என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலையை சீரமைக்க கேட்டு பொதுமக்கள் மறியல்
- சேலம் இரும்பாலை அடுத்த செம்மண் திட்டு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- இதை அடுத்து அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு செம்மண் திட்டு பஸ் ஸ்டாப் பகுதியில் இன்று காலை 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் இரும்பாலை அடுத்த செம்மண் திட்டு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அங்குள்ள சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு செம்மண் திட்டு பஸ் ஸ்டாப் பகுதியில் இன்று காலை 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் இன்று காலை இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்