என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள்"

    • 58 கிராம கால்வாய் திட்டம் உள்ளது.
    • கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் 58 கிராம மக்களின் குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிற்கான ஜீவாதாரமாக 58 கிராம கால்வாய் திட்டம் உள்ளது. இந்த திட்டம் மூலம் வைகை அணையிலிருந்து 17.6 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் 925 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    வழக்கமாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது ைவகை அணையில் 69 அடிக்கு மேல் நீர் நிரம்பி இரண்டு முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டும் 58 கிராம கால்வாயிலோ அல்லது திருமங்கலம் பிரதான கால்வாயிலோ தண்ணீர் திறக்கப்பட வில்லை.

    இதுகுறித்து கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக உசிலம்பட்டி மற்றும் விருவீடு பகுதியில் வைகை அணையில் இருந்து 58 நீர் பாசன கால்வாயில் தண்ணீரை திறக்க கோரி முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதில் 58 கால்வாயில் தண்ணீரை திறக்க கோரியும், 58 கிராம பாசன கால்வாயை நீர்ப்பாசன கால்வாயாக மாற்ற கோரியும், உசிலம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோரியும் புறவழிச் சாலை அமைக்க கோரியும் உசிலம்பட்டி பகுதி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வன பாதுகாப்பு சட்டம் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விவசாய சங்கங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு மதுரை ரோட்டில் இருந்து தேவர் சிலை வரை ஊர்வலம் நடத்தினர்.

    உசிலம்பட்டி பகுதியில் கடையடைப்பின் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர். 

    • போலீசார் பஸ் கண்ணாடியை உடைத்தாக ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர்.
    • பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் இருந்து இன்று காைல அரசு பஸ் ஒன்று விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் பயணம் செய்தனர். இதனால் பஸ்சில் கூட்டம் அலை மோதியது.

    இந்த நிலையில் அந்த பஸ் காலை 7.30 மணியளவில் விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டி அருகே வந்த போது அங்குள்ள பஸ் நிறுத்ததில் நிற்காமல் சென்றது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் பஸ்சின் மீது கல்லை கொண்டு ஏறிந்தனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் பஸ் கண்ணாடியை உடைத்தாக ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர்.

    அப்போது அங்கிருந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதனைதொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • பெண்கள், குழந்தைகள் உள்பட பொது மக்கள் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என். கார்டன் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு நோய் தொற்று மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக ஜி.என்.கார்டன் நுழைவு வாயில் முன்பு நேற்று காலை 9 மணி முதல் பொதுமக்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள், பத்திர எழுத்தர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிகாமணி தலைமையில் பொதுமக்கள், மாவட்ட கலெக்டர், மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

    அதன்பேரில் மாநகர நல அலுவலர் நேரில் சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பை மீது மண்ணை கொட்டி மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதற்கு அவர் பரிசீலனை செய்வதாக கூறி அங்கிருந்து சென்றார்.

    இந்தநிலையில் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி பெண்கள், குழந்தைகள் உள்பட பொது மக்கள் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் அனைவருக்கும் அங்கேயே இரவு உணவு மற்றும் காலை உணவு, குடிநீர், தேனீர் ஆகியவை வழங்கப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டம் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நல்லூர் ஊராட்சி சார்பாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
    • போராட்டம் காரணமாக அந்த வழியாக சாலையின் இரு புறம் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நல்லூர் ஊராட்சி சார்பாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். ஆனாலும் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இன்று காலை அந்த பகுதி சேர்ந்தயை 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் புளியம்பட்டி-சத்தியமங்கலம் ரோடு பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் காரணமாக அந்த வழியாக சாலையின் இரு புறம் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் புளியம்பட்டி போலீசார் மற்றும் பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாரி இந்திராணி, உங்கள் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட அங்கிருந்து கலந்து சென்றனர்.

