search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் அரசியல் கட்சிகள்
    X

    கோப்புபடம். 

    பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் அரசியல் கட்சிகள்

    • பா.ஜ.க, வை பொறுத்தவரை 9 தொகுதிகளை தேர்வு செய்து, கடந்த 2 ஆண்டாகவே களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
    • 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது.

    திருப்பூர்:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.மாநிலத்தில் தி.மு.க., -அதி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட தொடங்கி உள்ளன. பா.ஜ.க, வை பொறுத்தவரை 9 தொகுதிகளை தேர்வு செய்து, கடந்த 2 ஆண்டாகவே களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களையே அடையாளம் காட்டி விட்டது. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க, 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது.

    இதற்காக வாக்காளர் பட்டியலில், துல்லியத் தன்மை கொண்டு வரும் நோக்கில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, பெயரில் உள்ள பிழைகளை சரி செய்ய, முகவரி மாற்றம் செய்வதற்கென சிறப்பு முகாம் அடுத்த மாதம் 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நடத்தப்பட இருக்கிறது.

    இதற்கு திருப்பூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் தயாராகியுள்ளன. முகாம்களில் கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகளில் முழு அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தி.மு.க., தலைமை நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதே போன்று பிற கட்சிகளும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன.

    Next Story
    ×