search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்கள் நின்று செல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    அரசு பஸ்கள் நின்று செல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்

    • வாண்டான் கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என குற்றச்சாட்டு
    • உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளம் வாண்டா கோட்டை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவ்வழியாக செல்லும் அரசு பேருந்துங்கள் இங்குள்ள பஸ் நிறுத்த்தில் நீண்ட காலமாக நிறுத்துவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும்மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் போக்குவரத்து கழகத்தில் பலமுறை மனு கொடுத்தும் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் சாலையில் நின்றதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இது குறித்து தகவல் அறிந்தசம்பவ இடத்திற்கு வந்த வல்லத்திரக்கோட்டை போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×