    சுமார் ஒரு மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • வன ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவில் ஒற்றை யானை நடமாடி வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை காரணமாகவும், வெயிலின் தாக்கம் காரணமாகவும் உணவு, தண்ணீரை தேடி யானைகள் அடிக்கடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களை சேதப்படுத்துவதும், பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் அந்தியூர், வெள்ளித் திருப்பூர் அருகே மோத்தங்கல்புதூர் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவில் ஒற்றை யானை நடமாடி வருகிறது. பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கிறது. விவசாயிகள் விரட்ட முயன்றால் துரத்தி தாக்க முயல்கிறது.

    இது தவிர தோட்டத்து பகுதியில் வீட்டை சுற்றி வளர்க்கப்படும் வாழை மரங்களையும் சேதப்படுத்தி வருகிறது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சென்னம்பட்டி வன ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    நீண்ட போராட்டத்துக்கு பிறகு பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கடந்த 10 நாட்களில் அய்யன் தோட்டத்தை சேர்ந்த ராஜா, சோமு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வாழை, எலுமிச்சை மற்றும் கரும்பை ஒற்றை யானை தின்று சேதப்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-, கடந்த 10 நாட்களுக்கு மேலாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் ஒற்றை யானை கிராமத்துக்குள் புகுந்து தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை. எலுமிச்சம்பழம் போன்றவற்றை தின்று சேதப்படுத்தி வருகிறது.

    நாங்கள் பட்டாசுகளை கொண்டு விரட்டினாலும் வனப்பகுதிக்குள் செல்லும் யானை மீண்டும் சிறிது நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் தூக்கத்தை இழந்தும் நிம்மதியை இழந்தும் தவிக்கின்றனர். எனவே வனத்துறையினர் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானை நெலாக்கோட்டையில் இருந்து வெளியேறி வந்த வழியாக காட்டுக்குள் திரும்பி சென்றது.
    • தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டை அமைந்து உள்ளது. இது மலைஅடிவாரத்தை ஒட்டிய கிராமம் ஆகும்.

    இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை இன்று அதிகாலை நெலாக்கோட்டை கிராமத்துக்கு வந்தது. பின்னர் அங்கு நின்ற வாகனங்களை தந்தத்தால் முட்டி சேதப்படுத்தியது. மேலும் நெலாக்கோட்டை வீடுகளின் பக்ககவாட்டு சுவர்களை இடித்து தள்ளியது.

    இதற்கிடையே தெருநாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு கிராம மக்கள் திடுக்கிட்டு விழித்து வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது தெருவில் காட்டு யானை சுற்றி திரிவது தெரிய வந்தது.

    இதனை பார்த்து கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வரவில்லை என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து நெலாக்கோட்டை கிராமத்தினர் திரண்டு வந்து பெரிதாக சத்தம் எழுப்பியும், தகரங்களை தட்டி ஓசை எழுப்பியும் காட்டு யானையை விரட்டினர். பின்னர் அந்த யானை நெலாக்கோட்டையில் இருந்து வெளியேறி வந்த வழியாக காட்டுக்குள் திரும்பி சென்றது.

    நெலாக்கோட்டை கிராமத்துக்குள் இன்று அதிகாலை புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு நின்ற வாகனங்களை தாக்கியதுடன் வீடுகளையும் சேதப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நெலாக்கோட்டை-கூடலூர் போக்குவரத்து சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன்காரணமாக நெலாக்கோட்டை-கூடலூர் ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து நெலாக்கோட்டை கிராமத்தினர் கூறுகையில், எங்கள் பகுதிக்கு காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. மேலும் அவை குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    தொடர்ந்து நாங்கள் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க வலியுறுத்தி வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தோம். இருந்தபோதிலும் அவர்கள் நெலாக்கோட்டை பகுதியில் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

    • கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    புதுச்சேரியில் தினமும் சராசரியாக 96 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இரவு நேரங்களிலும் வெப்பச்சலனம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தூக்கம் இழந்து தவிக்கும் நிலை உள்ளது.

    வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி, கிர்ணி, பழச்சாறு உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 96.26 டிகிரி பாரன்ஹீட பதிவானது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் வலுவிழந்தது. இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.

