search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று பிறந்தநாளையொட்டி நெல்லையில் அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

    • தி.மு.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க.-அ.தி.மு.க.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அவை தலைவர் வி.கே.முருகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் துணை மேயர் ராஜு, பொருளாளர் வண்ணை சேகர், எல்ஐசி பேச்சிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு காசி மணி, சஞ்சய்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா, அமைப்புச் செயலா ளர் சுதா பரமசிவன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலா யுதம், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கர லிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், டவுன் கூட்டுறவு வங்கித் தலைவர் பால் கண்ணன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், காந்தி வெங்கடா சலம், சின்னதுரை, ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர், ஜெய்சன் புஷ்பராஜ், பாறையடி மணி, சீனி முகம்மது சேட், டால் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார். இதில் பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக் குழு உறுப்பினர் சொக்க லிங்க குமார், பொதுச் செயலாளர் மகேந்திர பாண்டியன், மண்டல தலைவர் ராஜேந்திரன், கெங்கராஜ், பரணி இசக்கி, அய்ப்பன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் தனசிங் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க.-ம.தி.மு.க.

    தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் அவைத்தலைவர் மாடசாமி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கொம்பையா பாண்டியன், துணைச் செயலாளர் சின்னத்துரை, நிர்வாகிகள் கலைவாணர், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட செய லாளர் சீயோன் தங்க ராஜ் தலைமையில் நிர்வா கிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.ம.மு.க.-ச.ம.க.

    அ.ம.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் பரமசிவன், மேற்கு மாவட்ட செயலாளர் ஆசீர், மாநில எம். ஜி. ஆர். மன்ற இணைச் செயலாளர் ஆவின் அன்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், தேர்தல் பிரிவு செயலாளர் குமரேசன், இளைஞர் அணி செயலாளர் மகேஷ் கண்ணன்,ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலா ளர் அழகேசன் தலைமை யிலும், தமிழர் உரிமை மீட்பு களம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலை மையிலும், புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செய லாளர் முத்தையா ராமர் தலைமையிலும், நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    நெல்லை மாவட்ட அரசு ஊழியர்கள் எஸ்.சி., எஸ்.டி. சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சின்னதுரை தலை மையில் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழர் விடுதலை களம் சார்பில் நிறுவன தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×