search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில், காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
    X

    காமராஜர் சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மரியாதை செலுத்தினார்.

    நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில், காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

    • காமராஜர் சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் நெல்லை மேற்கு மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, வக்கீல் பிரிவு இணை செயலாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகி கள் சொக்கலிங்க குமார், ராஜேஷ் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா

    நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வெங்கடாஜலபதி, நாகராஜன், மேகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், இளை ஞர் அணி பிரபாகரன், ஜெட் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செய லாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொது செயலாளர் சுந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சரத் ஆனந்த், மாநில மாணவரணி துணை செய லாளர் நட்சத்திர வெற்றி, நெல்லை பகுதி செயலாளர் அழகேசராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    அ.ம.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை சத்யா தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையிலும், தமிழ் தேச தன்னுரிமைக் கட்சி சார்பில் நிறுவன தலைவர் வியனரசு தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் சேகர், தொழிற்சங்கம் மகேந்திரன், மாநகர செயலாளர் துரைப் பாண்டியன், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் துவரை மாரியப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென் மண்டல தலைவர் ராஜபாண்டியன் கலந்து கொண்டார். நிர்வாகிகள் பச்சையப்பன், லட்சுமி, நந்தினி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×