search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Political Parties"

    • சங்கரய்யா மறைவுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
    • மவுன ஊர்வலத்துக்கு தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவிற்கு சிவகாசியில் பல்வேறு கட்சி சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி மவுன ஊர்வலம் நடந்தது. காமராஜர் சிலையில் இருந்து சிவன் கோவில் முன்பு வரை நடந்த ஊர்வலத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். மவுன ஊர்வலத்துக்கு தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் தி.மு.க. சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபிக்கண்ணன், மாநகர பகுதி செயலாளர்கள் காளிராஜன், கருணாநிதிப்பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவா, பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜீவா, சமுத்திரம், பா.ஜ.க. மாநகர தலைவர் பாட்டாகுளம் பழனிச்சாமி, தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநகர கவுன்சிலர் ராஜேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் செல்வின் யோசுதாஸ், பைக்பாண்டி, பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • பா.ஜ.க, வை பொறுத்தவரை 9 தொகுதிகளை தேர்வு செய்து, கடந்த 2 ஆண்டாகவே களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
    • 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது.

    திருப்பூர்:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.மாநிலத்தில் தி.மு.க., -அதி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட தொடங்கி உள்ளன. பா.ஜ.க, வை பொறுத்தவரை 9 தொகுதிகளை தேர்வு செய்து, கடந்த 2 ஆண்டாகவே களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களையே அடையாளம் காட்டி விட்டது. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க, 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது.

    இதற்காக வாக்காளர் பட்டியலில், துல்லியத் தன்மை கொண்டு வரும் நோக்கில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, பெயரில் உள்ள பிழைகளை சரி செய்ய, முகவரி மாற்றம் செய்வதற்கென சிறப்பு முகாம் அடுத்த மாதம் 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நடத்தப்பட இருக்கிறது.

    இதற்கு திருப்பூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் தயாராகியுள்ளன. முகாம்களில் கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகளில் முழு அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தி.மு.க., தலைமை நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதே போன்று பிற கட்சிகளும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன.

    • காமராஜர் சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் நெல்லை மேற்கு மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, வக்கீல் பிரிவு இணை செயலாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகி கள் சொக்கலிங்க குமார், ராஜேஷ் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா

    நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வெங்கடாஜலபதி, நாகராஜன், மேகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், இளை ஞர் அணி பிரபாகரன், ஜெட் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செய லாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொது செயலாளர் சுந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சரத் ஆனந்த், மாநில மாணவரணி துணை செய லாளர் நட்சத்திர வெற்றி, நெல்லை பகுதி செயலாளர் அழகேசராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    அ.ம.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை சத்யா தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையிலும், தமிழ் தேச தன்னுரிமைக் கட்சி சார்பில் நிறுவன தலைவர் வியனரசு தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் சேகர், தொழிற்சங்கம் மகேந்திரன், மாநகர செயலாளர் துரைப் பாண்டியன், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் துவரை மாரியப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென் மண்டல தலைவர் ராஜபாண்டியன் கலந்து கொண்டார். நிர்வாகிகள் பச்சையப்பன், லட்சுமி, நந்தினி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வந்தேபாரத் ரெயிலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
    • விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    விருதுநகர்

    இந்திய ரெயில்வேயில் அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 9 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    அந்த வகையில் தென் மாவட்ட மக்களின் அதிக எதிர்பார்ப்பாக இருந்த இந்த ரெயில் நேற்று நெல் லையில் இருந்து சென் னைக்கு புறப்பட்டது.

    நேற்று மதியம் 12.30 மணியளவில் நெல்லையில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 2.18 மணிக்கு வந்தது. இந்த ரெயிலில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன், மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் நயினார் நாகேந்தி ரன் எம்.எல்.ஏ., துரை கோட்ட ரெயில்வே ேமலா ளர் ஆனந்த பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்தனர்.

    வந்தேபாரத் ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத் தில் நுழைந்தவுடன் அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்களும் கைதட்டி ரெயிலை வர வேற்றனர்.

    இதனை தொடர்ந்து விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டு ரெங்கன் ரெயிலில் வந்த கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய இணை மந் திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சி பிரமுகர்க ளுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த வர வேற்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். அதே போல ரெயில் நிலைய அதிகாரி கண்ணன், வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ், போக்குவரத்து ஆய்வாளர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வந்தே பாரத் ரெயில் வருகையை முன்னிட்டு விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்பு படையினரும் ரெயில் நிலையத்தில் பாது காப்பு ஏற்பாடுகளை செய் திருந்தனர்.

