வந்தேபாரத் ரெயிலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

வந்தேபாரத் ரெயிலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விருதுநகருக்கு வந்த வந்தே பாரத் ரெயில்
விருதுநகருக்கு வந்த வந்தே பாரத் ரெயில்
Published on

விருதுநகர்

இந்திய ரெயில்வேயில் அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 9 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் தென் மாவட்ட மக்களின் அதிக எதிர்பார்ப்பாக இருந்த இந்த ரெயில் நேற்று நெல் லையில் இருந்து சென் னைக்கு புறப்பட்டது.

நேற்று மதியம் 12.30 மணியளவில் நெல்லையில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 2.18 மணிக்கு வந்தது. இந்த ரெயிலில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன், மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் நயினார் நாகேந்தி ரன் எம்.எல்.ஏ., துரை கோட்ட ரெயில்வே ேமலா ளர் ஆனந்த பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்தனர்.

வந்தேபாரத் ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத் தில் நுழைந்தவுடன் அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்களும் கைதட்டி ரெயிலை வர வேற்றனர்.

இதனை தொடர்ந்து விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டு ரெங்கன் ரெயிலில் வந்த கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய இணை மந் திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சி பிரமுகர்க ளுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த வர வேற்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். அதே போல ரெயில் நிலைய அதிகாரி கண்ணன், வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ், போக்குவரத்து ஆய்வாளர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வந்தே பாரத் ரெயில் வருகையை முன்னிட்டு விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்பு படையினரும் ரெயில் நிலையத்தில் பாது காப்பு ஏற்பாடுகளை செய் திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com