search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamaraj statue"

    • காமராஜர் சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் நெல்லை மேற்கு மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, வக்கீல் பிரிவு இணை செயலாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகி கள் சொக்கலிங்க குமார், ராஜேஷ் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா

    நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வெங்கடாஜலபதி, நாகராஜன், மேகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், இளை ஞர் அணி பிரபாகரன், ஜெட் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செய லாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொது செயலாளர் சுந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சரத் ஆனந்த், மாநில மாணவரணி துணை செய லாளர் நட்சத்திர வெற்றி, நெல்லை பகுதி செயலாளர் அழகேசராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    அ.ம.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை சத்யா தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையிலும், தமிழ் தேச தன்னுரிமைக் கட்சி சார்பில் நிறுவன தலைவர் வியனரசு தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் சேகர், தொழிற்சங்கம் மகேந்திரன், மாநகர செயலாளர் துரைப் பாண்டியன், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் துவரை மாரியப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென் மண்டல தலைவர் ராஜபாண்டியன் கலந்து கொண்டார். நிர்வாகிகள் பச்சையப்பன், லட்சுமி, நந்தினி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் தி.மு.க.வினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • அ.தி.மு.க. சார்பில் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமரா ஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி இன்று நெல்லையில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தி.மு.க.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் காமராஜர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் ஞானதிரவியம் எம்.பி., மூத்த முன்னோடி சுப சீதாராமன், மாநில நெச வாளர் அணி செயலா ளர் பெருமாள், மேயர் சரவணன், முன்னாள் எம்.பி.க்கள் விஜிலா சத்யா னந்த், வசந்தி முருகேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பா ளர் பொன்னையா பாண்டி யன், மாவட்ட துணை செய லாளர்கள் எஸ்.வி. சுரேஷ், தர்மன், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டி யன், பகுதி செயலாளர்கள் அண்டன் செல்லத்துரை, தச்சை சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, மாரியப்பன், கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர், வில்சன் மணித்துரை, மத்திய மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் முகமது மீரான் மைதீன், முன்னாள் மாவட்ட பொரு ளாளர் அருண் குமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் நவநீதன், பேட்டை பகுதி இளை ஞரணி மணிகண்டன்் மாநகர பிரதிநிதி சிவா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமையிலும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் அமைப்பு செய லாளர் சுதா பரமசிவன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், முன்னாள் எம்.பி. சவுந்தர் ராஜன்,

    மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட துணைச் செயலா ளர்் பாலமுருகன், பொதுக் குழு உறுப்பினர் கங்கை வசந்தி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், இளம் பெண்கள் பாசறை செயலாளர் முத்து பாண்டி யன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செ யலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக் குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிர மணியன், பகுதி செயலா ளர்கள் திருத்து சின்னதுரை, சிந்து முருகன், ஜெனி, சண்முககுமார், காந்தி வெங்கடாசலம், துணை செயலாளர் மாரிசன், கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், பாளை பகுதி மாணவரணி செயலா ளர் புஷ்பராஜ் ஜெய்சன், மாவட்ட பிரதி நிதி ஈஸ்வரி கிருஷ்ணன், வக்கீல் ஜெய பாலன், மேலப்பாளையம் பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் சீனி முகம்மது சேட், நிர்வாகி நத்தம் வெள்ளப்பாண்டி, வட்ட செயலாளர் பாறையடி மணி, மற்றும் பலர் கலந்து கொண்ட னர்..

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக சந்திப்பு ம.தி.தா. இந்து பள்ளி முன்புள்ள பாரதியார் சிலையில் இருந்து காமராஜர் சிலை வரை யிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தலை யில் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    இதில் தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் பொன் கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக் குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், சொக்கலிங்க குமார், பரணி இசக்கி, பொதுச்செயலாளர் மகேந்திர பாண்டியன்், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா

    நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொதுச் செய லாளர் முத்து பலவேசம், செயற்குழு உறுப்பினர் மகாராஜன், மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    நெல்லை மாவட்ட சிவாஜி மற்றும் பிரபு மன்றங்கள் சார்பில் நெல்லை மாவட்ட பிரபு மன்ற தலைவர் பாலசுந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

    இதேபோல் நாம் தமிழர் கட்சி மற்றும் நாடார் சமுதாய அமைப்புகள், இயக்கங்கள் சார்பில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தே.மு.தி.க.- சமத்துவ மக்கள் கட்சி

    நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செய லாளர் சண்முகவேல் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆனந்த மணி, கலைவாணன், பாலன் மற்றும் நிர்வாகிகள் ஆரோக்கிய அந்தோணி, ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் செங்குளம் கணேசன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நட்சத்திர வெற்றி முன்னிலையில் மாநில துணைப் பொதுச்செய லாளர் சுந்தர் காமராஜர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.

