டர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இன்று குடும்பத்துடன் சாலைமறியலில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
- இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.
- 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகாமி. இவரிடம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், அவரது மனைவி கவிதா ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு நிலம் பத்திரப்பதிவு செய்வதற்காக 6 பவுன் நகையை கடனாக வாங்கி யதாக தெரிகிறது. பின்னர் அந்த நகையை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. இதுதொர்பாக கடம்பத்தூர் போலீஸ்நிலையம் மற்றும் போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் சிவகாமி புகார் செய்தார். இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் சிவகாமி தனது மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று புகார் கொடுக்க வந்தார். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த சிவகாமி மற்றும் அவரது உறவினர்கள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.
மேலும் சிவகாமி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் கைதான இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கிடையே கைதான 7 பேரையும் டிசம்பர்4-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டடார். இதையடுத்து புதுப்பெண் உள்பட 5 பெண்கள் புழல் மகளிர் சிறையிலும் மற்ற 2 பேரும் திருவள்ளூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
- பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.
- பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்
திருவள்ளூர்:
வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது48). இவரது மகள்கள் தர்ஷினி (வயது18), தாரணி (12).
மனோகரனின் மனைவி உடல்நிலைபாதிக்கப்பட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்காக இன்று காலை மனோகரன் தனது 2 மகள்களுடன் மின்சார ரெயிலில் செல்ல வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
காலை 11.30 மணி அளவில் அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மனோகரன், அவரது மகள்கள் தர்ஷினி, தாரணி ஆகிய 3 பேரும் கை, கால் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை கண்டு ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களில் தர்ஷினி கல்லூரி மாணவி ஆவார். அவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது தங்கை தாரணி 12-ம் வகுப்பு படித்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தாயை சந்திப்பதற்காக இருவரும் தந்தையுடன் மின்சார ரெயிலில் செல்ல தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி பலியாகிவிட்டனர்.
இதற்கிடையே ரெயில் மோதி ஏற்படும் உயிர் பலிக்கு வேப்பம்பட்டு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதம் என்று கூறி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் சுரேஷ்குமார், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே மேம்பால பணி கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு ரெயில்வே சுரங்கப் பாதை இல்லாததால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இதனால் இதுபோன்ற கோர விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலிகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
- உசிலம்பட்டி அருகே 58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மறியல் போராட்டம் நடந்தது.
- இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் விவசாயிகளின் வாழ் வாதாரமாக கருதப்படும் 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் போ ராட்டம் நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் உசிலம் பட்டி பேருந்து நிலையம் அருகே அனைத்து கள்ளர் கூட்டமைப்பு ஒருங் கிணைப் பாளர் தியாகராஜன் தலை மையில் விவசாயிகளின் காவலனாக கருதப்படும் ஏர் பிடித்து பொதுமக்கள் மற்றும் அனைத்து கள்ளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அந்த பகுதி பரபரப்பு நிலவியது தகவல் அறிந்து வந்த நகர் காவல் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
- கோவில்வென்னிக்கு இடையில் புதிதாக டோல்கேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- ஊர்வலமாக சென்று டோல்கேட் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும்.
தஞ்சாவூர்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட செயலாளர் பாரதி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருவதோடு விதிமுறைக ளுக்கு புறம்பாக டோல்கேட் அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
ஆனால், நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து தேவையற்ற இடங்களில் 'டோல்கேட்'களை நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விடும் நிலை தொடர்கிறது. இந்த டோல்கேட்களைக் கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமா கும்போது டோல் கட்டண ங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால், குத்தகை எடுத்த தனியார் நிறுவனங்க ளும் அதைக் கடைப்பிடிப்பது இல்லை.
இந்நிலையில், தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில்
தஞ்சாவூர் மாவட்ட எல்லையான பல்லவ ராயன்பேட்டைக்கும் திருவாரூர் மாவட்டம் தொ டங்கும் கோவில்வெ ன்னிக்கும் இடையில் புதிதாக டோல்கேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலையில் டோ ல்கேட் அமைக்கப்பட்டால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளார்கள்.
ஆகவே டோல்கேட் அமைக்கும் பணியை உடனடியாக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 28-ந் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அம்மாபே ட்டையில் இருந்து ஊர்வ லமாக சென்று டோல்கேட் முன்பு பெருந்திரள் மறியல் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருச்சி கிராப்பட்டியில் அரசு விடுதி மாணவர்கள். தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி திடீர் மறியல்
- இட்லியை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டதால் பரபரப்பு
திருச்சி,
திருச்சி கிராப்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 120 பேர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அவர்கள் பல முறை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக சென்று மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை.
விடுதி வார்டனும், துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இன்று திருச்சி - மதுரை சாலையில் கிராப்பட்டி மேம்பாலத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட மோசமான காலை உணவான இட்லியுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவர்களை குண்டுகட்டாக அப்புறப்படுத்த முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தரமற்ற உணவுகளால் விடுதியில் பயின்ற 3 மாணவர்கள் வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், இதுபோன்று மற்ற மாணவர்களுக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்ற நோக்கிலேயே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் மாணவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
பின்னர் மாணவர்கள் இட்லி குண்டாவை தூக்கிக் கொண்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இதை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விடுதி மாணவர்களின் போராட்டத்தினால் திருச்சி - மதுரை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.
- பண்ருட்டியில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் இந்திய கம்யூ. சார்பில் சாலை மறியல் நடந்தது.
கடலூர்:
சென்னையில் இந்திய கம்யூ. கட்சி தலைமை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் இந்திய கம்யூ. சார்பில் சாலை மறியல் நடந்தது. இது பற்றிய தகவலறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் கண்ணன் தலைமை யிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் துரை உள்ளிட்ட 29 பேரை கைது செய்தனர்.
அரியலூர்
அரியலூர் தமிழ்நாடு சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான சாலை மறியல் நடைபெற்றது. அதன்படி அரியலூரில் அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசன், மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் சிறப்பு ஓய்வூதிய தொகையாக ரூ.6,750 வழங்க வேண்டும். அரசுத்துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்தனர்.
- சேலத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், பழைய பென்சன் திட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- திடீரென அப்பகுதியில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், பழைய பென்சன் திட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்படி இன்று காலை கோட்டை பகுதியில் மாவட்ட தலைவர் வடிவேல் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் திடீரென அப்பகுதியில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் தொடர்ந்து மறியல் முயற்சியில் ஈடுபட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 132 பேரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருணம மண்டபத்தில் அடைத்தனர்.
- ஜெயங்கொண்டம் அருகே இன்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
- ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழ மைக்கேல் பட்டி தெற்கு தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வருகின்றனர்.
இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைந்துள்ளது. இதனால் காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் தற்காலிகமாக இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கி வந்துள்ளார்.ஆனால் இந்த இணைப்பின் மூலம் வரும் தண்ணீர் 200 குடியிருப்பிற்கு போதுமானதாக இல்லை என்றும், உடனடியாக தங்களுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என கூறி, அப்பகுதி பொது மக்கள் அரியலூர் - தா.பழூர் சாலையில் கீழ மைக்கேல் பட்டி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து அங்கு வந்த தா.பழூர் போலீசார், காரைக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுத்து போதிய அளவில் தண்ணீர் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இந்த சாலை மறியலால் அரியலூர் - தா.பழூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.