    • தி.மு.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க.-அ.தி.மு.க.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அவை தலைவர் வி.கே.முருகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் துணை மேயர் ராஜு, பொருளாளர் வண்ணை சேகர், எல்ஐசி பேச்சிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு காசி மணி, சஞ்சய்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா, அமைப்புச் செயலா ளர் சுதா பரமசிவன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலா யுதம், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கர லிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், டவுன் கூட்டுறவு வங்கித் தலைவர் பால் கண்ணன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், காந்தி வெங்கடா சலம், சின்னதுரை, ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர், ஜெய்சன் புஷ்பராஜ், பாறையடி மணி, சீனி முகம்மது சேட், டால் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார். இதில் பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக் குழு உறுப்பினர் சொக்க லிங்க குமார், பொதுச் செயலாளர் மகேந்திர பாண்டியன், மண்டல தலைவர் ராஜேந்திரன், கெங்கராஜ், பரணி இசக்கி, அய்ப்பன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் தனசிங் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க.-ம.தி.மு.க.

    தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் அவைத்தலைவர் மாடசாமி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கொம்பையா பாண்டியன், துணைச் செயலாளர் சின்னத்துரை, நிர்வாகிகள் கலைவாணர், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட செய லாளர் சீயோன் தங்க ராஜ் தலைமையில் நிர்வா கிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.ம.மு.க.-ச.ம.க.

    அ.ம.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் பரமசிவன், மேற்கு மாவட்ட செயலாளர் ஆசீர், மாநில எம். ஜி. ஆர். மன்ற இணைச் செயலாளர் ஆவின் அன்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், தேர்தல் பிரிவு செயலாளர் குமரேசன், இளைஞர் அணி செயலாளர் மகேஷ் கண்ணன்,ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலா ளர் அழகேசன் தலைமை யிலும், தமிழர் உரிமை மீட்பு களம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலை மையிலும், புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செய லாளர் முத்தையா ராமர் தலைமையிலும், நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    நெல்லை மாவட்ட அரசு ஊழியர்கள் எஸ்.சி., எஸ்.டி. சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சின்னதுரை தலை மையில் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழர் விடுதலை களம் சார்பில் நிறுவன தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
    • 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர்.

    தாராபுரம் :

    வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு தொடங்கியது.

    'Voter Help Line' செயலி, nvsp.in என்கிற தேர்தல் கமிஷன் இணையதளம் வாயிலாக ஆதார் எண் இணைக்க வழிவகை செய்யப்பட்டது. வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்றபோது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விவரங்களை பெற்றனர். ஆதார் இணைப்புக்கு இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர். இவர்களில் இதுவரை 55.84 சதவீதம் பேர் அதாவது 12 லட்சத்து 90 ஆயிரத்து 837 பேர் மட்டுமே ஆதார் எண் இணைத்துள்ளனர்.வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் 36.13 சதவீதத்துடன் திருப்பூர் வடக்கு தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 3.84 லட்சம் பேரில் 1.38 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர். பல்லடம் தொகுதியில் 52.13 சதவீதம் பேர், திருப்பூர் தெற்கில் 53.80 சதவீதம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். ஆதார் இணைப்பு விகிதத்தில் மடத்துக்குளம், உடுமலை தொகுதிகள் முந்துகின்றன.

    2.29 லட்சம் வாக்காளரில் 1.58 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதனால் 69.04 சதவீதத்துடன் ஆதார் இணைப்பில் மடத்துக்குளம் முன்னிலை வகிக்கிறது. உடுமலையில் 63.21 சதவீதம், தாராபுரத்தில் 62.68,அவிநாசியில் 61.47, காங்கயத்தில் 60.76 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.போலிகளை களைந்து செம்மையான வாக்காளர் பட்டியல் உருவாக வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு மிகவும் அவசியமாகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் மொத்த வாக்காளரில் 44 சதவீதம் அதாவது 10.20 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண் இணைக்கவி ல்லை. தேர்தல் கமிஷன், ஆதார் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி 100 சதவீத ஆதார் இணைப்பை எட்ட செய்யவேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • 17 ம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17 ம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் வி.எம். சண்முகம் தலைமையில்,பல்லடம் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர செயலாளர் செல்வராஜ், வீரபாண்டி பகுதி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் இது குறித்து ஓ.பி.எஸ்.சிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.இதே போல பா.ஜ.க.திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல், விவசாய அணி மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் காத்திருப்புப் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்தனர். இரும்பு உருக்காலை அனுமதியின்றி இயங்கிய விவகாரத்தில் துணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்தனர்.

    • தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
    • அதில் அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை குறைக்க வேண்டும் என்றது.

    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகள் தற்போது 20 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக நன்கொடை பெறலாம். அதற்கு மேல் காசோலை அல்லது மின்னணு பரிமாற்றம் மூலமாக மட்டுமே நன்கொடை பெற முடியும். மேலும், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும்.

    சில அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெறவில்லை என அறிக்கை அளிக்கின்றன. ஆனால் ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக ஒவ்வொருவரிடமும் ரொக்கமாக நன்கொடை பெற்று பெரும் பணம் திரட்டி விடுகின்றன.

    இந்நிலையில், இந்த முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜுவுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்க வேண்டும்.