    இதில் பொருளாளர் சரத் ஆனந்த், துணைச்செயலா ளர்கள் வெங்கடேஷ், சின்னத்துரை, பகுதி செயலாளர் அழகேச ராஜா, ஒன்றிய செயலாளர் செல்வம், வர்த்தக அணி செயலாளர் மகாராஜா, தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் லட்சுமி, இந்திரா, இசக்கிமுத்து, சரத், சிவா, கமலக்கண்ணன், மைக்கேல் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர். மாநகர் மாவட்ட செயலாளர் துரை பாண்டியன், போக்குவரத்து கழக செயலாளர் மகேந்திரன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, பகுதி செயலாளர் முத்து, சங்கர், செல்வகுமார், ஒன்றிய செயலாளர் பரமசிவ பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சட்டமன்ற அலுவலகத்தில் காமராஜர் உருவ‌ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
    • மாணவ- மாணவிகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பதக்கங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மகாராஜா நகர் சட்டமன்ற அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின் காங்கிரஸ் கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    தொடர்ந்து நாங்குநேரி யூனியன், பருத்திபாடு ஊராட்சி, சுருளை கிராமத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

    அதன்பின்னர் மூலைக்கரைப்பட்டியில் காங்கிரஸ் கொடி ஏற்றி அங்கு நகர காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின் மக்கள் நீதி மையத்தின் சார்பில் மூலைக்கரைப்பட்டி ரீச் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.அதன்பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    தொடர்ந்து களக்காட்டில் பெருந்தலைவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சிலைக்கும் மலர் மாலை அணிவித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து களக்காடு தம்பிதோப்பில் களக்காடு நகராட்சி காங்கிரஸ் துணை காமராஜர் தலைமையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின் அனைவருக்கும் காலை உணவு வழங்கினார்.

    தொடர்ந்து களக்காடு யூனியன், ராஜபுதூரில் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் மாவட்ட வட்டார, நகர, கிராம கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    • காமராஜர் சிலைக்கு சங்க செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு சங்க செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள் எஸ்.கே.டி.பி. காமராஜ் நாடார், பி.ரகுநாதன் நாடார், எஸ்.இசக்கிமுத்து என்ற அசோகன் நாடார், எஸ். நித்திய பாலையா நாடார் மற்றும் சங்க ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது.

    • காமராஜர் ஆட்சி காலத்தில்தான் ஆரம்ப பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மிக அதிக அளவில் தொடங்கப்பட்டன.
    • அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    சென்னை:

    இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தராபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக பள்ளி கல்வித்துறை அலுவலக வளாகத்தில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பெயரை அலங்கார வளைவிற்கு வைப்பதும், வளாகத்தில் அவரது உருவ சிலை வைப்பதும் மட்டுமே மிகப்பொருத்தமாக இருக்கும். காமராஜர் ஆட்சி காலத்தில்தான் ஆரம்ப பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மிக அதிக அளவில் தொடங்கப்பட்டன. அது மட்டுமில்லாது அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த மிக முக்கியமான கோரிக்கையை ஆராய்ந்து, ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எஸ்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிலை அமைப்பு குழுத் தலைவர் எம்.எஸ்.காமராஜ். ஜான்ரவி தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் புதிய சிலையை வடிவமைப்பது குறித்தும், அதற்கு நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் காமராஜர் சிலை பராமரிப்புக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலங்குளம் எஸ்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிலை அமைப்பு குழுத் தலைவர் எம்.எஸ்.காமராஜ். ஜான்ரவி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அலெக்ஸ், பர்வீன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நெல்லை எம்.பி. ராமசுப்பு, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    கூட்டத்தில் புதிய சிலையை வடிவமைப்பது குறித்தும், அதற்கு நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சிலை அமைக்கும் பணிக்கு முதல் தவணையாக சிவபத்மநாதன் ரூ. 1 லட்சத்து ஆயிரத்தை நிர்வாகிகளிடம் அளித்தார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் அனைத்துக் கட்சி, அமைப்புகள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா
    • புதுவை அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று புதுவை அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    மேலும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் நேரு, ரமேஷ் ஆகியோரும் மாலை அணிவித்தனர். 

    புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தி–நாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ரகுமான் மற்றும் காங்கிரசார் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    முன்னதாக கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

    ×