என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்
- குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல் நடைபெற்றது
- புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கூலாச்சிக்கொல்லை தெற்கு கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதிக்கு கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது தொடர்பாக இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் கலங்களாக வந்துள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் உடனடியாக அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அவர்கள் காலி குடங்களுடன் கொத்தமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் வாகனங்கள் போக்குவரத்து இன்றி இருபுறமும் அணிவகுத்து நின்றன. இத்தகவல் அறிந்த கீரமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திருவரங்குளம் ஆணையர் வரும் வரை போராட்டம் தொடரும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.






