search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் காமராஜர் சிலைக்கு தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
    X

    நெல்லையில் காமராஜர் சிலைக்கு தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

    • காமராஜர் சிலைக்கு சங்க செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு சங்க செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள் எஸ்.கே.டி.பி. காமராஜ் நாடார், பி.ரகுநாதன் நாடார், எஸ்.இசக்கிமுத்து என்ற அசோகன் நாடார், எஸ். நித்திய பாலையா நாடார் மற்றும் சங்க ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது.

    Next Story
    ×