என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "decorative vehicle"

    • நாட்டின் 77-வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
    • கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காதது சர்ச்சையானது.

    நாட்டின் 77-வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், குடியரசு தினவிழா அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம் பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காதது சர்ச்சையான நிலையில் இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    குடியரசு தினவிழா அணி வகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் பசுமை மின்சக்தி என்ற தலைப்பில் அலங்கார ஊர்தி பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    • 'முத்தமிழ்த்தேர்' பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    • நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் எழுத்தாளர்-கலைஞர் குழு சார்பில் 'முத்தமிழ்த்தேர்' அலங்கார ஊர்தி பயணம் கடந்த 4-ம்தேதி முதல் வருகிற டிசம்பர் 5-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    'முத்தமிழ்த்தேர்' பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில், இன்றைய இளம் தலைமுறையினருக்கு கருணாநிதி பன்முகத் தன்மையினை எடுத்துச் செல்லும் வகையில், "எழுத்தாளர் கலைஞர் குழுவின்" மூலம் தயார் செய்யப்பட்ட, அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர் - அலங்கார ஊர்தி", நேற்று காங்கயம் பஸ் நிலையத்திற்கு வருகை புரிந்தது.

    அப்போது காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் காங்கயம் தாசில்தார் மயில்சாமி, நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் நகராட்சி ஆணையர் கனிராஜ், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரிமுருகானந்தன், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், காங்கயம் நகர துணைச் செயலாளர் சுப்பிரமணி, நகராட்சி துணைத் தலைவர் கமலவேணி ரத்தினகுமார், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி நேற்று இரவு காங்கயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை ஈரோடு செல்கிறது.

    ×