search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voter card"

    • இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
    • 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர்.

    தாராபுரம் :

    வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு தொடங்கியது.

    'Voter Help Line' செயலி, nvsp.in என்கிற தேர்தல் கமிஷன் இணையதளம் வாயிலாக ஆதார் எண் இணைக்க வழிவகை செய்யப்பட்டது. வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்றபோது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விவரங்களை பெற்றனர். ஆதார் இணைப்புக்கு இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர். இவர்களில் இதுவரை 55.84 சதவீதம் பேர் அதாவது 12 லட்சத்து 90 ஆயிரத்து 837 பேர் மட்டுமே ஆதார் எண் இணைத்துள்ளனர்.வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் 36.13 சதவீதத்துடன் திருப்பூர் வடக்கு தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 3.84 லட்சம் பேரில் 1.38 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர். பல்லடம் தொகுதியில் 52.13 சதவீதம் பேர், திருப்பூர் தெற்கில் 53.80 சதவீதம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். ஆதார் இணைப்பு விகிதத்தில் மடத்துக்குளம், உடுமலை தொகுதிகள் முந்துகின்றன.

    2.29 லட்சம் வாக்காளரில் 1.58 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதனால் 69.04 சதவீதத்துடன் ஆதார் இணைப்பில் மடத்துக்குளம் முன்னிலை வகிக்கிறது. உடுமலையில் 63.21 சதவீதம், தாராபுரத்தில் 62.68,அவிநாசியில் 61.47, காங்கயத்தில் 60.76 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.போலிகளை களைந்து செம்மையான வாக்காளர் பட்டியல் உருவாக வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு மிகவும் அவசியமாகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் மொத்த வாக்காளரில் 44 சதவீதம் அதாவது 10.20 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண் இணைக்கவி ல்லை. தேர்தல் கமிஷன், ஆதார் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி 100 சதவீத ஆதார் இணைப்பை எட்ட செய்யவேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக இணைப்பையும் மேற்கொள்கின்றனர்.
    • வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்ணையும், மார்ச் 31-ந் தேதிக்குள் இணைத்துவிட வேண்டும்.

    திருப்பூர் :

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இதற்காக 6பி என்ற படிவத்தை அறிமுகம் செய்துள்ள தேர்தல் ஆணையம், வீடு வீடாக வாக்காளர் பதிவு அலுவலரை அனுப்பி விவரங்களை பெற்று வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் வீதம் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது இவர்களே வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக இணைப்பையும் மேற்கொள்கின்றனர்.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- பலரும் வங்கிக்கணக்கு, ஆதார் எண் இணைப்பது என தவறான புரிதலில் உள்ளனர்.சில வீடுகளில், எல்லாரும் வேலைக்கு போய்ட்டாங்க என்றும் கூறுகின்றனர்.எவ்வளவு பிரச்னை என்றாலும், வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்ணையும், மார்ச் 31-ந் தேதி 2023க்குள் இணைத்துவிட வேண்டும். பள்ளி வேலைநாட்களில் சுழற்சி முறையில் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறைந்தது 800 முதல் 1500 பேருக்கு மேல் இணைக்க வேண்டி வரும்.இந்நிலையில், பாடக்குறிப்பேட்டை தயார் செய்ய வேண்டும். காலாண்டு தேர்வுக்கான பாடம் நடத்த வேண்டும். ஓராசிரியர், இரண்டு ஆசிரியர் மட்டுமே இருக்கும் பள்ளிகளில் சுழற்சி முறையில் மாற்று ஆசிரியர் கற்பிக்கவும் வழியில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆம்ஆத்மி கட்சி மாநிலசெயலாளர் ரவி சீனிவாசன், மக்கள் வாழ்வுரிமை இயக்க மாநில செயலாளர் ஜெகன்நாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளது.
    • புதுவை வாக்குச்சாவடிகளில், தமிழகம்-ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் வாக்காளர்களாகவும், நலத்திட்ட பயனாளிகளாகவும் உள்ளனர்.

    புதுச்சேரி:

    ஆம்ஆத்மி கட்சி மாநிலசெயலாளர் ரவி சீனிவாசன், மக்கள் வாழ்வுரிமை இயக்க மாநில செயலாளர் ஜெகன்நாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வாக்குச்சா–வடிகளில், தமிழகம்-ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் வாக்காளர்களாகவும், நலத்திட்ட பயனா–ளிகளாகவும் உள்ளனர்.

    இவர்கள் வாக்களிப்பது, அரசின் பண பலன்களை 2 இடங்களில் பெறுவது சட்டவிரோதம். மாநில தேர்தல் ஆணையம், ஆதார் அட்டையுடன், வாக்காளர் அட்டையை இணைத்திட வேண்டும். இதனால் ஜனநாயக குளறுபடிகள் நீக்கப்படு–வதுடன், நலத்திட்டங்களின் பணப்பலன்கள் வீண் விரையம் ஆகாமல் தடுக்கப்படும். அரசு துறைகளில் நிதி வீணாவது தடுக்கப்படும்.

