search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்சாக வரவேற்பு"

    • 'முத்தமிழ்த்தேர்' பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    • நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் எழுத்தாளர்-கலைஞர் குழு சார்பில் 'முத்தமிழ்த்தேர்' அலங்கார ஊர்தி பயணம் கடந்த 4-ம்தேதி முதல் வருகிற டிசம்பர் 5-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    'முத்தமிழ்த்தேர்' பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில், இன்றைய இளம் தலைமுறையினருக்கு கருணாநிதி பன்முகத் தன்மையினை எடுத்துச் செல்லும் வகையில், "எழுத்தாளர் கலைஞர் குழுவின்" மூலம் தயார் செய்யப்பட்ட, அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர் - அலங்கார ஊர்தி", நேற்று காங்கயம் பஸ் நிலையத்திற்கு வருகை புரிந்தது.

    அப்போது காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் காங்கயம் தாசில்தார் மயில்சாமி, நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் நகராட்சி ஆணையர் கனிராஜ், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரிமுருகானந்தன், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், காங்கயம் நகர துணைச் செயலாளர் சுப்பிரமணி, நகராட்சி துணைத் தலைவர் கமலவேணி ரத்தினகுமார், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி நேற்று இரவு காங்கயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை ஈரோடு செல்கிறது.

    • வந்தேபாரத் ரெயிலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
    • விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    விருதுநகர்

    இந்திய ரெயில்வேயில் அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 9 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    அந்த வகையில் தென் மாவட்ட மக்களின் அதிக எதிர்பார்ப்பாக இருந்த இந்த ரெயில் நேற்று நெல் லையில் இருந்து சென் னைக்கு புறப்பட்டது.

    நேற்று மதியம் 12.30 மணியளவில் நெல்லையில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 2.18 மணிக்கு வந்தது. இந்த ரெயிலில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன், மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் நயினார் நாகேந்தி ரன் எம்.எல்.ஏ., துரை கோட்ட ரெயில்வே ேமலா ளர் ஆனந்த பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்தனர்.

    வந்தேபாரத் ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத் தில் நுழைந்தவுடன் அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்களும் கைதட்டி ரெயிலை வர வேற்றனர்.

    இதனை தொடர்ந்து விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டு ரெங்கன் ரெயிலில் வந்த கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய இணை மந் திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சி பிரமுகர்க ளுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த வர வேற்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். அதே போல ரெயில் நிலைய அதிகாரி கண்ணன், வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ், போக்குவரத்து ஆய்வாளர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வந்தே பாரத் ரெயில் வருகையை முன்னிட்டு விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்பு படையினரும் ரெயில் நிலையத்தில் பாது காப்பு ஏற்பாடுகளை செய் திருந்தனர்.

    • மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்பத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச் செய லாளராக எடப்பாடி பழனி சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் மதுரையில் தமிழ் நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் பிரமாண்ட பொன்விழா எழுச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன் னேற்பாடு பணிகளை பார் வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து பணிகளை முடுக்கி விட்டார்.

    அனைத்து மாவட்டங்க–ளில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் வந்து மாநாட்டில் பங்கேற்று விட்டு, பத்திரமாக ஊர் திரும்பும் வகையில் மேற்கொள்ளப் பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோச னைக ளை யும் அவர் வழங்கினார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வில் மாநில மாநாடு நடைபெறுவதால் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் மாநாட்டில் திரண்டுள்ளனர்.

    மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக சேலத்தில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து காரில் மதுரை வருகை தந்தார். அவருக்கு கப்பலூர் தியாக ராஜர் மில் அருகே மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை கிழக்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகி–யோர் பூங்கொத்து கொடுத்து தொண்டர்கள் புடைசூழ எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து பெண்கள் பூரண கும்ப மரியா தை கொடுத்தும், பல்வேறு கோவில்களில் இருந்து பிரசாதங்கள் சிவாச் சாரியார் வழங்கியும் வர வேற்றனர். தொடர்ந்து மேள தாளங்கள், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர் இரட்டை விரலை காண்பித் தபடி சென்றார். மாநாடு திடலை கடக்கும்போது ஏராளமான தொண்டர்கள் விண்ணதிர கோஷம் எழுப் பினர். பின்னர் அவர் ரிங் ரோடு அருகே உள்ள தனியார் ஓட்டலில் இரவில் தங்கினார். இன்று காலை மாநாட்டில் கலந்து கொண்டார்.

    • ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • திருப்புல்லானி ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதில் திருப்புல்லானி ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திர மாலா, துணைத்தலைவர் தாஹிராபீவி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் காளீஸ்வரி, தினேஷ்குமார், செல்வி, ரவிச்சந்திரன், நாகராஜ், திருப்புல்லானி ஊராட்சி ஒன்றிய தலைவர் புல்லாணி, துணை தலைவர் சிவலிங்கம், ஒன்றிய உறுப்பினர்கள் சரளாதேவி, ரஞ்சனி, பிரேமா, முனியாயி, சுமதி, நாகநாதன், பைரோஸ்கான், கமலா, கலாராணி, கோவிந்த மூர்த்தி, கருத்த முத்து, திருமுருகன், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், ரெகுநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோபால கிருஷ்ணன், துணை தலைவர் ஜெகத் ரட்சகன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆதித்தன், ஒன்றிய கவுன்சிலர் நாக நாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்ண ப்பன், கவிதா, சிவகாமி, கர்ண பூபதி, கமாலியா பேகம், மணிமேகலை, சாமிநாதன், திலீப்குமார், பெரிய பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான்பீவி, துணை தலைவர் பிரோஸ்கான், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகப்ரியா ராஜேஷ்குமார், துணை தலைவர் கண்ணகி ஜெகதீசன், தேரிருவேலி ஊராட்சி மன்ற தலைவர் அபுபக்கர் சித்திக், துணை தலைவர் கலாதேவி சேதுராமு, வார்டு உறுப் பினர்கள் மேக வர்ணம், மருதுபாண்டியன், முத்துச்சாமி, ஞானசவுந்தரி, ராமர் செல்வி, கீதா, முருகேசன், சாந்தி, நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், துணை தலைவர் சண்முகராஜா, வார்டு உறுப்பினர்கள் பெருமாள், வள்ளி, சித்ரா தேவி, மல்லிகா, கார்த்திகா, சாந்தி, சிங்கராஜா, லெபன், தமிழரசன், அஸ்மா பேகம், செல்வராஜ்,

    முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், துணை தலைவர் வயணப் பெருமாள், வார்டு உறுப்பினர்கள் பார்வதி, மாரியம்மாள், மீனாள், கருப்பணன், மோகன் தாஸ், நாகூர் மீரா, பாலுச்சாமி, சேகர், தனலட்சுமி, யுவ பிரியா, உம்முதர்தா, ஹிதா யத்துல் பானு, சுந்தரம்மாள், கொத்தங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணைத் தலைவர் வெங்கட சாமி, வார்டு உறுப்பினர்கள் பார்வதி, மும்தாஜ் பேகம், முத்துச்சாமி, கார்த்திக் ராஜா, ராஜா மேகலா, இந்திரா, மங்களேஸ்வரி, சுந்தரம்,

    இதம்பாடல் ஊராட்சி மன்ற தலைவர் மங்கலசாமி, துணை தலைவர் தெய்வக்கனி, வார்டு உறுப்பினர்கள் கவுதமன், கனகசபாபதி, கவிதா, தங்கராஜ், மோகன்தாஸ், ஜரினா பீவி, சுலைகா பேகம், முனீஸ்வரி, அச்சுந்தன் வயல் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா லிங்கம், துணை தலைவர் மரகதம், ஊராட்சி உறுப்பினர்கள் சித்ரா, ஜெயசித்ரா தேவி, இந்துமதி, அர்ஜூனன், சேதுமணி, காக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் (சகோ) ஜெயமணி, வார்டு உறுப்பினர்கள் சிவகுருநாதன், பெனாசீர் தான், மகமத் பேகம், ஒச்சம்மை, குணபாலன், தாய்லட்சுமி, சாந்தி, மரிய செல்வம், ஜெயமுருகன், குமாரக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், துணை தலைவர் விஜயநாதன், வார்டு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, ஜெ.ராஜேஸ்வரி, நாகஜோதி, காந்தியம்மாள், கிருஷ்ணன், சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் யாழினி புஷ்பவல்லி, துணை தலைவர் ராமலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் முத்துமாரி, அரியநாயகம், நல்ல தம்பி, கணேசன், தர்ம வள்ளி, பாஸ்கர சேதுபதி, கோமதி, முத்துலட்சுமி, முத்துக்குமார், மஞ்சுளா, பாத்திமுத்து, சீனி செய்யதம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்றனர்.

    • கொங்கல்நகரம் கிராமத்தைச்சேர்ந்த நகுல்நந்தன் விளையாடிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • சொந்த கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    உடுமலை:

    மத்திய அரசு சார்பில், ஹரியானா மாநிலத்தில், தேசிய அளவில்இளைஞர்களுக்கான, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்தது.இதில் தமிழக வாலிபால் போட்டியில் தமிழக அணி இறுதிப்போட்டியில், ஹரியானா மாநில அணியை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

    இதில் தமிழக அணிக்காககுடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம் கிராமத்தைச்சேர்ந்த நகுல்நந்தன் விளையாடிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தமிழக அணிக்காக போட்டியில் பங்கேற்று திரும்பிய அவருக்கு சொந்த கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கொங்கல்நகரம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சித்தலைவர் விஸ்வநாதன் மற்றும் பாசன சபை தலைவர் நாகராஜன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று நகுல்நந்தனுக்கு பாராட்டு தெரிவித்தனர். கிராம பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து மகிழ்ந்தனர்.

    ×