search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "picket"

    • உசிலம்பட்டி அருகே 58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மறியல் போராட்டம் நடந்தது.
    • இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் விவசாயிகளின் வாழ் வாதாரமாக கருதப்படும் 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் போ ராட்டம் நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் உசிலம் பட்டி பேருந்து நிலையம் அருகே அனைத்து கள்ளர் கூட்டமைப்பு ஒருங் கிணைப் பாளர் தியாகராஜன் தலை மையில் விவசாயிகளின் காவலனாக கருதப்படும் ஏர் பிடித்து பொதுமக்கள் மற்றும் அனைத்து கள்ளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அந்த பகுதி பரபரப்பு நிலவியது தகவல் அறிந்து வந்த நகர் காவல் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    • பண்ருட்டியில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் இந்திய கம்யூ. சார்பில் சாலை மறியல் நடந்தது.

    கடலூர்:

    சென்னையில் இந்திய கம்யூ. கட்சி தலைமை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் இந்திய கம்யூ. சார்பில் சாலை மறியல் நடந்தது. இது பற்றிய தகவலறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் கண்ணன் தலைமை யிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் துரை உள்ளிட்ட 29 பேரை கைது செய்தனர்.

    • அதிராம்பட்டினம் மிலாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.
    • பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் மிலாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.

    இவரது மனைவி கவிநிலா ( வயது 24) .

    இவர் கர்ப்பமான நிலையில் நாட்டுச்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து அவர் அங்கேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் பிரச வத்திற்காக சேர்க்க ப்பட்ட கவிநிலாவை நாட்டை ச்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்க வைத்து விட்டு டாக்டர் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கவிநிலா விற்கு பணிக்குடம் உடைந்து விட்டதாகவும் உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தியுள்ளனர்.

    அதன் பிறகு ஆம்புலன்ஸ் பிடித்து கவிநிலாவை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சிகிச்சை அளித்த போது தாயை காப்பாற்ற முடிந்தது, தாமதமாக வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திமடைந்த அவரது உறவினர்கள் எங்களது குழந்தையின் உயிர் போக காரணமாக இருந்த வர்களை கைது செய்ய வேண்டும், குழந்தை இறந்த குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அரை மணி நேரத்திற்கு மேல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    சாலை மறியல் தொடர்ந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படாத பட்சத்தில் பட்டுக்கோட்டை வட்டாட்சி யர் ராமச்சந்திரன் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இது குறித்து பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    • வேகத்தடை அமைக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் சென்னை- கும்பகோணம் சிதம்பரம் பிரதான சாலை பின்னலூர் கிராமத்தில் கிராம மக்கள் ஒன்று திரண்டு வேகத்தடை அமைக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்து சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார், இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது சிவன் கோவில் அருகில் மற்றும் பஸ்நிறுத்தம் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது.

    தற்போது சாலை அமைக்கப்பட்ட பின்பு அந்த இடத்தில் வேகத் தடை அமைக்கப்படவில்லை . இதனால் தொடர்ந்து விபத்து நடக்கிறது. எனவே வேகத்தடை அமைக்கும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் டி.எஸ்.பி. பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 3 மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்ய படவில்லை
    • 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பந்தரபள்ளி ஊராட்சி நல்லகிந்தனபள்ளி கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இந்த பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்க பொக்லைன் எந்திரம் மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்ட ப்பட்டது.

    இதுவரை அந்த பள்ளத்தை மூடாத காரணத்தால் அப்பகுதி சிறுவர்கள் பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் 3 மாத காலமாக குடிநீரும் சரிவர விநியோகம் செய்ய படவில்லை. இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாசரவண னிடம் புகார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பச்சூர்- குப்பம் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறைப்பிடித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நீடித்ததால் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று போராட்டக்கா ரர்களிடம் சமரசம் பேசினர். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முடங்கியார்சாலையில் உள்ள கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    மாலையாபுரம் பகுதியில் சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கி ளில் வந்த ஒரு தரப்பினர் கல்லூரி மாணவர்களிடம் தகராறு செய்து அவர்களை துரத்திச் சென்று சரமாரி யாக தாக்கினர்.

    கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ராஜபாளையத்தில் ஒரு தரப்பினரை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி கூறியதை யடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதோடு மட்டுமின்றி அன்றிரவே கல்லூரி மாணவர்களை தாக்கியதாக 4 பேரை போலீசார் கைது செய்ததாக தெரிகிறது. ஆனால் அவர்களை போலீசார் விடுவித்ததாக கூறி மீண்டும் நேற்று காலை ராஜபாளையம் முடங்கியார் சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சாலை மறியலால் ராஜபாளையத்தில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகம் வெளியிட் டுள்ள செய்தி அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    ராஜபாளையம் சோமையாபுரத்தை சேர்ந்த அய்யனார் மகன் சதீஷ் (வயது19). இவருக்கும் அம்பேத்கார் நகரை சேர்ந்த ராசு மகன் (21) என்ப வருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் செல்வம் தரப்பினர் சதீஷ் மற்றும் அவரது தரப்பினரை தாக்கினர். இது தொடர்பாக ராஜபாளையம் வடக்கு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அழகுராஜ் மகன் அமர்நாத்(21), கந்தசாமி மகன் கார்த்தீஸ்வ ரன்(25), ராசு மகன் செல்வம், ராஜேந்திரன் மகன் அருண்குமார்(20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்ட சோமையாபுரத்தை சேர்ந்த தங்கபழம், சடைபாண்டி, ஜமீன்தார், மலை ராஜா, வெள்ளை யம்மாள், அவ்வம்மாள், பாண்டியராஜ், சின்ன இருளாயி, விக்டோரியா, இதயக்கனி, ஜாக்குலின், கருப்பையா, வரதன், லிங்கராஜ், முனியசாமி, செல்லக்கனி, முத்துமணி ஆகிய 17 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.

    • குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாந கராட்சியின் 9-வது வார்டான உத்தங்குடி சாலை அம்பேத்கார் நகர் மறறும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்ய வில்லை.

    இதனால் அப்பகுதி பெண்கள் மற்றும் பொது மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்கு நீண்ட தூரம் செல்லும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதை கண்டித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை உத்தங்குடி மெயின் ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • மகாராஷ்டிராவில் லாரியில் செல்லும் போது, கடந்த 7-ந் தேதி சாலை விபத்து ஏற்பட்டு, அவரது கால் துண்டாகி விட்டது.
    • மருத்துவ உதவிக்கு நகை அடமானம் வைக்க சென்ற தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக மகேஸ்வரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அருகே நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் சங்கர் (வயது 50). இவர் மகாராஷ்டிராவில் லாரியில் செல்லும் போது, கடந்த 7-ந் தேதி சாலை விபத்து ஏற்பட்டு, அவரது கால் துண்டாகி விட்டது.

    இதையடுத்து மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் டிரைவர் சங்கரின் மருத்துவ செலவுக்காக, அவரது வீட்டில் உள்ள 3 பவுன் நகையை அடமானம் வைக்க அவரது மனைவி மகேஸ்வரி (40), எலச்சிப்பாளையம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில், மகேஸ்வரி அடமானம் வைக்க கொடுத்த நகை போலி என்று கூறி, வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் வாங்க மறுத்து விட்டனர். மேலும் அவரை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    மருத்துவ உதவிக்கு நகை அடமானம் வைக்க சென்ற தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக மகேஸ்வரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் முன்னிலையில் எலச்சிபாளையம் வங்கி முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 11 மணி முதல் மாலை 3.30 வரை போராட்டத்தில் ஈடுபட்டும், வங்கி நிர்வாகத்தினர் இதை கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து எலச்சிபாளையம் போலீஸ் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் செல்லதுரை, கிராம நிர்வாக அலுவலர் சுகந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில், இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணுவதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலக்காடு ஊராட்சி, பாலிக்காடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.
    • ரூ.1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இன்று காலை மேட்டூர் - கொளத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலக்காடு ஊராட்சி, பாலிக்காடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.

    இவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில், ஒரு குறிப்பிட்ட நபர்களின் அடையாள அட்டையில் மட்டும் சீல் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சீல் வைத்துள்ளவர்களுக்கு மட்டும் உதவி தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று தகவல் வெளியானது. இதனை அடுத்து அடையாள அட்டையில் சீல் வைக்கப்படாத பணியாளர்கள், தங்களுக்கும் ரூ.1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இன்று காலை மேட்டூர் - கொளத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினார்.

    இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 45 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஒகளூர் பேருந்து நிலையம் அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு மறியல் நடைபெற்றது
    • மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் செல்லம்மாள் என்பவர் உயிரிழந்தார்.

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள ஒகளூர் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் செல்லம்மாள் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உறவினர்கள் செல்லம்மாளின் உடலை வாங்க மறுத்து ஒகளூர் பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது செல்லம்மாளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு சென்ற மங்களமேடு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • புதுக்கோட்டை கிராமத்தின் வழியாக 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தினமும் சென்று வருவதால் புழுதி மண்டலமாக மாறி உள்ளது.
    • தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் காற்றின் வேகத்தால் இந்த புழுதிகள் இங்கு பயிரிடப்பட்டுள்ள பருத்தி உள்பட பயிர்கள் மீது மணல்கள் பட்டதால் பூ கருகி நாசமாகும் நிலை உள்ளது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தின் வழியாக காற்றாலை கனரக வாகனங்கள் சென்று வருதவால் பாதிக்கப்படுவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் ெதாடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை பகுதி வழியாக சென்ற கனரக வாகனங்களை அப்பகுதியினர் சிறைபிடித்து இன்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறும்போது, எங்களது ஊரின் வழியாகவும், விவசாயம், வாகன தடங்கள் வழியாகவும் 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தினமும் சென்று வருவதால் புழுதி மண்டலமாக மாறி உள்ளது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் காற்றின் வேகத்தாலும் இந்த புழுதிகள் இங்கு பயிரிடப்பட்டுள்ள பருத்தி, மக்காச்சோளம், வெண்டை, கத்தரி உள்பட பயிர்கள் மீது மணல்கள் பட்டதால் பூ கருகி நாசமாகும் நிலை உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

    தேவகோட்டையில் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்தும், மாநில தலைவர் அண்ணாமலை பேரணியை தடுத்ததை கண்டித்தும் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். நகரத்தலைவர் ரிஷிபாலகிருஷ்ணன், தேவகோட்டை ஒன்றிய தலைவர் ஏலப்பன், கண்ணங்குடி ஒன்றிய தலைவர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். 

    மாவட்ட செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிர் அணி தலைவி கோமதி நாச்சியார் முன்னிலை வகித்தனர். தேவகோட்டை பஸ் நிலையத்தில் மறியல் செய்யப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    முன்னதாக தியாகிகள் பூங்காவில் இருந்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு பஸ் நிலையம் வாசலில் அமர்ந்து பஸ் மறியல் செய்தனர். 

    இதில் இறகுசேரி காசிராஜா, புதுகுறிச்சி ராமலிங்கம், இருமதி முத்துராமலிங்கம், ஆசைத்தம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    மறியலில் ஈடுபட்டவர்களை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

    ×