என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செங்கோடு அருகே கழிவுநீர் சாக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
- சீத்தாராம் பாளையத்தில் இருந்து சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு ரூபாய் ஒருகோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்க திட்டவரைவு தயாரிக்கப்பட்டு சூரியம்பாளையம் பகுதி வழியாக அதனை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து நமக்குநாமே திட்டத்தில்ரூ.33 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பாக நகராட்சியில் செலுத்தப்பட்டது.
- சூரியம் பாளையம்பகுதி பொதுமக்கள் இந்த கால்வாய் அமைவதனால் 4 வார்டுகளில் இருந்த மழைநீர் மற்றும் கழிவு நீர் தங்களது பகுதி வழியாக செல்லும் எனவும் அவ்வாறு செல்வதால் தங்களது குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவும் தங்களது பகுதியாக வழியாக கொண்டு செல்லக் கூடாது என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி இன்று திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு நகராட்சி தொண்டிக்கரடு முனியப்பன் கோவில் குப்பண்ணன் காடு பகுதியில் இருந்து கடந்த 50 வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த மழைநீர் ரோட்டில் தேங்கும் பிரச்சினைக்குதீர்வு காண சீத்தாராம் பாளையத்தில் இருந்து சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு ரூபாய் ஒருகோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்க திட்டவரைவு தயாரிக்கப்பட்டு சூரியம்பாளையம் பகுதி வழியாக அதனை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து நமக்குநாமே திட்டத்தில்ரூ.33 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பாக நகராட்சியில் செலுத்தப்பட்டது.
இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் இதனை அறிந்த சூரியம் பாளையம்பகுதி பொதுமக்கள் இந்த கால்வாய் அமைவதனால் 4 வார்டுகளில் இருந்த மழைநீர் மற்றும் கழிவு நீர் தங்களது பகுதி வழியாக செல்லும் எனவும் அவ்வாறு செல்வதால் தங்களது குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவும் தங்களது பகுதியாக வழியாக கொண்டு செல்லக் கூடாது என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி இன்று திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு தேவானங்குறிச்சி சாலையில் நடந்த இந்த மறியலில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் டிஎஸ்பி பொறுப்பு பழனிசாமி, நகர காவல் ஆய்வாளர் செந்தில் குமார், நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம், மேலாளர் குமரேசன் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் . உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சுமார் ஒருமணி நேரம் நடந்த சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் சூரியம் பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்