    அப்படிச் செய்தால், ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பெற்ற அனைத்து நன்கொடை விவரங்களையும் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மை உருவாகும் என்று கருதப்படுகிறது.

    ஒரு அரசியல் கட்சி பெறும் மொத்த நன்கொடையில் 20 சதவீதமோ அல்லது ரூ.20 கோடியோ இதில் எது குறைவோ அந்த தொகைக்குள்தான் ரொக்கமாக பெறப்பட வேண்டும்.

    அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் வெளிநாட்டு நன்கொடைகள் புகுந்து விடாமல் தடுக்க விவாதம் நடத்தப்பட்டு சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்.

    தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அளிக்கும் தொகையை காசோலையாகவோ அல்லது மின்னணு பரிமாற்ற முறையிலோ மட்டுமே அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இந்த யோசனைகளை தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சேர்த்தால், ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலுக்கென தனி வங்கிக்கணக்கு தொடங்கி, அதன் வழியாகவே வரவு, செலவு கணக்குகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

    சமீபத்தில் செயல்படாத நிலையில் உள்ள 284 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் ஆணையத்தில் 2,796 கட்சிகள் பதிவு செய்துள்ளன.
    • அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

    இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே கடந்த 2019 மக்களவை தேர்தலில் களமிறங்கின.

    இந்நிலையில், கட்சிகள் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து உரிய விசாரணை நடத்தி அதனடிப்படையில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கட்சிகளை பதிவுசெய்தும், அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக நீக்கியுள்ளது.

    மேலும், தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    • பரமக்குடியில் வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.
    • தற்போது அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் பா.ஜ.க.விற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகா சபையின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 151 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    காட்டு பரமக்குடி பகுதியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர்.முத்தையா, சதன்பிரபாகர், பரமக்குடி நகர செயலாளர் ஜமால் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ம.தி.மு.க. சார்பில் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் குணா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, பரமக்குடி நகர் தலைவர் அகமது கபீர், மாவட்ட பொதுச் செயலாளர் ரபீக் அகமது, மாநில பேச்சாளர் ஆலம், மாநில நெசவாளர் அணி கோதண்டராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    தர்மர் எம்பி. தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கடலாடி முன்னாள் ஒன்றிய செயலாளர் மூக்கையா, பேரூர் செயலாளர் சதீஷ், கடலாடி ஒன்றிய செயலாளர் சண்முக பாண்டியன், வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், பரமக்குடி வின்சென்ட் ராஜா, நயினார் கோயில் வக்கீல் நவநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரஜினிகாந்த், கொடிக்குளம் சத்தியேந்திரன், கரைமேல் குடியிருப்பு சேதுராமன் உள்பட பலர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதன் பின்பு தர்மர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் ஆணி வேராக திகழும் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் ஓ. பன்னீர்செல்வம் பின்னால் தான் உள்ளனர். அ.தி.மு.க.விற்கு அவர்தான் தலைமை ஏற்க வேண்டும் என விரும்புகின்றனர். அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை சேர்க்கலாமா? என்பது குறித்து தலைமைதான் முடிவு செய்யும். தற்போது அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் பா.ஜ.க.விற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சோலைராஜா, சரவணன், தினேஷ்குமார், சிவா தேவன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • புதிய வெண்கல சிலை அமைப்பதற்கு முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக சிவபத்மநாதன் அறிவித்தார்.
    • சுமார் 3,300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் காமராஜர் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. தி.மு.க. சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா ஏற்பாட்டின் பேரில் கோவில் திருவிழா போன்று ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை வரை ஊர்வலமாக சென்றனர்.

    காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பேசிய மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், நான்கு வழிச்சாலையால் தற்போதுள்ள காமராஜர் சிலை பாதிப்புக்குள்ளாகும் நிலையில் புதிய வெண்கல சிலை அமைப்பதற்கு முழு செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் திரளானோர் பால்குடம் எடுத்து வீதி உலா வந்தனர். பின்னர் காமராஜர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சித் துணைத் தலைவர் ஜான்ரவி தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மேலும் ச.ம.க. சார்பில் நகர செயலாளர் ஜெயபாலன் தலைமையிலும், அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் முருகையா பாண்டியன் தலைமையிலும், தே.மு.தி.க. சார்பில் மாவட்டசெயலாளர் பழனிசங்கர் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் நகர செயலாளர் சொக்கலிங்கம் தலைமையிலும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    ஆலங்குளம் ஊர் மக்கள் சார்பாக கல்லூரி மற்றும் பள்ளி-மாணவ மாணவிகள், ஆதவரற்ற குழந்தைகள் இல்லம் உள்ளிட் இடங்களில் சுமார் 3,300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    • அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
    • தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தன. எனவே அந்தந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் இந்த கட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

    இந்நிலையில், இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

    இந்த 111 அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்த முகவரியில் செயல்படாதது தெரிய வந்தது. தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, இம்மாத தொடக்கத்தில் 87 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

    ×