என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![சுப்பிரமணியபுரம் பகுதியில் பொதுமக்கள் மறியல் சுப்பிரமணியபுரம் பகுதியில் பொதுமக்கள் மறியல்](https://media.maalaimalar.com/h-upload/2022/12/30/1814701-untitled-1.webp)
சுப்பிரமணியபுரம் பகுதியில் பொதுமக்கள் மறியல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சுப்பிரமணியபுரம் பகுதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்
- கடந்த 5 தினங்களாக குடிநீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வந்தனர்
திருச்சி:
திருச்சி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட சுப்ரமணியபுரம் பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் போது சுப்பிரமணியபுரம் பகுதிக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் உடைத்துவிட்டனர். இதனால் கடந்த 5 தினங்களுக்கு மேலாக சுப்ரமணியபுரம் பகுதிக்கு மாநகராட்சி குடிநீர் வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பிலும், அ.ம.மு.க. கவுன்சிலர் செந்தில்நாதன் தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடைக்கப்பட்ட குடிநீர் குழாயை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் கடந்த 5 தினங்களாக குடிநீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இதரப் பகுதிகளை நோக்கி குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலையும் நிலை உள்ளது.இந்நிலையில் குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து இன்று கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கே.கே நகர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர் செந்தில்நாதன் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் குழாயை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)