    இதன் காரணமாக, 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியது. திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

    • தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 ணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதி க்கப்படுகின்றனர்
    • பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பூங்காவை (ஸ்டெம் பூங்கா) கடந்த ஜூலை மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, ஏசி வசதி உடன் தொழில்நுட்ப கோளரங்கம், விண்வெளிக்கு அனுப்பப்படும் ஏவுகணைகளான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஏவுகணைகள் மாதிரி, 16 வடிவில் ராட்சத டைனோசர் பொம்மைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    இந்நிலையில் இந்த ஸ்டெம் பூங்காவில் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 ணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதி க்கப்படுகின்றனர்.

    இதனால் விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளை பகலிலே அழைத்து வர முடியாமல் பெற்றோர் அவதிப்படுகின்றனர். மேலும் பூங்காவில் உள்ள ஒவ்வொரு அறிவியல் உபகரணங்களையும் விளக்கி கூற போதிய ஆட்கள் இல்லை.

    பொதுமக்களாகவே பார்த்து தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

    இது தவிர பூங்காவானது முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே பூங்காவுக்குள் அனுமதிக்கப்படும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

    உபகரணங்களை விளக்க ஆட்களை நியமித்து முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூட்டத்தில் பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
    • கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நாளை (புதன் கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொது மக்களுடன் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேண்டும் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • சித்தேரி, கலசபாடி, அரசநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கனமழை பெய்தது.
    • வெள்ள நீரில் மலைப்பாம்பு ஒன்று அடித்து வரப்பட்டது .

    அரூர்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட சித்தேரி, கலசபாடி, அரசநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக பகுதியில் உள்ள வரட்டாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று காலை அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி கிராமத்தில் சாமநத்தம் ரங்கசாமி தோட்டத்தின் அருகே செல்லும் வரட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த வெள்ள நீரில் மலைப்பாம்பு ஒன்று அடித்து வரப்பட்டது . இதனை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    • காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.
    • தோவாளை தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    பூதப்பாண்டி:

    பூதப்பாண்டி அருகே பேச்சாங்குளம் பகுதியில் வேம்படிகுளம் உள்ளது. இந்த குளத்தின் இரு கரைகளிலும் சுடுகாடு, இடுகாடு உள்ளது. இதில் சுடுகாடு அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் தனியார் ஒருவர் தென்னந்தோப்பு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த தென்னந்தோப்பிற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அவர் தோவாளை தாசில்தாரிடம் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து அந்த பகுதியில் சுடுகாடு, இடுகாடு மக்கள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளார். இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேச்சாங்குளம் பகுதியில் திரண்டனர்.

    திடீரென நாகர்கோவில்-இறச்சகுளம் சாலையில் பேச்சாங்குளம் பகுதியில் ஊர் தலைவர் கார்த்திக் தலைமையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறச்சகுளம் ஊராட்சி தலைவர் நீலகண்ட ஜெகதீஷ், துணை தலைவர் மனோ சிவா, மீனவ கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சகாயம், தி.மு.க. தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நாகர்கோவில் ஏ.டி.எஸ்.பி. லலித்குமார், இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தோவாளை தாசில்தார் கோலப்பன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டு அகற்றப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட பஸ்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்தும் சீரானது. பின்னர் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்றினர்.

    • பாலேகுளி, பேவநத்தம் வழியாக சென்ற யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின.
    • யானைகள் எந்த நேரத்திலும் சானமாவு அல்லது ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ஜார்க்கலட்டி அருகே உள்ள முத்துார் கிராமத்தில் தனியார் மாந்தோப்பில் 6 யானைகள் முகாமிட்டிருந்தன.

    அவற்றை நேற்று முன்தினம் மாலை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். அப்போது சம்பத் நகர், பாலேகுளி, பேவநத்தம் வழியாக சென்ற யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின. பின்னர் நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பேவநத்தம் அருகே உள்ள புதூர் வனப்பகுதிக்கு யானைகள் சென்றன.

    இந்த யானைகள் எந்த நேரத்திலும் சானமாவு அல்லது ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது. 6 யானைகள் நடமாட்டத்தால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    ×