search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவல்கிணற்றில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
    X

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் வரவேற்ற காட்சி.

    காவல்கிணற்றில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

    • இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்
    • உதயநிதி ஸ்டா லின் எம்.எல்.ஏ. விற்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை வழங்கினார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம். எல்.ஏ. சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்தார்.

    நேற்று இரவு அங்கு தங்கிய அவர் இன்று காலை காரில் புறப்பட்டு குமரி மாவட்டம் வந்தார். உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு குமரி மாவட்ட எல்லையான காவல்கிணற்றில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வை வரவேற்றார்.

    கிழக்கு மாவட்ட செயலா ளரும், நாகர்கோவில் மாநக ராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உதயநிதி ஸ்டா லின் எம்.எல்.ஏ. விற்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை வழங்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்று கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். இரு சக்கர வாக னத்தில் நிர்வாகிகள் முன் செல்ல உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அழைத்து வரப்பட்டார்.

    20 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரை தி.மு.க. நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் எழுச்சிமிகு வரவேற்புடன் அழைத்து வந்தது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, சதாசிவம், துணைச்செயலாளர் பூதலிங்கம், மாநகரச் செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் பாபு, சுரேந்திர குமார்.

    இளைஞர் அணி துணை அமைப்பாளர் எட்பெர்க், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜெகன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் சிவ பெருமான், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என். சங்கர், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர்,மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கராஜா, சுப்பிரமணியம்,அமல செல்வன், கன்னியாகுமரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், குமரி மாவட்ட தலைவர் டேவிட்சன், முன்னாள் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நசரேத் பசிலியான், ஸ்டாலின் பிரகாஷ், குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் சுஜின் ஜெகேஷ், குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், நகர செயலாளர் நாகூர்கான், மணவாளக்குறிச்சி தி.மு.க. பேரூர் செயலாளர் பாம்பே கண்ணன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் ஜூடுசேம், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், திருவட்டாா ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் ஐ.ஜி.பி. ஜாண்கிறிஸ்டோபர், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பிரிட்டோசேம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×