    அரசு கடும் நிதி நெருக்க–டியிலிருந்து குறைந்தபட்சம் மீள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எனவே மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைத்திட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
    • ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை.

    சென்னை:

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரிசெய்யும் நோக்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தர வேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில் ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் ஆவடி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வீடு வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், '6பி' படிவத்தை அளித்து, அதில் விவரங்களை பதிவு செய்வதுடன், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை கேட்பதாகவும், ஒரு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தனித்தனி செல்போன் எண்ணை கட்டாயம் தரவேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் புகார் எழுந்தது.

    இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

    நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி ஆதார் இணைப்பு பணிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் இதுவரை 97 லட்சம் பேர் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்துள்ளனர். வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் பொதுமக்கள் "6பி" படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை.

    அதேபோல, தேசிய வாக்காளர் சேவை அமைப்பான 'என்.வி.எஸ்.பி. போர்ட்டல்' (https://www.nvsp.in ), வாக்காளர் சேவை எண் '1950' போன்றவற்றின் மூலமாகவும் வாக்காளர்கள் இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.

    '6பி' படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களின்படி செல்போன் எண்ணை அளிக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த எண்ணை மட்டுமே கொடுத்தால் போதும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வழங்கப்படும் 6 முதல் 8 வரையிலான படிவங்களுக்கு வழக்கமாக ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதை பயன்படுத்தி, விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

    ஆனால், ஆதார் இணைப்புக்கான '6பி' படிவத்துக்கு ஒப்புகைச் சீட்டு தரப்படுவது இல்லை. ஒப்புகைச்சீட்டு தராவிட்டால், ஆதார் இணைப்பு குறித்த நிலையை எப்படி அறியமுடியும் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்ற படிவம்போல, ஆதார் இணைப்புக்கும் ஒப்புகைச் சீட்டு தரவேண்டும் என்று கோரியுள்ளனர்.

    • அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை படிவம் 6- பி மூலம் பெற வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் விவரம் தெரிவிக்க இயலாதவர்கள் ஆதார் அட்டை விவரங்களை http://www.nvsp.in என்ற இணையதளத்தில் தாங்களே வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

    நெல்லை:

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை,அம்பாசமுத்திரம், பாளை, நாங்குநேரி மற்றும் ராதபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆதார் விபரம்

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் வீடு, வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம் 6 பி-யில் வாக்காளர்களின் விருப்பத்தின் பேரில் பெற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை படிவம் 6- பி மூலம் பெற வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாக்காளர்கள் இந்த அலுவலர்களிடம் ஆதார் அட்டை விவரங்களை தெரிவித்து ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் பி-யில் குறிப்பிட்டுள்ள வருமான வரி அட்டை

    ( பான்கார்டு) உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவண விவரத்தை தெரிவித்து அதனை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கலாம்.

    ஆன்லைன் பதிவு

    வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் விவரம் தெரிவிக்க இயலாதவர்கள் ஆதார் அட்டை விவரங்களை http://www.nvsp.in என்ற இணையதளத்தில் தாங்களே வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

    இந்த பணியினை சிறந்த முறையில் நிறைவேற்றிட நெல்லை மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தல்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், நகராட்சி பகுதி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • செங்கோட்டை நகராட்சிக்கு ட்பட்ட 3,4-வது வார்டு பகுதி வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணிகள் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்ட பணிகள் வாஞ்சிநாதன் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    செங்கோட்டை:

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தல்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், நகராட்சி பகுதி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தந்த பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்திலோ உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆதார் எண்ணை இணைத்து ெகாள்ளலாம் என அறிவிப்பு வெளியானது.

    இதையொட்டி செங்கோட்டை நகராட்சிக்கு ட்பட்ட 3,4-வது வார்டு பகுதி வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணிகள் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்ட பணிகள் வாஞ்சிநாதன் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினர்கள் சுடரொளி ராமதாஸ், ஜெகநாதன் ஆகியோர் ஆதார் எண் இணைப்பு பணிகளை செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
    • வாக்காளர் உதவி செயலி (Voters helpline App) வாயிலாகவோ வாக்காளர் பட்டியிலுள்ள விபரங்களுடன் இணைக்கலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், பெரிய பேராலி சாலையில் உள்ள குலோபல் பாலிபேக்ஸில் வாக்காளரது விபரங்களுடன் ஆதார் எண்ணைப் பெற்று இணைக்கும் பணி நடந்தது. இதை கலெக்டர் மேகநாத ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்குதல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிபடுத்துதல், ஒரு நபரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்த்தல், சிறப்பான வாக்காளர் சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தங்களின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்தும் அவர்களது ஆதார் எண்ணைப் பெற்று வாக்காளரது விபரங்களுடன் இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கிநடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் தாங்களாகவே ஆதார் எண்ணை https://www.nvsp.in/என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்காளர் உதவி செயலி (Voters helpline App) வாயிலாகவோ வாக்காளர் பட்டியிலுள்ள விபரங்களுடன் இணைக்கலாம்.

    மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று படிவம்-6பி –ல் வாக்காளர்களது ஆதார் எண்ணை பெற்று இணைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.

    வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் எண் பொது வெளியில் எக்காரணம் கொண்டும் காட்சிப்படுத்தப்ப–டமாட்டாது.

    ஆதார் விபரங்கள் ஆதார் ஆணையத்தின் உரிமம் பெற்ற சேமிப்பகத்தில் மட்டுமே சேமிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக படிவம்- 6பி–ல் தங்களது ஆதார் விபரத்தினை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து தூய்மையான, வாக்காளர் பட்டியலினை தயார் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், விருதுநகர் வட்டாட்சியர் செந்தில்வேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
    • வாக்காளர்கள் இணையதளத்தில் மற்றும் செயலி மூலமாக தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் ஆணையம் வருகிற 31-3-2023-க்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் விவரங்களுடன் ஆதார் எண் விவரங்களை இணைக்க வழிவகை செய்துள்ளது. வாக்காளர்களின் விருப்பத்தின்படி ஆதார் எண் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலமாக ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரெ தொகுதிக்குள், ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியில் இடம்பெறாமல் தவிர்க்க முடியும். வாக்காளர்கள் இணையதளத்தில் NVSP மற்றும் voter portal மூலமாகவும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம். மாறாக வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆதார் எண் இணைப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கலாம்.

    இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் இணைப்பு தொடர்பாக படிவம் 6B என்ற விண்ணப்ப படிவத்தை அறிமுகம் செய்துள்ளது. சிறப்பு முகாமில் படிவம் 6B யை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை இணைத்து விண்ணப்பிக்கலாம். ஆதார் எண் இல்லாதவர்கள் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி, அஞ்சலக புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட அட்டை, கடவுசீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, சமூக நலத்துறையினரால் வழங்கப்பட்ட தனி அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ, இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை இணைக்கலாம். இந்த தகவலை தெற்கு தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரான மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். 

    • பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று போட்டோவுடன் கட்டாயமாக இருக்க வேண்டும்.
    • ஒரிஜினல் கொண்டு வரவும் சரி பார்த்து விட்டு திரும்பி தரப்படும்.

    பூதலூர் :

    தஞ்சாவூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் திருச்செனம்பூண்டி தியாக இளவரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    48-வது இளையோர் சிறுமியர்களுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 5.8.2022 முதல் 7.8.2022 வரை திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

    இதில் பங்குகொள்ளும் இளையோர், சிறுமியரின் வயது 4.9.2022 அன்றோ (அல்லது) அதற்கு பின்போ 20 வயதிற்குள் இருக்க வேண்டும். எடை 65 கிலோ அல்லது அதற்குள் இருக்க வேண்டும். அதேபோல, இளையோருக்கான 48-வது தமிழ்நாடு மாநில அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டி 19.8.2022 முதல் 21.8.2022 வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறுகிறது.

    இதில் பங்குகொள்ளும் இளையோர் சிறுவர்களுக்கான வயது 20.11.2022 அன்றோ (அல்லது) அதற்கு பின்போ 20 வயதிற்குள் இருக்க வேண்டும். எடை 70 கிலோ அல்லது அதற்குள் இருக்க வேண்டும்.

    இப்போட்டிகளுக்கான தஞ்சை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் சிறுவர், சிறுமியர் ஆதார் கார்டு, பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று போட்டோவுடன் கட்டாயமாக இருக்க வேண்டும்.

    இவைகளில் ஒன்று ஒரிஜினல் கொண்டு வரவும் சரி பார்த்து விட்டு திரும்பி தரப்படும். போனபைட் சான்றிதழ் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    போலி வாக்காளர்களை களைய ஆதாருடன், வாக்காளர் அட்டையை இணைக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. #Aadharcard #votercard #chennaihighcourt

    சென்னை:

    போலி வாக்காளர்களை களையும் வகையிலும், தேர்தல் முறைகேடுகளை தடுக்கவும் வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைக்க உத்தரவிட வேண்டும்.

    ஆதார் அட்டையை இணைக்கும் வரை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. சமீபத்திய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு பிறகு அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. அதேநேரம், இது சம்பந்தமாக மத்திய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்’ என்று கூறினார்.

    இதையடுத்து இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை மத்திய அரசும், ஆதார் ஆணையமும் 3 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #Aadharcard #votercard #chennaihighcourt 

    ×