search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stem Park"

    • தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 ணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதி க்கப்படுகின்றனர்
    • பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பூங்காவை (ஸ்டெம் பூங்கா) கடந்த ஜூலை மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, ஏசி வசதி உடன் தொழில்நுட்ப கோளரங்கம், விண்வெளிக்கு அனுப்பப்படும் ஏவுகணைகளான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஏவுகணைகள் மாதிரி, 16 வடிவில் ராட்சத டைனோசர் பொம்மைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    இந்நிலையில் இந்த ஸ்டெம் பூங்காவில் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 ணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதி க்கப்படுகின்றனர்.

    இதனால் விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளை பகலிலே அழைத்து வர முடியாமல் பெற்றோர் அவதிப்படுகின்றனர். மேலும் பூங்காவில் உள்ள ஒவ்வொரு அறிவியல் உபகரணங்களையும் விளக்கி கூற போதிய ஆட்கள் இல்லை.

    பொதுமக்களாகவே பார்த்து தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

    இது தவிர பூங்காவானது முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே பூங்காவுக்குள் அனுமதிக்கப்படும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

    உபகரணங்களை விளக்க ஆட்களை நியமித்து முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11.50 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம்அமைக்கப்பட்டு வருகிறது.
    • ஸ்டெம் பூங்காவை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11.50 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா (ஸ்டெம் பூங்கா) அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    இந்த நிலையில் இன்று இந்த ஸ்டெம் பூங்காவை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்குள்ள கோளரங்கம், ராக்கெட் தளம் உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சி சார்பில் ஸ்டெம் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

    95 சதவீதம் பணிகள் முடிவடைந்து இதர பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணி அடுத்த மாதத்தில் முடிவடைந்து பொதுமக்கள், மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

    இந்த ஸ்டெம் பூங்காவை விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

    சில மாணவ-மாணவிகள் இணையதள விளையாட்டில் மூழ்கி கவனத்தை சிதற விடுகின்றனர்.

    இதனால் அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது.

    அந்த எண்ணத்தை ஸ்டெம் பூங்கா மாற்றும்.

    இந்த பூங்காவுக்கு மாணவர்கள் வருவதன் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த அறிவு வளர்ச்சி மேலும் அவர்களுக்கு வளரும்.

    இங்குள்ள கோளரங்கம், ராக்கெட் தளம் உள்ளிட்ட பல வகைகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த பூங்காவால் அவர்கள் இணையதள விளையாட்டில் மூழ்க மாட்டார்கள்.

    அவர்களின் படிப்பிருக்கும் மிகவும் உறுதுணையாக இந்த பூங்கா அமையும்.

    எனவே திறப்பு விழா முடிந்த பிறகு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்டிப்பாக பூங்காவுக்கு அழைத்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ், மண்டல குழு தலைவர் ரம்யா சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×